மெல்ல எட்டிப் பார்த்தேன் மூச்சு இல்லை, ஆனால் இப்போதுதான் #இறந்திருந்தார் என்பதை மட்டும் நம்ப முடியவில்லை..!
இருபது வருடங்கள் முன்னாடி, அவர் மனைவி இறந்த பிறகு சாப்பிட்டாயா..? என்று யாரும் கேட்காத நேரத்தில் அவர் #இறந்திருந்தார் யாருமே கவனிக்க வில்லை...!
பொண்டாட்டி போனதுமே போய்த் தொலைய வேண்டியதுதானே, என்று காதுபட மருமகள் பேசியபோது அவர் #இறந்திருந்தார் அப்போதும் யாருமே கவனிக்க வில்லை...!!
தாய்க்குப் பின் தாரம் தாரத்துக்குப் பின்.. வீட்டின் ஓரம் ...!!! என்று வாழ்ந்த போத, அவர்
#இறந்திருந்தார். யாருமே கவனிக்கவில்லை..!
காசு இங்கே மரத்திலேயா காய்க்குது, என்று மகன் அமில வார்த்தையை வீசிய போது..!
அவர் #இறந்திருந்தார் யாருமே கவனிக்கவில்லை...!!
என்னங்க...! ரொம்ப தூரத்திலே இருக்குற முதியோர் இல்லத்திலே விட்டு தலை முழுகிட்டு வந்திடுங்க...! என்று காதிலே விழுந்த போதும் அவர் #இறந்திருந்தார் யாருமே கவனிக்க வில்லை...!
உனக்கென்னப்பா..! பொண்டாட்டி தொல்லை இல்லை என்று வாழ்த்துவது போல கிண்டலடிக்கப் பட்ட போது, அவர் #இறந்திருந்தார்..! அப்போதும் யாருமே கவனிக்க வில்லை .
இப்போதுதான் #இறந்தாராம் என்கிறார்கள்..! எப்படி நான் நம்புவது..? நீங்கள் செல்லும் வழியில்
இப்படி யாராவது #இறந்து கொண்டிருப்பார்கள்... ஒரு வினாடியாவது நின்று பேசி விட்டுச் செல்லுங்கள்..!
இல்லையேல்...! உங்கள் அருகிலேயே #இறந்து கொண்டிருப்பார்கள்; புரிந்து கொள்ளுங்கள்.
வாழ்க்கை என்பது #வாழ்வது மட்டுமல்ல...; #வாழ வைப்பதும்தான்..!
பலர் #இறந்து விடுகிறார்கள், புதைக்கத்தான் சில ஆண்டுகள் ஆகிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக