துவாரகதீஸ்

படத்தில் இருப்பது உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் உள்ள ஸ்ரீ துவாரகாதீஷ் மஹாராஜ் மந்திர் ஆகும். இந்த கோவில் பற்றிய சில தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:
 * வரலாறு: துவாரகாதீஷ் கோவில் 1814-ஆம் ஆண்டில், குவாலியரின் அரச குடும்பத்தினரால் கட்டப்பட்டது. மதுராவில் உள்ள பழமையான மற்றும் பெரிய கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.
 * மூலவர்: இக்கோவிலின் மூலவர் கிருஷ்ண பகவான், இங்கு அவர் 'துவாரகாதீஷ்' (துவாரகையின் அரசர்) என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். மூலவர் சிலை கருப்பு பளிங்கு கற்களால் ஆனது.
 * சிறப்பு: இக்கோயில் அதன் கலைநயமிக்க கட்டிடக்கலை மற்றும் அழகிய ஓவியங்களுக்காகப் பிரபலமானது. குறிப்பாக, கூரையில் உள்ள ஓவியங்கள் கிருஷ்ணரின் வாழ்க்கைக் கதைகளைச் சித்தரிக்கின்றன.
 * அமைவிடம்: விஷ்ராம் பஜார், மதுரா, உத்தரப் பிரதேசம்.
 * திறந்திருக்கும் நேரம்: பொதுவாக காலை 6:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரையிலும், மாலை 5:00 மணி முதல் இரவு 9:30 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும். ஆரத்தி மற்றும் பூஜை நேரங்களில் இந்த நேரங்கள் மாறுபடலாம்.
 * முக்கிய விழாக்கள்: இங்கு கிருஷ்ண ஜெயந்தி, ஹோலி போன்ற விழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

இறந்து விட்டார்

 அவர் #இறந்து விட்டார், அடக்கம் செய்யணும் சொல்லிக் கொண்டே  சென்றார்கள்..!

மெல்ல எட்டிப் பார்த்தேன் மூச்சு இல்லை, ஆனால் இப்போதுதான் #இறந்திருந்தார் என்பதை மட்டும் நம்ப முடியவில்லை..!

இருபது வருடங்கள் முன்னாடி, அவர் மனைவி இறந்த பிறகு  சாப்பிட்டாயா..? என்று யாரும் கேட்காத நேரத்தில் அவர் #இறந்திருந்தார் யாருமே கவனிக்க வில்லை...!

பொண்டாட்டி போனதுமே போய்த் தொலைய வேண்டியதுதானே,  என்று காதுபட மருமகள் பேசியபோது அவர் #இறந்திருந்தார் அப்போதும் யாருமே கவனிக்க வில்லை...!!

தாய்க்குப் பின் தாரம் தாரத்துக்குப் பின்.. வீட்டின் ஓரம் ...!!! என்று வாழ்ந்த போத, அவர்

#இறந்திருந்தார். யாருமே கவனிக்கவில்லை..!

காசு இங்கே மரத்திலேயா காய்க்குது,  என்று மகன் அமில வார்த்தையை வீசிய போது..!

அவர் #இறந்திருந்தார் யாருமே கவனிக்கவில்லை...!!

என்னங்க...! ரொம்ப தூரத்திலே இருக்குற முதியோர் இல்லத்திலே விட்டு தலை முழுகிட்டு வந்திடுங்க...! என்று காதிலே விழுந்த போதும் அவர் #இறந்திருந்தார் யாருமே கவனிக்க வில்லை...!

உனக்கென்னப்பா..! பொண்டாட்டி தொல்லை இல்லை என்று வாழ்த்துவது போல கிண்டலடிக்கப் பட்ட போது, அவர் #இறந்திருந்தார்..! அப்போதும் யாருமே கவனிக்க வில்லை .

இப்போதுதான் #இறந்தாராம் என்கிறார்கள்..! எப்படி நான் நம்புவது..? நீங்கள் செல்லும் வழியில்

இப்படி யாராவது #இறந்து கொண்டிருப்பார்கள்... ஒரு வினாடியாவது நின்று பேசி விட்டுச் செல்லுங்கள்..!

இல்லையேல்...! உங்கள் அருகிலேயே #இறந்து கொண்டிருப்பார்கள்; புரிந்து கொள்ளுங்கள்.

வாழ்க்கை என்பது #வாழ்வது மட்டுமல்ல...; #வாழ வைப்பதும்தான்..!

பலர் #இறந்து விடுகிறார்கள்,  புதைக்கத்தான் சில ஆண்டுகள் ஆகிறது...