சூரியனார்


பாரத தேசத்தில் சூரிய வழிபாடு என்பது ஆதிகாலம் தொட்டே வழக்கத்தில் உள்ள ஒரு இயற்கை வழிபாடாகும். குறிப்பாக சிலப்பதிகாரத்தில் '' ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்'' எனத்தொடங்கும் வாழ்த்துபாடல் சூரியனார் வழிபாட்டின் பழமையை பறைசாற்றும். ''பாவிஷய'' என்னும் புராணம் ஸ்ரீகிருஷ்ணரின் மகனான ( கிருஷ்ணருக்கு ஏது மகன்? தெரிந்தவர்கள் விளக்கவும்) ''சாம்பா'' தொழுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த பொழுது சூரியனை வழிபட்டு நலமடைந்ததாக குறிப்பிடபட்டுள்ளது.  வளம்பெற தினசரி காயத்ரி மந்திரம் ஒன்பதின் மடங்குகளில் சொல்லிவரலாம்.

காயத்ரி மந்திரம்:


''ஓம் பூர் புவஸ்ஸூவ
தத் சவிதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்''

சூரியபகவான் அருளால் இன்னல்கள் யாவும் மறையும். வெற்றி உண்டாகும். ஜாதக அடிப்படையில் சூரியன் தயவு இல்லாமல் தலைமைப் பொறுப்புக்கு யாரும் வரமுடியாது. அதிகாரிகள், அதிகார மையங்கள், ஆகியவற்றில் பணிபுரிய சூரியனின் அனுக்கிரகம் அவசியம். அத்தகைய சர்வ ஆதிக்கமும், அதிகாரமும் உடைய சூரிய பகவானுக்கு உகந்த நாள் ரத சப்தமி. ரத சப்தமி புண்ணியம் மிக்க நாளாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.  சூரியனாருக்கு ரதம் செலுத்தும் சாரதியாக உள்ளவரின் பெயர் ''அருணன்'' என்பதாகும். இந்த சூரியனார் எழுந்தருளியிருப்பது தேனி விருதுநகர் பேட்டை வரசித்திவினாயகர் கோவிலில், வணங்கி வளம் பெறுவோம்.


கருத்துகள் இல்லை: