பக்கங்கள்
- முகப்பு
- கனவு
- இந்திய பழைய நாணயங்கள்
- மனம்
- வெற்றி உங்கள் கற்பனையில்
- உடனடியாக
- வெல்பவன்
- வெற்றி ரகசியம்
- சிந்தித்துபேசு
- கடவுளே !!!
- கடமை
- வென்று காட்டுவோம்
- பேசு
- பரிசு
- வழி தேடு
- தயாராகு
- எதிரி
- வாழ்க்கை
- எதிர்(ரி)காலம்
- பிரச்சனைகள் தீர
- கீதையின் சாரம்
- வாழ்க்கை வெற்றி
- நான்-கடவுள்
- வெற்றிக்கு குறுக்கு வழி
- முதல் வேலைக்காரன்
- உபதேசம்
- விட்டுக் கொடுக்காதீர்கள்
- இறையருள்
- எச்சரிக்கை
- பழக்கம்
- தாய்- தந்தை
- மயானம்-தியானம்
புத்தர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புத்தர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஈர்ப்பு
அதற்காகத்தான் புத்தர் காத்திருந்தார். நகரத்துப் பெரியவர்கள் ஒருகட்டத்தில் பொறுமையிழந்து, “நீங்கள் யாருக்காகக் காத்திருக்கிறீர்கள். உரையைத் தொடங்கலாமே. முக்கியஸ்தர்கள் எல்லாரும் வந்துவிட்டனர்” என்றனர்.
புத்தர் சொன்னார். “ நான் யாரை எதிர்பார்த்து வந்தேனோ அவர் இன்னும் வரவில்லை. நான் காத்திருக்கவே வேண்டும்” என்றார்.
இறுதியில் அவர் எதிர்பார்த்திருந்த சிறுமி வந்தாள்.
“எனக்குக் கொஞ்சம் தாமதமாகிவிட்டது. ஆனால் நீங்கள் கொடுத்த உறுதிமொழியைக் காப்பாற்றிவிட்டீர்கள். நான் விழிப்புணர்வை அடைந்ததில் இருந்து உங்களுக்காகக் காத்துக்கொண்டிருப்பதால் நீங்கள் எனக்கு கொடுத்த உறுதிமொழியைக் காப்பாற்றவே வேண்டும். எனக்கு நான்கு வயது இருக்கும்போது உங்களது பெயரைக் கேட்டேன். அந்தப் பெயர் என் மனதில் தொடர்ந்து மணியாக ஒலித்துக்கொண்டிருந்தது. பத்தாண்டு காலமாக நான் காத்திருக்கிறேன்” என்றாள்.
“நீ காத்திருந்தது வீண்போகவில்லை. இந்த இடத்துக்கு என்னை ஈர்த்தது நீதான்” என்றார் புத்தர்.
புத்தர் தனது உரையை நிகழ்த்தினார். அந்தச் சிறுமி மட்டும் புத்தரிடம் வந்து, “ஐயா, எனக்கு தீட்சை அளியுங்கள். நான் போதுமான காலம் காத்திருந்துவிட்டேன். நான் உங்களுடன் இருக்க விரும்புகிறேன்” என்றாள்.
“ நீ என்னுடன் இருக்க வேண்டும். ஏனெனில் உனது நகரமோ எனது இருப்பிடத்திலிருந்து வெகு தூரத்தில் உள்ளது. நான் திரும்பத் திரும்ப இங்கே வந்துகொண்டிருக்கவும் முடியாது. வழியோ மிகவும் நீண்டது. நானும் முதுமை அடைந்துவருகிறேன்” என்றார்.
அந்த நகரத்தில் சிறுமியைத் தவிர யாருமே தீட்சைக்கு முன்வரவில்லை.
அன்றைக்கு இரவில் எல்லாரும் உறங்குவதற்குத் தயாரானபோது, புத்தர் தங்கியிருந்த இடத்தில் அவரது தலைமைச் சீடர் ஆனந்தா ஒரு சந்தேகத்தை புத்தரிடம் கேட்டார். “ ஒரு குறிப்பிட்ட இடத்தை நோக்கிச் செல்வதற்கு அந்த இடம் உங்களை ஈர்ப்பதை வைத்து உணர்வீர்களா?” என்றார்.
“நீ சொல்வது சரிதான். அப்படித்தான் எனது பயணங்களை முடிவுசெய்கிறேன். யாருக்கோ தாகம் எடுப்பதுபோல் உணர்ந்தால், அவர் இருக்கும் திசையில் நான் பயணத்தைத் தொடங்குவேன்” என்றார்.
ஆசிரியன் சீடனை நோக்கி நகர்கிறான்.
சீடன் ஆசிரியனை நோக்கி நகர்கிறான்.
தாமதமாகவோ, சீக்கிரத்திலோ இருவரும் சந்திக்கப்போகின்றனர்.
அந்தச் சந்திப்பு உடலினுடையது அல்ல. அந்தச் சந்திப்பு மனதினுடையதும் அல்ல. அது ஆன்மாவின் சந்திப்பு. இரண்டு தீபங்கள் நெருங்குவதைப் போன்றது அது. தீபங்கள் வெவ்வேறானவையாக இருக்கலாம். ஒளிப்பிழம்புகள் ஒன்றாகின்றன. இரண்டு உடல்களுக்கிடையே ஆன்மா ஒன்றாகும்போது, அதை ஒரு பந்தம் என்று சொல்வது மிகவும் சிக்கலானது. அது அல்ல, ஆனால் அதை விளக்கவும் வார்த்தைகள் இல்லை. மொழி என்பது எத்தனை வறியது.
மனத்தெளிவு
புத்தர் ஒரு முறை தன் சீடர்களுடன் பயணம் சென்று கொண்டிருந்தார். செல்லும் வழியில், ஒரு சிறு நீர்நிலையைக் கண்டார் ஒரு சீடனிடம் அங்கிருந்து குடிக்க நீர் கொண்டுவருமாறு சொன்னார்.
அவன் செல்லும் முன்பே ஒரு மாட்டு வண்டி அந்த நீர் வழியாகச் சென்றது. சீடன் சென்று பார்த்த போது நீர் கலங்கியிருந்தது. இதை எப்படி புத்தருக்குக் கொடுப்பது என்று அவன் திரும்பி வந்து, புத்தரிடம் விவரம் சொன்னான். சிறிது நேரம் கழித்து புத்தர் அந்த சீடனிடம் மீண்டும் சென்று வரப் பணித்தார். அவன் சென்று பார்த்தான். நீர் சிறிது தெளிந்திருந்தாலும், இன்னும் கலங்கலாகவே இருந்தது. அவன் திரும்பி வந்து புத்தரிடம் சொன்னான். சிறிது நேரம் சென்றது. புத்தர் மீண்டும் அவனைப் போய் வரச் சொன்னார்.
இம்முறை சென்று பார்த்தபோது நீர் தெளிவடைந்திருந்தது. எடுத்து வந்து புத்தரிடம் கொடுத்தான்.
புத்தர் அந்தச் சீடனைப் பார்த்துச் சொன்னார்”அந்த நீர் தெளிவதற்காக நீ என்ன செய்தாய்? அதை அப்படியே விட்டு விட்டாய். நேரம் சென்றதும் நீர் தானே தெளிந்து விட்டது. உன் மனமும் இது போன்றதுதான். குழப்பம் ஏற்படும் போது அதை அப்படியே விடு. சிறிது நேரம் சென்றதும் அது தானே தெளியும். நீ அதற்காக எந்தப் பயிற்சியும் செய்ய வேண்டியதில்லை. அது தானே நடக்கும்.”
ஆம், மன அமைதியைப் பெறக் கடினமாக எதுவும் செய்ய வேண்டியதில்லை. முயற்சியின்றித்தானே நடக்கும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
