பக்கங்கள்

Subari Store



காசி நகர கடைவீதியில் பாக்கு கடைகளில் விதவிதமான பாக்கு ரகங்கள்

Tea Stall

காசி நகரத்து சாலையோரத்து டீ கடைகள்

Durga Mandir-Kaasi






                                              காசி துர்க்கையம்மன்  கோவில்

Birla Mandir-Kaasi- Benarasi-Varanasi








 பிர்லா கோவில் எனப்படும் இக் கோவில் ஒரு சிவன் ஆலயம்

Harichandra Burning Ghat-KAASI

எத்தனை சடலங்கள் எரிந்து கொண்டிருந்தாலும் பிணவாடை இல்லாமல் உள்ளது ???? 

Harichandra Burning Ghat-KAASI

அரிச்சந்திர மயான காட்சி

Manikarnika Ghat- Burning Ghat- KAASI

மரணங்கள் சாதாரண நடைமுறை ஆகிவிடும் இந்த இடத்திற்கு ஒரு முறை சென்று பார்த்தால்

Manikarnika Ghat- Burning Ghat- KAASI

மயானத்தின் நடுவில் அமைந்துள்ள சிவன் ஆலயம்

Manikarnika Ghat- Burning Ghat






காசி மணிகர்ணிகா சுடுகாட்டு காட்சிகள், மரணம்  என்பது மறக்ககூடிய ஒன்றுதான்

Kaasi Visalachi Kovil

காசி விசாலாச்சி கோவில் கல்வெட்டு

நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரம் ( Nattukkottai Chettiar chathiram-KAASI)





காசி நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்தில் அமைந்துள்ள  நாகரெஸ்வரர் ஆலயம்  

Kaasi Visalatchi Amman

காசியில் தமிழகத்து நாட்டுக்கோட்டை நகரத்தார் செட்டியார்களால் கட்டப்பட்ட காசி விசாலாட்சி திருக்கோவில் தமிழனின் பெருமை சொல்லும் அடையாளம்

Victoria Memorial Hall Kolkata


     அற்புதமான கட்டிடக்கலை பிரமாண்ட அம்சத்துடன் கம்பீரமாக நிற்க்கும் இந்த மாளிகையை பார்த்து ரசிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயனிகள் வருகின்றனர்.  ரம்மியமான புல்வெளி வளாகத்தையும், கூழாங்கல் நடைபாதையும்  கொண்டு ஒரு முக்கியமான பொழுதுபோக்கு ஸ்தலமாகவும் காதலர்கள் சந்திக்குமிடமாகவும் பயணிகளை ஈர்க்கிறது,

உலகையே ஆண்ட பிரிட்டிஷ் பேரரசின் வரலாற்றில் விக்டோரியா மகாராணியின் காலம் மிகவும் முக்கியமானது. அவர் ராணியாக இருந்த காலத்தில் ஆங்கில சாம்ராஜ்யத்தின் பரப்பு வெகுவாக விரிவடைந்தது. சூரியனே அஸ்தமிக்காத சாம்ராஜ்யமாக ஏற்த்தாழ ஒரு நூற்றாண்டு காலம் உலக வல்லரசாக விளங்கியது.
இந்தியாவைப் பொறுத்தமட்டிலும் அவரது ஆட்சிக் காலம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. கிழக்கிந்தியக் கம்பெனி கலைக்கப்பட்டு பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இந்தியா கொண்டுவரப்பட்து அப்போதுதான்.


அவர் உயிரோடு இருந்த காலத்தில் இந்தியாவின் தலைநகராக விளங்கிய கொல்கத்தாவில் சுமார் 64 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள விக்டோரியா  மெமோரியல் ஹால் விக்டோரியா ராணியின் நினைவிடமாக மட்டும் இல்லாமல் பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவில் ஆட்சி செலுத்திய ஆதிக்கத்தின் அடையாள சின்னமாகவும் காட்சியளிக்கிறது. பல ஆங்கில கவர்னர்ஜெனரல்கள்ஆட்சியாளர்கள்அவர்களுக்கு சலாம் போட்ட இந்திய அடிவருடி மன்னர்களின்சிலைகள்படங்கள்ஓவியங்கள் நிறைதொரு அருங்காட்சியகமாகவும் திகழ்கிறது.

Victoria Memorial Hall Kolkata


விக்டோரியா மெமோரியல் ஹால், கொல்கத்தா ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தை நினைவுபடுத்தும் வகையில் தாஜ் மஹாலை போன்றதொரு தோற்றத்துடன் விக்டோரியா மெமோரியல் ஹால் அமைந்துள்ளது. 1921-ஆம் ஆண்டு பொது மக்களின் பார்வைக்கு திறந்துவிடப்பட்ட இந்த மாளிகையில் பிரிட்டிஷ் ராஜ குடும்பத்தினரின் சில அரிய புகைப்படங்கள் காணப்படுகின்றன. ராணி விக்டோரியாவின் நினைவாக கட்டப்பட்ட இந்த மாளிகை தற்போது அருங்காட்சியகமாகவும், புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகவும் திகழ்ந்து வருகிறது.