முட்டாள்

      ஒருவனின் அறிவு, ஆன்மீகம், அரசியல் இம்மூன்றுக்கும் அவனின் வாரிசுகள் எக்காலத்திலும் வாரிசாக இயலாது. அவனுக்கும் அவனது வாரிசுகளுக்கும் மூன்றிலும் புரிதல்களும் அனுபவங்களும் மனதில் உள்வாங்கலும் வித்தியாசப்படும். அதையும் மீறி வாரிசாக கொண்டுவந்தால் அவர்களை பின் தொடர்பவன் புரியாத முட்டாள். 

மரணமில்லா பெருவாழ்வு

     
                                                                                                                                                                        

ஈர்ப்பு

                                                                                                                                                                                           Image result for புத்தர் கதைகள்                                                                                   புத்தர் ஒரு நகரத்துக்கு வருகை தந்தார். அவர் உரையைக் கேட்க நகர் மக்கள் எல்லாரும் காத்திருந்தனர். ஆனால் புத்தரோ, தான் வந்த சாலையைப் பார்த்தபடியே பேசாமல் அமர்ந்திருந்தார். அவர் நகரத்துக்குள் நுழைந்தபோது ஒரு சிறுமி அவரைப் பார்த்து, “எனக்காகக் காத்திருங்கள். நான் என் தந்தைக்கு உணவு கொடுக்கப் போகிறேன். அவர் வயலில் வேலை செய்கிறார். ஆனால் சரியான நேரத்துக்குள் வந்துவிடுவேன். நீங்கள் எனக்காகக் காத்திருக்க வேண்டும்” என்று சொல்லியிருந்தாள்.
அதற்காகத்தான் புத்தர் காத்திருந்தார். நகரத்துப் பெரியவர்கள் ஒருகட்டத்தில் பொறுமையிழந்து, “நீங்கள் யாருக்காகக் காத்திருக்கிறீர்கள். உரையைத் தொடங்கலாமே. முக்கியஸ்தர்கள் எல்லாரும் வந்துவிட்டனர்” என்றனர்.
புத்தர் சொன்னார். “ நான் யாரை எதிர்பார்த்து வந்தேனோ அவர் இன்னும் வரவில்லை. நான் காத்திருக்கவே வேண்டும்” என்றார்.
இறுதியில் அவர் எதிர்பார்த்திருந்த சிறுமி வந்தாள்.
“எனக்குக் கொஞ்சம் தாமதமாகிவிட்டது. ஆனால் நீங்கள் கொடுத்த உறுதிமொழியைக் காப்பாற்றிவிட்டீர்கள். நான் விழிப்புணர்வை அடைந்ததில் இருந்து உங்களுக்காகக் காத்துக்கொண்டிருப்பதால் நீங்கள் எனக்கு கொடுத்த உறுதிமொழியைக் காப்பாற்றவே வேண்டும். எனக்கு நான்கு வயது இருக்கும்போது உங்களது பெயரைக் கேட்டேன். அந்தப் பெயர் என் மனதில் தொடர்ந்து மணியாக ஒலித்துக்கொண்டிருந்தது. பத்தாண்டு காலமாக நான் காத்திருக்கிறேன்” என்றாள்.
“நீ காத்திருந்தது வீண்போகவில்லை. இந்த இடத்துக்கு என்னை ஈர்த்தது நீதான்” என்றார் புத்தர்.
புத்தர் தனது உரையை நிகழ்த்தினார். அந்தச் சிறுமி மட்டும் புத்தரிடம் வந்து, “ஐயா, எனக்கு தீட்சை அளியுங்கள். நான் போதுமான காலம் காத்திருந்துவிட்டேன். நான் உங்களுடன் இருக்க விரும்புகிறேன்” என்றாள்.
“ நீ என்னுடன் இருக்க வேண்டும். ஏனெனில் உனது நகரமோ எனது இருப்பிடத்திலிருந்து வெகு தூரத்தில் உள்ளது. நான் திரும்பத் திரும்ப இங்கே வந்துகொண்டிருக்கவும் முடியாது. வழியோ மிகவும் நீண்டது. நானும் முதுமை அடைந்துவருகிறேன்” என்றார்.
அந்த நகரத்தில் சிறுமியைத் தவிர யாருமே தீட்சைக்கு முன்வரவில்லை.
அன்றைக்கு இரவில் எல்லாரும் உறங்குவதற்குத் தயாரானபோது, புத்தர் தங்கியிருந்த இடத்தில் அவரது தலைமைச் சீடர் ஆனந்தா ஒரு சந்தேகத்தை புத்தரிடம் கேட்டார். “ ஒரு குறிப்பிட்ட இடத்தை நோக்கிச் செல்வதற்கு அந்த இடம் உங்களை ஈர்ப்பதை வைத்து உணர்வீர்களா?” என்றார்.
“நீ சொல்வது சரிதான். அப்படித்தான் எனது பயணங்களை முடிவுசெய்கிறேன். யாருக்கோ தாகம் எடுப்பதுபோல் உணர்ந்தால், அவர் இருக்கும் திசையில் நான் பயணத்தைத் தொடங்குவேன்” என்றார்.
ஆசிரியன் சீடனை நோக்கி நகர்கிறான்.
சீடன் ஆசிரியனை நோக்கி நகர்கிறான்.
தாமதமாகவோ, சீக்கிரத்திலோ இருவரும் சந்திக்கப்போகின்றனர்.
அந்தச் சந்திப்பு உடலினுடையது அல்ல. அந்தச் சந்திப்பு மனதினுடையதும் அல்ல. அது ஆன்மாவின் சந்திப்பு. இரண்டு தீபங்கள் நெருங்குவதைப் போன்றது அது. தீபங்கள் வெவ்வேறானவையாக இருக்கலாம். ஒளிப்பிழம்புகள் ஒன்றாகின்றன. இரண்டு உடல்களுக்கிடையே ஆன்மா ஒன்றாகும்போது, அதை ஒரு பந்தம் என்று சொல்வது மிகவும் சிக்கலானது. அது அல்ல, ஆனால் அதை விளக்கவும் வார்த்தைகள் இல்லை. மொழி என்பது எத்தனை வறியது.
அது ஒருமையில் இருக்கிறது.                                

மனத்தெளிவு

                       Image result for புத்தர் கதைகள்

  புத்தர் ஒரு முறை தன் சீடர்களுடன் பயணம் சென்று கொண்டிருந்தார். செல்லும் வழியில், ஒரு சிறு நீர்நிலையைக் கண்டார் ஒரு சீடனிடம் அங்கிருந்து குடிக்க நீர் கொண்டுவருமாறு சொன்னார்.
அவன் செல்லும் முன்பே ஒரு மாட்டு வண்டி அந்த நீர் வழியாகச் சென்றது. சீடன் சென்று பார்த்த போது நீர் கலங்கியிருந்தது. இதை எப்படி புத்தருக்குக் கொடுப்பது என்று அவன் திரும்பி வந்து, புத்தரிடம் விவரம் சொன்னான். சிறிது நேரம் கழித்து புத்தர் அந்த சீடனிடம் மீண்டும் சென்று வரப் பணித்தார். அவன் சென்று பார்த்தான். நீர் சிறிது தெளிந்திருந்தாலும், இன்னும் கலங்கலாகவே இருந்தது. அவன் திரும்பி வந்து புத்தரிடம் சொன்னான். சிறிது நேரம் சென்றது. புத்தர் மீண்டும் அவனைப் போய் வரச் சொன்னார்.
இம்முறை சென்று பார்த்தபோது நீர் தெளிவடைந்திருந்தது. எடுத்து வந்து புத்தரிடம் கொடுத்தான்.
புத்தர் அந்தச் சீடனைப் பார்த்துச் சொன்னார்”அந்த நீர் தெளிவதற்காக நீ என்ன செய்தாய்? அதை அப்படியே விட்டு விட்டாய். நேரம் சென்றதும் நீர் தானே தெளிந்து விட்டது. உன் மனமும் இது போன்றதுதான். குழப்பம் ஏற்படும் போது அதை அப்படியே விடு. சிறிது நேரம் சென்றதும் அது தானே தெளியும். நீ அதற்காக எந்தப் பயிற்சியும் செய்ய வேண்டியதில்லை. அது தானே நடக்கும்.”
 ஆம், மன அமைதியைப் பெறக் கடினமாக எதுவும் செய்ய வேண்டியதில்லை. முயற்சியின்றித்தானே நடக்கும்

காதல் காமம்

                                           
     

                ''காதல் பலவகை'' ஆனால் ''காமம் ஒன்றே ஒன்று''
காதல் ஒவ்வொரு உறவிலும் ஒவ்வொருவகையானது, அதாவது

தந்தையின் மீது ஒருவகை 
தாயின் மீது ஒரு வகை
தாத்தா பாட்டி  மீது ஒருவகை
மகன் மீது ஒருவகை
மருமகள் மீது ஒருவகை
மகள் மீது ஒருவகை
மருமகன் மீது ஒருவகை
மாமா அத்தை மீது ஒருவகை 
அத்தை மாமா மகன் மீது ஒருவகை
அத்தை மாமா மகள் மீது ஒருவகை
சித்தப்பா சித்தி மீது ஒருவகை
சித்தப்பா சித்தி மகன் மகள் மீது ஒருவகை
பெரியப்பா பெரியம்மா மீது ஒருவகை 
பெரியப்பா பெரியம்மா மகன் மகள் மீது ஒருவகை
அக்காள் தங்கை மீது ஒருவகை
மச்சான் மாப்பிள்ளை மீது ஒருவகை
அக்காள் தங்கை மகன் மகள் மீது ஒருவகை
மதினி கொளுந்தியாள் மீது ஒருவகை
காதலன் காதலி மீது ஒருவகை
ஏன் நண்பன் நண்பி மீது கூட ஒருவகையான காதல்தான்!! 
 இப்படி நாம் பலவிதமாக காதல் கொள்கிறோம். அதே மாதிரி அத்தனை உறவுகளும் நம் மீது ஒவ்வொரு வகையாகவே காதல் கொள்கிறார்கள், அதாவது காதல் என்பது உள்ளம் உள்ளத்தை நேசிக்கும் அன்பு. அவர்கள் அருகில் இருப்பதை விரும்பும்,  ஆனால் காமம் என்பது ''அடைய'' நினைத்து விருப்பம் கொள்வது, எனவே நாம் உறவுகளின் மேல் ''காதல்'' கொள்வோம், நம்மை படைத்தது எதுவோ அதன்மீது  ''காமம்'' கொள்வோம்,
     ஆனால், இவர்கள் அனைத்தையும் விட கணவன் மீது அல்லது மனைவி மீது மட்டும் ''காதலும் காமமும்'' கொள்வோம், உலகில் கடவுளும் அத்தனை உறவுகளும் இணைந்த ஒரு உறவு உண்டு என்றால் அது ''கணவன் மனைவி'' உறவு மட்டுமே. என்ன? சரியா நீங்க என்ன நினைக்கிறீங்க!?

பயம்

                                               
 
  யாராவது நம்மை பார்த்து என்ன பயமா? பயந்துட்டீங்களா? அப்படின்னு கேட்டா நாம், பயமா? எனக்கா? அப்படின்னா என்னா? அப்படின்னு நாம் தைரியமானவர்களாக இருந்தாலும் கூட நம்மை தைரியமானவர்களாக காட்டிக் கொண்டால் நமக்கு  குழந்தை மனசுன்னு அர்த்தம் ( குழந்தை பயமறியாது) அதாவது, நாம் இன்னும் அனுபவபடவில்லை, பக்குவபடவில்லைன்னு அர்த்தம், இன்னும் மூளை வளர்ச்சியடையவில்லைன்னு அர்த்தம். நாம் இன்னும் விபரம் அறியாதவர்களாகவே இருக்கிறோம்ன்னு அர்த்தம். நாம் இன்னும் முட்டாளாகவே இருக்கிறோம்ன்னு அர்த்தம்.
      உலகில்  பயமில்லாத மனிதர்கள் யாராவது உண்டா? இல்லவே இல்லை, மனிதனுக்கு இயற்கையிலேயே பய உணர்ச்சி உண்டு, உலகையே மிரட்டி அடக்கியாண்ட கொடுங்கோலர்களுக்கும், மாபெரும் குற்றங்கள் கொலைகள் செய்த கொலையாளிகளுக்கும், மக்களை நல் வழிபடுத்த வந்த தேவ தூதர்களுக்கும், குருமார்களுக்கும்,  தேசம் காக்க அனைத்தையும் தியாகம் செய்த தியாகிகளுக்கும், உறவுகளை நேசிப்பவர்களுக்கும், மிரண்டு போனவர்களுக்கும் 'பய' உணர்ச்சி இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஒவ்வொருவரும்  நாம் விரும்பாதபடி எதுவும் நடந்து விடக்கூடாதுன்னு பயப்படுகிறார்கள், அது நடந்து விடாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக செய்யும் செயல்களும் நகர்வுகளுமே அனைத்தும். அவர்களின் பயம் எதுவோ அதற்க்கு தக்கவாறு நல்ல செயல்களாகவும், கெட்ட செயல்களாகவும் வெளிப்படுகிறன. எனவே நல்ல செயல்கள் நடைபெற நாமும் பயப்படுவோம், இது வரை பயப்படாதவர்கள் யாராவது இருக்கீங்களா? 

உருவ வழிபாடு

                                                       
 உருவ வழிபாடு சரியா? தவறா? 
        ஆன்மீகத்தின் ஆரம்ப காலத்தில் உள்ளவர்களுக்கு (வயது எத்தனை ஆனாலும்) சிலை வழிபாடு தவறில்லைதான், எப்படி? நமக்கு பசியின் போது எச்சில் ஊறுவதில்லை,  ஆனால் உணவை கண்டபோதும் உண்டபோதும் அதை பற்றிய நினைவுகளின் போதும் மட்டுமே ஆர்வம் மிகும் எச்சில் ஊறும், அதேபோல் ஆணோ, பெண்ணோ ஒருவர் எதிர்பாலினத்தவர் ஒருவரை பார்க்கும்போதோ அல்லது பார்த்தவர்களை நினைக்கும் போதோ ஆர்வம் மிகும், நாம் எதையும் பார்த்ததே இல்லையெனில் நமக்கு அதை தெரிவதற்க்கு வாய்ப்பில்லாமல் போகும், அதை பற்றிய ஞானமும் நமக்கு இல்லாமல் போகும். எதையும் காணாது நாம் கடவுளை உணர முடியாது விலங்குகளாய் இருப்போம், எனவே கடவுளை நமக்கு அறிமுகம் செய்யவும் ஒரு உருவகம் தேவைபடுகிறது. அப்பொழுதுதான் நமக்கு கடவுள் பற்றிய ஞானம் ஏற்ப்படும். அதனால்தான் இந்த சிலைவழிபாடு ஆனால் ஆன்மிகத்தில் முழுமையடைய அதையும் (சிலை வழிபாட்டையும்) கடந்து செல்வது அவசியமாகிறது. 

யாகம்

      'யாகம்'னா என்னா? அதனால் பலன் உண்டா? யாகம் என்ற சொல்லுக்கு பொருள் என்ன?

            யாகம் என்ற சொல்லுக்கு ''உயரிய அர்ப்பணிப்பு'' என்று அர்த்தம், அதாவது இறைவன் படைத்தவைகளை இறைவனுக்கே படைப்பது, அதனால் பலனடைவது, உதாரணமா அம்மா சமைத்த உணவை குழந்தை எடுத்து அம்மாவுக்கே ஊட்டி விடுவது போன்றது, குழந்தை தனக்கு ஊட்டினால் உண்மையிலேயே அம்மா மிகவும் ஆனந்தம் கொள்வாள், குழந்தையை வாரியனைத்து கொஞ்சுவாள் குழந்தை மீது அதிக பாசம் கொண்டு அதனை நன்கு கவணித்துக் கொள்வாள், அதை போல இறைவனும் யாகம் செய்பவர்களை கனிவுடன் கவணித்து காத்தருள்வான் என்பதுதான் யாகத்தின் நோக்கம். சரி இப்போ யாகம் எப்படி செய்கிறார்கள், நெருப்பை வளர்த்து அதனுள் பால், பழங்கள், தேங்காய், இளநீர், தேன், நெய், சர்க்கரை பொங்கல், மருத்துவ குணமுடைய மரகுச்சிகள், ஆடைகள் என பலவற்றையும் அக்கினிக்குள் போட்டு எரிக்கிறார்கள் அவ்வளவும் விரையமாகிறது,

     யார்தான்  பழக்கப்படுத்தினார்களோ நல்ல பொருட்களை நாசப்படுத்துவதற்க்கு , நன்றாக கவணித்தீர்களானால் புரியும், ஒரு அளவான யாகத்தில் செய்வதே நடப்பான ஒரு திருமணத்திற்க்கு உரிய பொருட்களாகும், பொருட்களை வைத்து சாமி கும்பிட்டுவிட்டு யாகத்தில் கலந்து கொண்டவர்களுக்கே கொடுத்து சாப்பிட செய்திருக்கலாம், யாகத்தில் போட்ட பொருட்கள் வீணாக போயிருக்காது, ஏழ்மையானவர்களுக்கு ஆடைகளை உடுத்தச் சொல்லி கொடுத்திருக்கலாம், ஆனால் நடப்பது என்ன அவ்வளவு பொருட்களும் உதவாமல் போகிறதே, இது சாதாரணமா பார்ப்பவர்களுக்கே புரியும், அதாவது அம்மா சமைத்த உணவை, சிறிய குழந்தையாக இருந்தாலும் சிந்தி வீணாக்கினால் கண்டிப்பாக அம்மாவின் கோபத்துடன் கூடிய அதட்டலும் அடியும் அவசியம் கிடைக்கதானே செய்யும் நீங்களே இதையும் பார்த்திருப்பீர்கள்தானே, அனுபவித்தும் இருப்பீர்கள், அப்படியிருக்க இறைவன், உயிர்கள் அனுபவித்து, பயண்படுத்த படைத்தவைகளை மணிதன் வீணாக்கினால் கண்டிப்பாக அதட்டலும் அடியும் கிடைக்கத்தானே செய்யும். நன்கு யோசித்து பாருங்கள் இறைவன் படைத்தவைகளை படைப்பின் நோக்கம் அறிந்து பயண்படுத்தி பலன் பெறுங்கள், இறைவனின் அருள் பெறுங்கள். 

ஆத்திகம்

   கோவில்களுக்கு திருவிழாக்களுக்கு நன்கொடை கொடுப்பது பற்றி:

பணம் எத்தனையோ வழிகளில் விரையமாகின்றது, அதிலே இதுவும் ஒரு விதம் என்றெண்ணிக் கொள்ள வேண்டியது தான் நாம்.


"உடலுண்டு குடலுண்டு மனையுண்டு என்றாயிரம் கதை கட்டி

நீவீர் தரும் தானமதை சிலையது ஏற்கும் என்று சொல்லி

நீர் இட்ட பிச்சைதனில் கோவில் வளர்ப்பார்

கோவதன் இல் அது அகமே என்றுணராது

ஆத்திகம் எனும் பெயரில் மதம்தனைப் பரப்பிடுவோர்

நீர் இட்ட பிச்சை தனில் கடவுள் வாழ்கையில்

பிச்சையிட்ட நீரே கடவுள் அதற்க்கு என்றாவீர் அன்றோ?

சிந்திப்பீர், செயல் படுவீர், ஆத்திகம் பிழைக்கட்டும்"


என்ன நான் சொல்றது

   நாம்  ஆண் அதிகாரிகளையோ அல்லது சற்று வயது முதிர்ந்த ஆண்களையோ சந்திக்கும்போது மரியாதையாக அழைக்கும் பொருட்டு சார் என்றும் அய்யா (ஐயா) என்றும் அழைக்கிறோம், அதேபோல் பெண் அதிகாரிகளையும் சற்று வயது வயது முதிர்ந்த பெண்களை அம்மா என்றும் மேடம் என்றும் அழைக்கின்றோம். அதே போல் சின்ன குழந்தைகளையும் அம்மா அய்யா எனவும் அழைத்து கொஞ்கிறோம்,
      ஆனால்  ஆங்கில வார்த்தைகளுக்கு விளக்கம் சொல்பவர்கள் சார் (SIR)   என்பதற்கு '' Slave I Remain'' அதாவது நான் உங்களுடைய அடிமை  என்பதை நினைவூட்டுகிறேன் என்பதே என்றும்  ஒரு காலத்தில் அடிமைகள் சொன்ன வார்த்தை என்று விளக்கம் சொல்கிறார்கள்,
      தமிழர்கள் கலாச்சாரப்படி அய்யா (ஐயா) என்பது பெற்ற தகப்பனை மட்டுமே குறிக்கும் வார்த்தை, அதே போல் அம்மா என்பதும்  பெற்ற தாயை மட்டுமே குறிக்கும் வார்த்தை  எனவே அந்த வார்த்தையை மற்றவர்களுக்கு பயண்படுத்த முடியாது. எனவே மற்றவர்களை மரியாதையாக அழைப்பதற்கு ஆண் பெண் என எந்தவித பாகுபாடுமில்லாத புதுசா ஒரு வார்த்தை கண்டுபிடிக்கனும், அப்படி அழைப்பதையும் சட்டமாக்கனும் என்ன நான் சொல்றது, சரிதானா???

பெருமை

     ஒருவன் :  என்மகன் பத்தாம் வகுப்பில் பாஸாகி எனக்கு மிகப்பெரிய பெருமையை தேடித்தந்துவிட்டான்..
     மற்றவன் : அப்படியா மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள், மாநிலத்திலேயே முதல் மாணவனாக தேறிவிட்டானா?
    ஒருவன் : இல்லை நான் பத்தாம் வகுப்பில் 200 மார்க் வாங்கியிருந்தேன், என்மகன் 190 மார்க்குகள் வாங்கி என்னை பெறுமை படுத்திவிட்டான் என்றேன்...  

சும்மா இரு

                                           
                                                                                                                                                       ''சும்மா இரு'' அப்படின்னா எதையும் பேசாமல் இருப்பது       அல்லது எந்த ஒரு வேலையையும் செய்யாமல் இருப்பது எனவும், அல்லது மனதை அடக்குதல் அல்லது மனதை கடந்து நினைவுகள் ஏதும் இல்லாமல் இருப்பது, என கருதியும் சொல்லியும் வருகிறார்கள், ஆனால் உண்மையில் ''சும்மா'' இருப்பதுன்னா ''எந்த நேரமும் ஒன்றிலேயே செயல்படுவதுதான்''. உதாரணமா,  ஒரே விசயத்தை திரும்ப, திரும்ப சொல்பவரை அல்லது  ஒன்றையே திரும்ப திரும்ப செய்பவரை நாம் ''சும்மா சும்மா அதையே சொல்லிக்கிட்டு இருக்கிறாய் எனவும்'' ''அதையே சும்....மா.. நோண்டிக்கிட்டு'' (செய்துகிட்டு) இருக்க (இருக்கிறாய்) பேசாம கம்னு இருன்னுதான் சொல்கிறோம். அப்படினா என்ன அர்த்தம் ஒன்றிலேயே நிலைத்திருக்காதே என்றுதானே அர்த்தம். அப்ப சும்மா இருப்பதுன்னா என்னான்னு இப்போ புரிந்திருக்கும்னு நினைக்கிறேன், மாற்று கருத்து இருந்தால் மறுத்தளியுங்களேன்.    

மரணம் சுகமானதே !!

                                                           
                 சித்தர் பெருமக்களுக்கு மரணம் ஏற்படுவதில்லை, ஆனால் அவர்கள் தங்களின் சரீரத்திலிருந்து ஆன்மாவை தாங்கள் விரும்பும் போது பிரித்து கொள்கிறார்கள், அது அவர்களுக்கு மிகவும் சுகமானதாக இருக்கும், ஆனால் அவர்களுக்கு விந்து வெளியாவதில்லை எனவே அவர்களின் உடல் துர்நாற்றம் வீசுவது இல்லை  என்கிறார்கள், எனவே உயிரை பிரிக்கின்ற நேரத்தில் அவர்கள் ஆனந்தத்தில் திளைக்கிறார்கள் என்கிறார்கள், அப்படின்னா,  சாதாரண மக்களுக்கு மரணம் வலியானதா? இல்லை சுகமானதா? மரணம் சுகமானதே! எப்படி? ஆண்களுக்கு மரணத்தின் போது விந்து வெளியாகுமுன்னு எல்லோரும் சொல்கிறார்கள் அதனால் தான் அவர்களின் உடல் நாற்றமடிக்கிறது என்கிறார்கள், பொதுவா விந்து கனவிலும், நினைவிலும், எந்த விதத்தில் வெளியேறினாலும் அது அவர்களுக்கு  வெளியேறும் போது சுகமானதாகவே இருக்கிறது. பெண்களுக்கு சுரோனிதம் வெளிப்படும் போதும் அதே போல் சுகமானதாகவே இருக்கிறது என்கிறார்கள். அதே போல் அவர்களுக்கும் மரணத்தின் போது சுரோனிதம் வெளிப்படுகிறதுன்னு சொல்கிறார்கள், அதனால்தான் அவர்களின் உடல் நாற்றமடிக்கிறதுன்னு  சொல்கிறார்கள்,  அப்படின்னா சாதாரண மக்களுக்கும் கூட மரணம் சுகமானதாகத்தானே இருக்கும், இருக்கமுடியும், இதில் மாற்றுக்கருத்து ஏதேனும் இருக்க முடியாதுதானே !! இருந்தா கருத்துக்களை தெரிவியுங்களேன்..

மூன்றாம் மார்பு

   பாண்டிய மன்னனின் மகளான அன்னை மீனாட்சிக்கு பிறவியிலேயே மூன்று மார்புகள் இருந்ததாகவும், ஒரு போரின் போது அவள் 'சிவனை' சந்தித்ததாகவும் அப்பொழுது அவளுக்கு மூன்றாம் மார்பு மறைந்ததாகவும், மறைந்ததும் அவள் சிவனை(இறையை)  அடைந்ததாகவும், புராண கதை உள்ளது. இது அனைவரும் அறிந்ததே, சித்தர் வழிபாட்டில் உள்ளவர்கள், ஆன்மீக புராணங்கள், உடலுக்குள் நடக்கும், இருக்கும், நிகழ்வுகளைதான், உதாரணமாக ராமாயாணம், மகாபாரதம், வைணவ, சைவ புராணங்களில் பரி பாஷையாக சொல்லப்பட்டு இருக்கிறதுன்னு சொல்லி விளக்கங்களும் சொல்லி வருகிறார்கள் அது உண்மையாகவும் இருக்கிறது. அதே போல் இந்த புராணத்தையும் ஒப்பிட்டால் நாம் அனைவருமே மீனாட்சிதான் அதாவது ஆன்மாவுக்கு பெயர் மீனாட்சி, நமக்கு எல்லோருக்கும் பரிபாஷையாக சொல்லப்பட்ட மூன்றாம் மார்பு உள்ளது, அதுதான் நாம் இறைவனை அடைய தடையாக உள்ளது, அது எது? நாம் அதை எவ்வாறு அழிப்பது? எப்படி சிவனை (இறையை ) சந்திப்பது, சிவனை சந்தித்தால்தானே நாம் அவனை அடையமுடியும், எனவே நாம் எதை எதனால் அழித்து சிவனை அடைவது, ஆன்மீகவாதிகளே விளக்குவீர்களா ? ''நான்'' அறிய...   

கொலைகாரர்

      உலகில் நாம் அனைவருமே கொலைகாரர்கள்தான் நேற்றைய நம்மை இன்றைய நாம் அழித்து விட்டிருக்கிறோம், நம்முடைய சிறுவயது உருவம் வேறு, இளமையாக இருக்கும் போது இருக்கும் உருவம் வேறு, மத்திய வயதில் உள்ள உருவம் வேறு, வயோதிகத்தில் உள்ள உருவம் வேறு, இப்படி நாம் நம்முடைய முந்தைய உருவத்தை அழித்து விடுகிறோம், இதைதான் உடல் அழியகூடியது ''ஆன்மா'' அழிவில்லாதது என்கிறதா?  ஆன்மீகம், அப்படியானால் மரணம் வரை ஆன்மா உண்டு, மரணத்திற்கு பின் ஒன்றுமே இல்லைதானே? இல்லை, உண்மையிலேயே நாம் மரணமடைந்த  பின் நமது ஆன்மா, நமது உடலை விட்டு வேறு இடத்துக்கு பயணம் செய்கிறது என்கிறதா? அப்படியானால் ஆன்மா எந்த இடத்திற்க்கு பயணம் செய்கிறது? அது எவ்வாறு பயணம் செய்கிறது? அறிந்தவர்கள் எனக்கு புரிய விளக்குவீர்களா? ஆன்மீகவாதிகளே!! தங்களின் எண்ணங்களை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.

ஆன்மீகம் முடமானதா?

      ஆன்மீகம் முடமானதா? கடவுளை அடைய மற்றவர்களின் (குரு) துணை உதவி தேவைதானா? ஆம் என்றால் ஆன்மீகம் முடமானதேயாகுமல்லவா? முடம் நமக்கு தேவையில்லை தானே? இல்லை, இது ஒரு வித்தை ப்யிற்றுவிக்கப்பட வேண்டிய ஒன்று, என்றால், இல்லாத ஒன்றை நமக்கு கற்பிப்பதாகதானே அர்த்தமாகிறது வாழ்க்கைக்கு அத்தியாவசியமில்லாத ஒன்றுதானே என்றாகிறது? ஆன்மீகம் முடமானது இல்லை என்றால், நமது பிறப்பின் நோக்கம் கடவுளை அடைவதுதான் என்றால், நமக்கு எப்படி பசிக்கிறதோ? எப்படி பாலுணர்வு ஏற்ப்படுகிறதோ? அதே போன்று, பசியும் பாலுணர்வும் தீரும் வரையில், நம் மனமும் நம் புலன்களும் நம்மை பாடாய்படுத்துகிறதே!! அதை அடைந்தபின் தானே நமக்கு அமைதி கிடைக்கிறது, அதே போன்று கடவுள் தேவையும்  தானாகவே தோன்றி அதை நாம் அடையும்படி நம்மை பாடாய்படுத்த வேண்டாமா? அப்படி  இல்லையே!! யாருக்கும் அப்படி ஏற்பட்டதாகவும் தெரியவில்லையே!! கடவுளை தேட நமக்கு மற்றவர்களால் பயிற்றுவிக்கப்பட்டே நாம் கடவுளை தேடிக் கொண்டிருக்கிறோமே? இது சரிதானா? உண்மையிலேயே நமது பிறப்பு கடவுளை அடைவதுதான் நோக்கமா? அப்படி என்றால், நாம் பிறப்பதற்க்கு முன்பே நாம் வாழும் சூழலை உருவாக்கி வைத்தவன்,  கடவுளை அடைவதற்க்கான ஒரு ஏற்பாட்டையும் நமக்காக செய்து வைத்திருக்க மாட்டானா?  ஐயம் தீர யாராவது விளக்குங்களேன்.... .

தாடி குடுமி

      ஆன்மீகவாதிகள் பலரும் குடுமி, தாடியுடன் இருக்கிறார்களே  ஏன்? ஆன்மீகத்திற்க்கும் சடைமுடி, குடுமி, தாடி இவைகளுக்கும் ஏதேனும் சம்பந்தம் உள்ளதா? கடவுளை காண இவைகள் உதவுகின்றனவா ?ஆம் உதவுகின்றது என்றால் பலர் மொட்டையடித்து மொட்டையாகவும் இருக்கிறார்களே ? அது எதற்காக அதனால் பலன் என்ன? இல்லை மொட்டையாக இருப்பதுதான் சரியானதா? அப்படியானால் ஜக்கிவாசுதேவ் போன்றோர்கள்  தாங்கள் தாடி குடுமி வைத்துக்கொண்டு தங்களின் சிஷ்யர்களை மொட்டியடித்து வைத்திருக்கிறார்களே? அது எதற்காக? இதிலும் இன்னொருவகை சாணக்கியரிலிருந்து இன்று உள்ள அய்யர்கள் வரை பாதி தலை மொட்டையாகவும் சிறிது குடுமியுடனும் இருக்கிறார்களே? அது எதற்காக?  எனது சந்தேகத்தை போக்குவீர்களா நண்பர்களே !! தங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் 'நான்' தெளிவடையவே ?