இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில்

சிவபெருமானை நோக்கி லிங்க வழிபாடு செய்து கடும் தவம் இருந்த ஞானிகளையும் முனிவர்களையும் அறிவோம்.ஆனால் சிவனே ஒரு இடத்தில் லிங்க வழிபாடு செய்தார் என்றால் அது இந்த புண்ணிய திருதலத்தில் மட்டும்தான். இம்மை என்றால் `இப்பிறவி' என்று பொருள். இந்த பிறவியிலேயே நன்மைகள் அருள்வதால் அவருக்கு அந்தப் பெயர் ஏற்பட்டது. கருவறையில் சிவனும், மத்தியபுரிநாயகி (மீனாட்சி) அம்மனும் ஒரே பீடத்தில் அமர்ந்திருக்க, அவர்கள் முன்னால் சிவலிங்கம் இருக்கிறது. இவர்கள் லிங்க பூஜை செய்வதாக ஐதீகம். ஒருமுறை சக்தியும், சிவனும் மானிட வடிவெடுத்து மீனாட்சியாகவும், சுந்தரேஸ் வரராகவும் மதுரை நகரின் ஆட்சிப்பொறுப்பை  ஏறறு நடத்தி வந்தனர், பட்டாபிஷேகம் நடக்கும் முன், இறைவனை வழிபட எண்ணினர். சிவன் மானிடப்பிறவியாக வந்து விட்டதால், லிங்க பூஜையின் மகிமையை உலகுக்கு வெளிப்படுத்தும் விதத்தில், தனக்குத்தானே பூஜை செய்வதற்காக லிங்கம் ஒன்றை வடித்தார். அந்த லிங்கமே இக்கோவிலில் உள்ள சிவலிங்கம  என்கிறார்கள்.விழாகாலத்தில் காலை பூசையின் போது சிவனுக்கு தோசையை நைவேத்தியமாக படைக்கிறார்கள்.பொதுவாக நாம்   எந்தக் கோயிலுக்கு போனாலும் சிவலிங்கத்தின் முன்பகுதியையே தரிசிப்போம்.  ஆனால், இந்தக் கோயிலில் மட்டும் லிங்கத்தின் பின்புற தரிசனம் நமக்கு கிடைக்கிறது. இதற்கு காரணம், மேற்கு நோக்கி அமர்ந்து சிவபூஜை செய்ய வேண்டுமென்பது நியதி. எனவே இங்கு சிவன் அம்பாளுடன் மேற்கு நோக்கி அமர்ந்து லிங்க பூஜை செய்கிறார். எனவே, லிங்கத்தின் முன்பகுதி அவர்களை நோக்கி இருக்கிறது. பக்தர்களுக்கு பின்புற தரிசனம் கிடைக்கிறது. மீனாட்சியம்மன் கோயிலில் சிவனுக்கு பட்டாபிஷேகம் நடக்கும் முன்பு, சிவன், அம்பாள் இருவரும் இங்கு எழுந்தருளுவார்கள். இவ்விருவரையும் மூலஸ்தானத்தை நோக்கி வைத்து வணங்கப்படுகிறது., இம்மையிலும் நன்மை தருவார், சுந்தரேஸ்வரர், மீனாட்சி மூவருக்கும் ஒரே சமயத்தில் தீபாராதனை, பூஜை நடக்கும். இந்த பூஜையை சிவனே செய்வதாக ஐதீகம்.
இக்கோவில் மதுரை நகரின் மத்திய பகுதியான் பெரியார் பேருந்து நிலையத்திற்கும் மீனாட்சியம்மன் திருக்கோவிலுக்கும் இடையில் அமைந்துள்ளது 

தேரிகுடியிருப்பு அருள்மிகு கற்குவேல் அய்யனார் கோவில்

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரிலிருந்து 13 கிலோமீட்டரில் உள்ளது காயாமொழி என்னும் ஊர். அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் குதிரைமொழி என்னும் ஊர் உள்ளது. அந்த ஊரருகில் கற்குவேல் அய்யனார்,  பூரணா, புஷ்கலா ஆகிய இரு தேவியரோடு கோவில் கொண்டுள்ளார்
 இங்கு மேலும் பேச்சியம்மன், பெரியாண்டவர், சுடலை மாடன், கருப்பன், பட்டவராயன், வன்னிய ராஜா, பலவேசக்காரன், முன்னடியான், பின்னடியான், தளவை நல்ல மாடசாமி, உதிர மாடன், ஐவர் ராஜா, பிரம்ம சக்தி, இசக்கியம்மன், சங்கிலி மாடன், பகைடைச் சாமி, சொல்கேளா வீரன், சிவனனைந்த பெருமாள், நாகரிக சிவனனைந்த பெருமாள், செருக்கன், சூர்யர் பீடம், இலாட சன்னியாசி,ஆளியப்பர், பொங்கத்த அய்யனார் முதலிய பரிவாரத் தெய்வங்களும் எழுந்தருளி மக்களுக்கு அருள்மழை பொழிந்து வருகின்றனர்.



செம்மணல் பாலைவனம்


கற்குவேல் அய்யனார் கோயிலின் பின்புறம்  அரணாக அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செம்மண் குன்றுகள் அமைந்திருப்பது கண்கொள்ளாக் காட்சி.

பாதக்கரை சாமி நாலுமாவடி


 மேல் கூரை மண்டபம்
 பூஜை நேரத்தில் முழங்கப்படும் வாத்தியம்

 விநாயகர், சிவன், பார்வதி, முருகன்
 காவல்கார சாமி
 பாதக்கரை சுவாமி
 நாராயணர்



 சிவனனைந்த சாமி






 காலதேவன் ( காலபைரவர் )




அருள் தரும் பாதகரை சுவாமி கோவிலில், பாதகரை  சுவாமி, பாதாள் வடிவுடையம்மன், பார்வதி, பரமசிவன், வினாயகர், முருகன், வள்ளி, தெய்வயானை, பலவேசமுத்து, பட்டாணிசாமி, மூம்மூர்த்தி, கிருஷ்ணர், முத்துபேச்சி அம்மன், முப்பிடாரி அம்மன், பத்திரகாளி அம்மன், சுடலைமடசுவாமி, இசக்கிஅம்மன், பேச்சி அம்மன், மாசான் பேச்சி, காலதேவன்   தெய்வங்களும் வைக்கப்பட்டு  வணங்கப்பட்டு வருவது    சிறப்பானதாகும். பாதக்கரை சாமி பற்றி மேலும் அறிந்துகொள்ள http://iynthuveetuswamy.blogspot.in/சென்று பார்வையிடவும்