பாண்டவமலை சமணர் மலை கொங்கர் புளியங்குளம்











புளியங்குளம் வாழ்மக்களுக்கு அவர்கள் வாழும் பகுதியில் உள்ள சமணர்கள் வாழ்ந்த மலையை பற்றி என்ன தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதையறிந்து கொள்ள அந்த ஊர்வாசி ஒருவரிடம் பேச்சு கொடுத்த பொழுது ,மலையேறி சென்றவுடன் இடது புறத்தில், மேலே உள்ள இந்த சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது,  நாம் நின்றால் தொடமுடியாத சுமார்10அடிக்கு மேலான  உயரத்தில் அமைந்துள்ள இந்த சிற்பத்திற்கு ''எட்டுகல்சாமி'' என்று பெயராம், அதுஎன்ன? எட்டுகல் சாமி என விளக்கம் கேட்டதற்கு அவர் கூறிய விளக்கம்,  இந்த சிற்பத்தின் மேல் பகுதியில் சிறிய எட்டு செவ்வக குழிகள் செதுக்கப்பட்டுள ன அதன் கீழே நின்று கொண்டு கற்களை எடுத்து அந்த செவ்வக குழிகளில் எறிய வேண்டுமாம் அப்பொழுது அந்த கற்கள் கீழே விழுந்துவிடாமல் அந்த குழிகளில் பொறுந்தி கொண்டால் எட்டுகல்லும் பொருந்தி கொண்டவுடன், அந்த மலையானது பிளந்து கொண்டு நாம் வேண்டும் அளவிற்கு தங்கத்தை வாரிவாரி வழங்கும் என்றார். இந்தமலையை பாண்டவமலை என்கிறார்கள். சமணர்கள் வாழ்ந்த இந்த இடங்களில் எல்லாம் அவர்களின் படுக்கைகள் மட்டுமே உள்ளன, அவர்கள் வாழ்ந்ததற்க்கான வேறு அடையாளங்கள் எதுவும் தென்படவில்லை, 

கருத்துகள் இல்லை: