வாகனம் ஓட்டும் போது



வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலருக்கு  சாலைகளில் இடம் பெற்றுள்ள சிக்னல்கள் பற்றி அறிந்திருப்பதில்லை. அறியாதவர்கள் அறிந்து கொள்ளுங்கள்


1. பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றமாகும்.

2. சாதாரண நேரங்களில் வாகனத்தின் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு. 

அபாயகரமாக அல்லது வாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோதான் எரியவிட வேண்டும்.

3. சிக்னல் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது, அனைத்து விளக்குகளையும் எரியவிடக் கூடாது.

4. ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டு விட்டு போட்டிருந்தால், முன் செல்லும் ஒரு வாகனத்தை  இந்த இடத்தில் நாம் முந்திச் செல்லலாம் என்று பொருள்.
அதேசமயம் தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று அர்த்தம் 

5. ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக் கோடுகள் போட்டிருந்தால், அதை ஒரு தடுப்புச் சுவராக கருதி அதைகடந்து செல்லக்கூடாது.

6. ஓட்டுனருக்கு 20.5 மீ (67 அடி) தொலைவில் இருந்து வரும் வாகனத்தின் பதிவு எண்ணை படிக்க முடிந்தால், கண்கள் நல்ல பார்வையுடன் உள்ளது என பொருள். 

எனவே, ஆண்டுக்கு ஒருமுறை ரத்த அழுத்தம், சர்க்கரை, கண் பரிசோதனை செய்வது நல்லது.

 7. கனகர வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிற முக்கோண வடிவச் சின்னம் வைப்பது  முற்றிலும் தவறு.மோட்டார் வாகன சட்டப்படி, அது ஒரு  எச்சரிக்கை  சின்னமாகும்,
 ரோட்டில் ஒரு வாகனம் பழுதாகி நின்றாலோ, அவசர நிலையிலோ அதை வாகனத்தின்  பின்புறம் 15 அடி தள்ளிதான் வைக்க வேண்டும்.

8. நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு வசதியாக முகப்பு விளக்குகளை 250 மீட்ட்ர் தூரத்திற்க்கு முன்பே நாம் "டிம்' செய்ய வேண்டும்.(எதிரே வருபவர் செய்யாவிட்டாலும்)

9.  வளைவுகளில் அதிவேகமாக ஓட்டிச் சென்றால் விபத்து நடக்கும். அதற்கு  "இன் ஸ்லோ-அவுட் பாஸ்ட்' என்ற முறையில் செல்ல வேண்டும்.அதாவது, மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின் அடிப்படையில், வளைவுகளில் நுழையும்போது மெதுவாகவும், பின் ஆக்ஸிலேட்டரை லேசாக அழுத்தியும் செல்ல வேண்டும்.ஆனால் பலர் வேகமாகவே நுழைந்து பிரேக் அடித்து திரும்புகின்றனர். இது மிகவும் தவறு, இதனால் வாகனம் கவிழ்ந்துவிடும் அபாயம் உள்ளது.

10. கார்களில் செல்வோர் "சீட் பெல்ட்' அணியும்போது சட்டைப் பையில் போன், பேனா, சில்லரை காசுகள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும்.பெண்கள் அதிக நகை அணிந்திருக்கக் கூடாது. அசம்பாவிதம் நேரிட்டால் அந்த பொருட்களே பயணிக்கு ஆபத்தை விளைவிக்க கூடும்.

11. நான்கு வழிச் சாலையின் நடுவில் அரளி செடிகளையே ஏன் வைத்துள்ளனர் தெரியுமா?

 எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்கவும்,  வறட்சியை தாங்கும் இச்செடிகளின் வேர்கள் அதிகம் வெளி வராது அதனால் சாலைகள் அதிகம் பாதிபடையாது பாதுகாக்கவும், இது வாகனங்களின் கார்பன் டை ஆக்சைடை அதிகம் "அப்சர்வ்'  செய்து சுற்றுபுற சூழலை பாதுகாக்கிறது. இவற்றை  விலங்குகளும் உண்பது இல்லை. இந்த செடிகளை  அதிகம் பராமரிக்க வேண்டியதில்லை.

12. நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும். மற்றுமொரு எண் 112 என்பது பலருக்கு தெரியாது. 

மொபைல் போன் "சிக்னல்' இல்லாத இடங்களிலும், மொபைலின் "கீ லாக்' செய்யப்பட்ட நிலையிலும், ஏன் "சிம்கார்டு' இல்லாத நிலையிலும்கூட இந்த எண்ணை அவசர உதவிக்கு பயன்படுத்தலாம்.

மொத்தத்தில் விவேகமான வேகமே விபத்துக்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

கருத்துகள் இல்லை: