சூட்சும ரகசியம்


சூட்சும பொருள் விளக்கும் பொருள் பொதிந்த படம்... அம்பத்தோரு அட்சரத்தையும் லிங்கத்தையும் இணைக்கும் ஆறு முகன்... பொருள் புரிந்தோர் புத்திசாலி... பொருள் புரிந்து அனுபவிப்பவர் ஆண்டவனுக்கு சமம்...


பகுத்தறிவுவாதி என்பவன் முட்டாள்



பகுத்தறிவுவாதி என்பவன் முட்டாள்... 

பதிவு கொஞ்சம் பெரியதா போச்சு படிச்சு பாத்துட்டு கருத்தை சொல்லுங்கள்
இப்போ நான் பகுத்தறிவுவாதி போராளின்னு சொல்லி கொள்வது ஃபேஷனா போச்சு...
சரி பகுத்தறிவு அப்படின்னா என்ன? ஒரு விசயத்தில் நன்மை தீமை அல்லது உயர்வு தாழ்வு போன்ற அதன் தன்மைகளை சீர்தூக்கி எல்லாவற்றையும் பகுத்து ஆராய்ந்து தெளியும் அறிவுதான் பகுத்தறிவு... அதில் தெளிந்தவற்றில் எது சரியானதோ அதை பின் பற்றுகிறவர்தான் பகுத்தறிவுவாதி..
சரி, இப்போதைய பகுத்தறிவுவாதிகள் தங்களின் கொள்கை எதுவென்று சொல்கிறார்கள என்ன செய்கிறார்கள்ன்னு கொஞ்சம் யோசிப்போம்:
1) நாத்திகம் அல்லது இறைமறுப்பு.
2) சமுதாய வேற்றுமைகளை களைவது அதாவது ஜாதிகள் இல்லாமல் செய்வது,
3) பெண்களின் சமத்துவம்
இந்த மாதிரியான கொள்கைகளை முதலில் யாருடைய சிந்தனையிலிருந்து வந்தது?
தன்னை பகுத்தறிவுவாதியாக நினைத்து கொண்டு இருப்பவர்கள் சொல்கிறார்கள்.. ஈவெ ராமசாமிதான் பகுத்தறிவின் முன்னோடி நாங்கெல்லாம் பெரியாரிஸ்ட்டுகள் என்றும் சொல்லிகொண்டு இருக்கிறார்கள். அவரால்தான் நாம் இந்த நிலைமைக்காவது வந்திருக்கிறோம் என்கிறார்கள். இது உண்மையானதுதானா? சரிதானா?
ஆனால், உண்மையிலேயே இந்த சித்தாந்தத்தின் முன்னோடிகள் யார்? ஈவெராவுக்கு முன் பல நூறு, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உண்மையான ஆன்மீகவாதிகளான சிவவாக்கியரும், அய்யா வைகுண்டர், நாராயணகுரு போன்ற மனித மாமேதைகள்தான் இன்று தெய்வங்களாகவும் கடவுளின் அவதாரமாகவும் மக்களால் வணங்கப்பட்டு வருகிறவர்கள்தான். மக்களுக்கான அத்தனை விழிப்புணர்வுகளையும் சிந்தனைகளையும் தூண்டியவர்கள் எல்லாம் உண்மையான ஆன்மீகவாதிகளே..
வரலாறு தெரிந்த எந்த பெரியாரிஸ்ட்டாவது மறுக்க முடியுமா?
அப்படியானால், சிலர் ஈவெராவை கொண்டாடுகிறார்களே ஏன்? அவர் என்னதான் செய்தார்?
1) நாத்திகம் அல்லது இறை மறுப்பு :
இறைமறுப்புன்னா என்ன? அதாவது உலகில் அனேக மதங்கள் உள்ளன. அவைகள் யாவுமே கடவுள்ன்னு ஒருவர் உண்டு, அவரே நம்மை எல்லாம் வழி நடத்துகிறார் என்று சொல்கின்றன். கடவுளின் பெயர்கள் பலவாக சொன்னாலும் இறைவன் ஒருவனே என்பதை ஒத்து கொள்கின்றன. அப்படியிருக்க, இறைமறுப்பு நாத்திகம் என்கிற பெயரில் இந்துமதத்தவரை மட்டுமே குற்றம் சாட்டும் வேலையை செய்தார். இந்துமத எதிர்ப்பை மட்டுமே வளர்த்தார். இறைமறுப்பு என்றால் என்ன? செய்திருக்க வேண்டும் இறைவன் இல்லை என்பவர் இறைவன் இல்லவே இல்லை எல்லா மதங்களும் சொல்வது பொய் என்று சொல்லியிருக்க வேண்டுமல்லாவா? அதுதானே சரியானதாக இருக்கும்.. நியாமானதும் கூட.. அதை விடுத்து இந்துமதத்தை மட்டுமே குற்றம்சாட்ட காரணம் என்ன?
மேலும், இறைவன் அல்லது கடவுளை கற்ப்பித்தவன் முட்டாள் என்கிறார்...
ஒருவருக்கு ஒன்று தெரியவில்லை அல்லது அது பற்றி அவர் அறியவில்லை என்றால் அது இல்லையா? அல்லது அவருக்கு புரியவில்லையா? இதில் எது? சரி.. அது இருக்கலாம்தானே.. அது இருக்கும் வாய்ப்பு இருக்கத்தானே செய்கிறது. உதாரணமா, நியூட்ரான்கள் ஒரு சதுர சென்டி மீட்டருக்குள் சுமார் ஒரு லட்சம் கோடி ஒரு வினாடியில் கடந்து சொல்வதாக சொல்கிறார்கள். இது நம்பும்படியாக இருக்கிறதா? என்றால் என் போன்றவர்களுக்கு நம்பும்படியாக இல்லை.. ஆனால் அதை விஞ்ஞானிகள் உண்மை என்றும் அதன் சக்திகளை பயண்படுத்த முடியும்ன்னும் சொல்கிறார்கள் பயண்படுத்தவும் செய்கிறார்கள். ஆனால், நமக்கு அதை நாம் காண் முடியவில்லை அப்போ நாம் இதை நம்புவதா? அல்லது இல்லை என்று சொல்வதா? நம்ப மனமில்லையானால் அதை எப்படி காண்பது.. அது எப்படி? இருக்கிறது என்று அறிந்தவர்களை கேட்டு நீங்கள் அதை எப்படி? பார்க்கிறீர்கள் அது எப்படி இருக்கிறதுன்னு அவர்களை கேட்டு தெரிந்து கொள்வதுதானே சரி, அதை விட்டுவிட்டு அப்படி ஒன்று இல்லவே இல்லை என்பது சரியானதா? முட்டாள்தனமானதா?
அதுபோல்தான் ஈவேராவின் செயல், கடவுளை, நம்மை போன்ற ஒரு உருவமாக கற்பனை செய்து கொண்டு அது ஏதோ மேல்மாடியில் இருப்பதாக கற்பனை செய்து கொண்டும், அவர்களாகவே கடவுள் பற்றி ஒரு முடிவை வைத்துக்கொண்டு அது போல் இல்லை எனவே கடவுள் இல்லையென கூறி கொண்டு மறுப்பு தெரிவிப்பது சிறுபிள்ளைதனமானதுதானே? சொல்லுங்கள்.
ஐந்தறிவு மிருகங்கள் எல்லாம் கடவுள் தேடிக்கொண்டா இருக்கின்றன. (அதுகளும் எனக்கு தெரியாத வழியில் தேடிக் கொண்டு கூட இருக்கலாம்) எனவே, நாம் நியுட்ரான்கள் தேவைன்னு நினைச்சா பயன்படுத்தலாம், அல்லது தேவையில்லைன்னு நினைச்சா விட்டுவிடலாம். அது போலத்தான் கடவுளும் கடவுளின் சக்தியும். தேவைபடுவோர் பயண்படுத்தட்டும் தேவையில்லை என்போர்விட்டுவிடலாம்.
## "உருவ வழிபாட்டை, மூட நம்பிக்கைகளை மறுத்தவர்களும் எதிர்த்தவர்களும் ஆன்மீகவாதிகளே" ##
2) சமுதாய வேற்றுமைகளை களைவது அதாவது ஜாதிகள் இல்லாமல் செய்வது :
பல ஆயிரம் ஆண்டுகளாக ஜாதி வேற்றுமைகள் இருக்கத்தான் செய்கிறது. மறுக்கவே முடியாது. அதனால்தான் எல்லோரிடமும் அன்பாக இருங்கள் என எல்லா மதங்களுமே சொல்லி கொடுத்து வந்தாலும் எல்லா மதங்களிலுமே புல்லுருவிகளால் ஜாதி வேற்றுமைகள் பிரிவுகள் கடைப்பிடிக்கப்பட்டு வந்தன, இன்றும் கடைபிடிக்கப்பட்டே வருகின்றன என்பதையும் மறுப்பதற்க்கில்லை,
ஆனால், ஜாதிகளை ஒழிப்பதாக வேற்றுமைகளை களைவதாக சொல்லி ஈவேரா என்ன? செய்தார்.. உயர்ந்த ஜாதியாக தங்களை தாங்களே கூறிக்கொண்டு இருந்தவர்களை எதிர்க்கும் மனோபாவத்தையும் எதிரான உணர்ச்சிகளை மட்டுமே தூண்டினார்.. அதன் விளைவு இன்று FC யான அய்யர்கள், பிறாமனர்கள், உயர்ந்தவர்கள்ன்னு சொல்லி கொண்டு இருந்தவர்களுக்குள்ளும் ஒருவருக்கு ஒருவர் தாங்கள்தான் உயர்ந்தவர்கள்ன்னு சொல்லி கொள்ளும் மனோபாவமும், BC களான நாடார், செட்டியார், தேவர், நாயுடு எனச்சொல்லி கொள்ளும் பல ஜாதியினர்களில் ஒருவருக்கு ஒருவர் தாங்கள்தான் உயர்ந்தவர்கள்ன்னு சொல்லி கொள்ளும் மனோபவமும், SC என அழைக்கப்படும் ஆதி திராவிடர்கள், பறையர், பள்ளர் போன்ற சமுதாய மக்களும் ஒருவருக்கு ஒருவர் தங்களுக்குள் உயர்ந்தவர் தாழ்தவர்கள்ன்னு சொல்லி கொண்டு சண்டையிட்டு கொள்ளும் நிலைமை ஏற்பட்டுள்ளது, BC, SC, ST பிரிவு மக்கள் FC மக்களுக்கு இணையானவர்கள் சமமானவர்கள் என்பது போய் தங்களுகுள்ளாகவே ஏற்ற தாழ்வுகளை உருவாக்கி கொண்டார்கள் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. ஜாதி வேற்றுமைகள் ஒழியாமல் இன்று அதிகமான உக்கிரத்தோடு மற்றவர்களை கொலை செய்யும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறது.
ஆனால் ஆன்மீகம்தான் சுடுகாட்டு தோட்டி சிவனையும், குறத்தியான வள்ளியையும் கடவுள்ன்னு சொன்னது. எல்லா ஜாதியினரையும் ஆழ்வார்களாகவும், நாயண்மார்களாகவும் ஏற்றுக்கொண்டு கடவுளுக்கு இணையாக வணங்கி வருகிறது. ஜாதியினால் உயர்வு தாழ்வு இல்லை என்று சொல்கிறது.
ஆனால் ஆன்மீகத்தில் இந்த பகுத்தறிவுவாதிகள் போல் செயல்பட்ட சிலரால்தான் சில குளறுபடிகள் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்
சமத்துவத்தை ஏற்ப்படுத்த என்ன? செய்திருக்க வேண்டும். ஆன்மீகவாதிகள் செய்தது போல் ஒரு ஜாதியினர், மற்றொரு ஜாதியினர் மீது அன்பு மரியாதை கொள்ள போதித்திருக்க வேண்டும்.
3) பெண்களின் சமத்துவம் :
பெண் இல்லாத சமூகம் சாத்தியமே இல்லை, ஆணுக்கு துணையாக அவன் வாழ்வில் சரிபாதியாகவும் பல இடங்களில் அவளே முதன்மையானவளாகவும் இருக்கும் இந்த வாழ்க்கை அமைப்பில் பெண் மதிக்கப்பட வேண்டியது மிகமிக அவசியம் என்பதை உணர்த்ததான் இந்து மதம் ஆணுக்கு நிகராக பெண்ணையும் வைத்து வணங்கி வருகிறது, மனைவி தவிர்த்து மற்ற பெண்களை தாயாகவும் சகோதரியாகவும் நினைக்கும் மனோபாவத்தையும் அன்பையும் சொல்லிகொடுத்து மக்களை நல்வழிப்படுத்தும் வேலையை செய்கிறது. இதற்க்கு மாறாக நடப்பவர்களை இறைவன் தண்டிப்பான் எனவும் சொல்லி நேர்மையானவர்களாக நீடித்து இருக்கும் வேலையை நமது ஆன்மீக முன்னோர்களால் வாழ்க்கைமுறை வடிவமைக்கப்பட்டுள்ளது.
சரி.. இப்போ ஈவேரா என்ன செய்தார் எந்த பெண்ணையும் திருமணம் செய்து கொள்ளலாம் அதாவது தனது வளர்ப்பு மகளையே கூட எந்த வயதிலும் திருமணம் செய்து கொள்ளலாம், கணவன் வேறு ஒரு பெண்களுடன் தொடர்பு வைத்தால் அவனோடு போட்டியிட்டு நீயும் பல ஆண்களோடு தொடர்புகொள், அவனுக்கு நீயும் சரிநிகர் என்று சொல்லியும் நடந்தும் காட்டினார், இதுதான் ஆணாதிக்கத்தை ஒழிக்கும் வ்ழி என்று கூறினார், எவ்விததிலும் சரியானது இல்லை, தவறான பாதையில் செல்பவர்களை திருத்துவதுதான், சரியானதாக இருக்க முடியுமே தவிர ஏட்டிக்கு போட்டி மனநிலை சரியானதும் இல்லை, அதன் பின்விளைவுகளும் மிக மோசமானதே..
சரி, என்ன செய்திருக்க வேண்டும், யாரும் எந்த ஜாதியிலும் திருமணம் செய்யலாம், இதை மறுப்பதற்க்கில்லை சரியானதுதான் ஏற்று கொள்ள வேண்டிய ஒன்றுதான், ஆனால் நடப்பது என்ன? யாரும் எந்த ஜாதியிலும் திருமணம் செய்யலாம்- ஆனால் அடுத்த ஜாதியில் மட்டுமே திருமணம் செய்ய வேண்டும் அவர்கள் விரும்பினாலும் விரும்பா விட்டாலும், அவர்கள் சம்மதம் தேவையில்லை என்கிற குதற்கமான மனோபாவம். அடுத்த ஜாதி பெண்களையே திருமணம் செய்ய வேண்டும் என்கிற மணோபாவமும், வளர்ப்பும், அப்போதுதான் சமத்துவம் உண்டாகும் என்கிற மடத்தனமான நினைப்பும்..
இந்த சமுதாயத்திற்க்கு உயர்வுதாழ்வு இல்லாத சமுதாய அமைப்பு வேண்டுமா? இல்லை அடுத்த ஜாதிபெண் வேண்டுமா? இதில் எது சரியானது? ஜாதியின் பெயரால் ஏற்றதாழ்வு தீண்டாமை இல்லாத வாழ்க்கைமுறைதானே. ஆனால் பகுத்தறிவு வக்கிரபுத்தி விரும்புவதென்ன.. அடுத்த சாதிபெண்களைதான். அதனால்தான் ஈவேராவும், அவருடன் கூடவே வாழ்ந்த அவருடைய தம்பிகளாக இருந்தவர்களும் அவரின் கொள்கைகளை தூக்கி கொண்டு திரிபவர்களிலும் ஒழுக்கமான நல்லவர்கள் இல்லை என்பது கண்கூடான விசயம்...
சரி இந்த சமுதாயம் ஏற்ற தாழ்வு இல்லாமல் இருக்க என்ன செய்திருக்க வேண்டும்? அல்லது என்ன செய்ய வேண்டும்.? ஒரு ஜாதியினர் மற்ற ஜாதியினரை மதிக்க வேண்டும். அந்த பழக்கத்தைதான் சமுதாயத்துக்கு சொல்லி கொடுத்து இருக்க வேண்டும். இதை ஆன்மீகம்தான் சொல்கிறது. ஆனால் எல்லா மதங்களிலும் மூட நம்பிக்கைகள் இருக்கவே செய்கின்றன என்பது உண்மைதான். அது நீக்கப்பட வேண்டும் என்பதில் மாறுபாடு இல்லை. ஆனால் இந்த பொய்யான போலியான் பகுத்தறிவுவாதிகளின் பாதை சரியானது இல்லை...

மரசெக்கு எண்ணெய்


                     இப்போ எல்லோரும் எண்ணெயில் கலப்படம் வருது, அதனால் செக்கு எண்ணெய் வாங்குறது நல்லதுன்னு சொன்னாங்கன்னு நானும் யார் நல்லதாக தயார் செய்வார்கள்ன்னு தேடி தேடி செக்கு எண்ணெய்ன்னு போர்டு வச்சிருக்கவுங்க கிட்ட வாங்கி நல்லாயிருக்கா நல்லாயிருக்கான்னு சரிபார்த்து கொண்டு இருந்தேன்,  அப்போ ஒவ்வொருவரிடம் ஒரு மாதிரியாகவே இருந்தது,

     அப்போ எங்க வீட்டுக்கு பக்கத்துலேயே ஒரு செக்கு எண்ணெய் கடை வந்திருச்சு.. நான் மகிழ்ச்சியாகிவிட்டேன் அந்த கடைகாரர் எண்ணெய்யுடன் தேங்காய் பருப்பு வியாபாரமும் செய்து வருகிறார்... கடையில் நிறைய உலர் தேங்காய் பருப்புகளை குவித்து வைத்து மூடைமூடையாக விற்றுவந்தார். நான் வீட்டிலுள்ள எண்ணெய் தீர்ந்தவுடன் இனி இவரிடம் எண்ணெய் வாங்க வேண்டுமென முடிவெடுத்து அந்த கடைவழியே போதும் வரும் போதும் கடையை பார்த்து கொண்டே போய் வந்தேன் வீட்டில் தேங்காஎண்ணெய் தீர்ந்து போச்சுன்னு சொன்னாங்க உடனே நான் ஆகா இன்று நல்லதாக ஒரு தேங்கா எண்ணெய் வாங்க போகிறோம்ன்னு மகிழ்ச்சியாக வாங்க போனேன்.

அவரிடம்... அண்ணே... தேங்கா எண்ணெய் எவ்வளவு?  லிட்டர்ன்னு கேட்டேன்
அவர்... அண்ணே லிட்டர் ரூபாய் 260 /- உங்களுக்கு எவ்வளவு வேணும்ன்னார்
நான் : ஒரு அரைலிட்டர் தாங்க..
அவர் : அப்போ 130 ரூபாய் தாங்கன்னு வாங்கி கொண்டு
       ஒரு அரை லிட்டர் பிளாஸ்டிக் பாட்டிலில் அளந்து ஊற்றாமல் அப்படியே பாட்டிலில் நிறைத்து கொடுத்தார்...

    நான் பாட்டிலை வாங்கி எண்ணெய் கலரை பார்த்தேன் கலர் சற்று மஞ்சளாக இருப்பதாக எனக்கு தோன்றியது, வாசனை பார்த்தேன், எனக்கு வாசனையாகவும் தெரியவில்லை....

அவர் :  அண்ணே நம்மதான் தேங்காயை ஆட்டி எண்ணெய் எடுக்கிறோம் எண்ணெய் தரமா வாசனையா  நல்லாயிருக்கும்ன்னார்...

      அப்படியே நானும் சரின்னு சொல்லி வாங்கிட்டு வந்துவிட்டேன்.
பின்பு தேங்கா எண்ணெய்யை பயன்படுத்த இரண்டு நாட்களாகிவிட்டது...
எண்ணெயை பயண்படுத்தும் போது முகர்ந்து பார்த்தேன்... தேங்கா எண்ணெய்க்கு உள்ள  வாசனை எதுவுமே இல்லை, கையில் ஊற்றி தேய்த்தால் பிசு பிசுன்னு இருந்துச்சு... இது தேங்காயெண்னெய் போல் இல்லையேன்னு தோனுச்சு... ( ஒரு வேளை அவர் தேங்காயெண்ணெயுடன் விளக்கெண்ணையை கல்ந்திருக்கலாம் ) உடனே நான் கடைக்கு திருப்பி கொடுக்க கிளம்பினேன், வீட்டில் தடுத்து விட்டு வேறு எண்ணெய் வாங்கி கொள்ளலாம், இந்த எண்ணெயை விளக்கேற்ற பயண்படுத்தி கொள்வோம், நீங்க போனா சண்டை போடுவீங்க வேண்டாம்ன்னு சொல்லி தடுத்துவிட்டார்கள்...

முறையற்று தொழில் செய்தால் பணக்காரனாக வேண்டுமானால் ஆகலாம், ஆனால் மகிழ்வான மனுசனாக நிச்சயமாக வாழ முடியாது..

 எனக்கு அந்த கடைபக்கம் போகும் போதெல்லாம் சற்று மன உளைச்சளாகவே இருந்தது, இந்த கடைகாரன் நம்மளை ஏமாற்றி விட்டானேன்னு மனசுல இருந்துகிட்டே இருந்துச்சு.... எனக்கு எந்த கடையிலும் தரமான எண்ணெய் இருப்பதாகவே தெரியவில்லை...

எனக்கு இதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென நினைத்து, எண்ணெய்மில் வைத்து கடலை எண்னெய் தயார் செய்யும் உறவினரிடம் கலந்து பேசினேன்.

நான் : உண்மையிலேயே செக்கு எண்ணெய் ரூபாய் 250 க்கு மேல் 350 வரை விற்கிறார்களே அது சரியானதுதானா?

அதற்கு அவர் சொன்னார்...

  நாங்க கடலை எண்ணெய் தயார் செய்கிறோம் அது பற்றி சொல்கிறேன்னு சொல்லிவிட்டு சொன்னார்.
 ஒரு கிலோ  கடலை எண்ணெய் தயாரிக்க இரண்டரைகிலோ கடலை பருப்பு தேவை... இன்றைக்கு எண்ணெய் ஆட்டுகிற பருப்பு கிலோ சுமார் 60 ரூபாய் அப்படீன்னா ஒரு கிலோ எண்ணெய் த்யாரிக்க 2.5 *60= 150 ரூபாய் ஆகுது ஆட்டு கூலி கிலோவுக்கு 10 ரூபாய் வைத்து கொண்டால் கூட எண்ணெய் விலை ஒரு கிலோ 160 ஆகிறது,  பொதுவாக எள். கடலை, தேங்காய்  ஒரு கிலோவில் 40% எண்ணெயும், 60 % புண்ணாக்கும் கிடைக்கும், அதுனால அதில் .1.5 கிலோ புண்ணாக்கு கிடைக்கும். புண்ணாக்கு ஒரு கிலோ  40 ரூபாய் இருக்கிறது, அதில் 1.5 கிலோவிற்க்கு 60 ரூபாய் ஆகிறது, அதை எண்ணெய் விலையில் கழித்து கொண்டால், எண்ணெய் ஒரு கிலோ 100 ரூபாய் ஆகிறது, ஒரு கிலோ எண்ணெய் என்பது ஒரு லிட்டர் நூறு மில்லி எனவே ஒரு லிட்டர் எண்ணெய் விலை சுமார் 90 மட்டுமே ஆகிறது. அதற்கு சுமார் 30 % லாபமாக வைத்தால் கூட அதிக பட்சமாக 125 அல்லது 130 ரூபாய் தாண்டவேண்டிய அவசியமே இல்லை என்றார்.

சரி செக்கு எண்ணெய்க்கு என்றேன்,

 அவர் செக்கில் ஆட்டும் போது 10% எண்ணெய் குறைவாக கிடைக்கும் ஆனால் அதில் வரும் புண்ணாக்கில் சற்று எண்னெய் கூடுதலாக இருக்கும் எனவே அதன் புண்ணாக்கு சற்று விலை கூடுதலாக கிடைக்கும் . எப்படி பார்த்தாலும் இதுதான் சராசரியான கணக்கு என்றார்.

  இதுதான் உண்மை, இதில் செக்கு எண்ணெய் ஆயுளை கூட்டும் அதிக பலன் தரும் என்பதெல்லாம் பொய்யே.. மில் தயாரிப்பில் என்ணெய் சூடாகிவரும் அதுனால அது சரியானது இல்லை என்பது பொய் வாதம்,
 உடம்புக்கு சரியில்லைன்னா மட்டும் எண்ணெயை காயவைத்து தடவுன்னு மட்டும் சொல்லதெரியுது,  ஆனால் நாம் செக்கு எண்ணெய் என்கிற பேரில் ஏமாற்றப்படுகிறோம் என்றே எனக்கு மனதில் படுகிறது. உங்களுக்கு....






சிட்டு குருவி



சிறிது நேரத்துக்கு முன்பு ஒருவர் என்னோடு பேசிகொண்டு இருந்தார், இப்போதான்2.ஓபடம் பார்த்திருப்பார் போல சிட்டு குருவி ஒன்றை பாக்க முடியலை இந்த போன்  சிக்னல்டவரினால்தான் இல்லாம போயிருச்சுன்னு இயக்குநர் ஷங்கர் ரஜினி போலவே ரெம்பவே ஆதங்கபட்டார்... 
அவரிடம் சொன்னேன், இப்போ இல்லை கரண்டு நம்ம பயண்பாட்டுக்கு முழுசா வருவதற்கு முன்பே சிட்டுகுருவியெல்லாம் அழிய துவங்கியிருச்சு ஆனா இப்போதான் எல்லோரும் சும்மா வெத்து கூப்பாடு போடுறீங்கன்னு சொன்னேன், அவ்ர் எனனை ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு எல்லோருமே இப்போத்தான் ஆராய்ந்து கண்டு பிடிச்சிருக்காங்க, நீங்க என்ன இப்படி சொல்றீங்கன்னு, சற்று எகத்தாளமாகவே கேட்பது போல் பேசினார்...


நான் கேட்டேன், உங்க வீட்ல குருவி கூட கட்டுனா கலைப்பீங்களான்னு... அவர் அது குடும்பத்துக்கு ஆகாது... எங்க வீட்ல எங்க தாத்தா காலத்துல இருந்தே வீட்ல குருவி கூடு கட்ட வாய்ப்பாக நாங்களே ஏதாவது செய்து வைப்போம். அதுனால எங்க வீட்ல எப்பவுமே ரெண்டு குருவி கூடாவது இருக்கும் ஆனா இப்போ நாங்க காரைவீடு கட்டின பிறகுதான் இல்லைன்னு சொன்னார்....

இதுதான் உண்மை சிட்டுகுருவி பல காலத்துக்கு முன்பே அழிய துவங்கியிருக்கு அதுனாலதான், சிட்டு குருவி இனத்தை காப்பாற்ற நம் முன்னோர்கள், சிட்டு குருவி வீட்ல கூடு கட்டினா நல்லதுன்னு சொல்லி நம்மை சிட்டுகுருவி இனத்தை காப்பாற்றும்படி செய்தார்கள்... முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல அவர்களுக்கு தெரியாதா சிட்டுகுருவிக்கும் நம்ம குடும்பத்துக்கும் என்ன சம்பந்தம்ன்னு... நமக்கு இப்படி சொன்னாத்தான் நாம் ஒழுங்கா கடைபிடிப்போம் தெரிஞ்சு சொல்லி வச்சிருங்காங்க....

சும்மா எதுனாலும் அறிவியல் வளர்ச்சியையே முழுசும் குற்றம் சொல்லிகிட்டு.... கொஞ்சம் கூட யோசிக்கிறதே இல்லை...

ரயில் பயணங்கள்

 
  நீங்க என்ன வேணுமானாலும் நினைச்சுக்கோங்க... பஸ் பயணிகளை விட ரயில் பயணிகளிடம்தான் மனித நேயம் அதிகம்...

     பஸ் பயணத்தின் போது பக்கதிலிருக்கும் பயணியோடு சகித்து கொண்டு பயணிக்காத பயணிகூட ரயில் பயணத்தில் சகித்து கொள்வதோடு அல்லாமல் உதவி கொண்டும் உறவாடி கொண்டும் பயணிக்கிறார் அது ஏனென்று எனக்கு புரியவில்லை...

     பல வருடங்களாக எனக்கு எனது பயண அனுபவங்களை எழுத தோணும் ஆனால் நான் பயணங்கள் பற்றி எழுதாமல்.  நான் அங்கு மொபைல் போனில் எடுத்த படங்கள் பற்றி மட்டுமே சிறு குறிப்புகள் எழுதினேன்... ஆனால் இந்த முறை நான் சென்ற ஒரு ரயில் பயணத்தில் கண்ட நிகழ்ச்சியை சொல்ல வேண்டுமென மனது சொல்லி கொண்டே இருக்கிறது, ஆகவே இந்த பதிவு... நண்பர்களே....

        அன்று மதியம் ஒரு மணிக்கு நாங்கள் பயணிக்க வேண்டிய ரயில், ரயில் நிலையத்திலிருந்து புறப்படும், நானும் எனது மனைவியும் ரயில் நிலையம் வந்தடைந்த போது 12: 55 எனவே அவசர அவசரமாக ரயில் நிலையத்துள் நுழைந்து நடை மேடை எதுவென தேடி D1 பெட்டி வந்து நிற்குமிடம் தேடி நாங்கள்  நிற்கவும் ரயில் வந்து சேரவும் சரியாக இருந்தது அப்பாடா சற்று நிம்மதியாக இருந்தது சரியான நேரத்திற்க்கு வந்து விட்டோம் என்று,  படுக்கை வசதி இல்லாமல் அமர்ந்து செல்லும் வசதி கொண்ட பெட்டி அது, நாங்கள் ரயிலில் ஏறி கையிலிருந்த பைகளை கேரியரில் பார்வையில் படும் படியாக வைத்துவிட்டு எங்களது இருக்கையில் அமரவும் வண்டி நகரவும் சரியாக இருந்தது.

            இப்போது பக்கத்தில் எதிரில் பக்கவாட்டில் யார்யாரெல்லாம் பணிக்கிறார்கள் என நோட்டம்விட ஆரம்பித்தேன். நான் மூன்று பேர் அமரும் இருக்கையில் நடுவிலும் எனது வலதுபுறம் ஜன்னல் ஓரத்தில் சிவப்பு டீசர்ட்டில் ஒரு சுமார் ஐம்பது வயதில் சற்று இளமையாக ( டை அடிச்சு) ஒருவரும் எனக்கு இடதுபுறம் எனது மனைவியும் அதற்கு இடது புறம் நடை பாதையும் இடது பக்கவாட்டில் சிவப்பு டீசர்ட் டின் குடும்பமும் அவர்களுக்கு எதிர்புறம் தோழிகளாக மூன்று பெண்களும் எங்களுக்கு எதிர்புறம் இருக்கையில் ஒரு வயதான தம்பதியரும் ஒரு சிறு குழந்தையுமாக எங்களது பயணம் தொடங்கியது,,,

         பக்கவாட்டு இருக்கைக்கு எதிர்புற இருக்கையில் அமர்ந்து வந்த தோழிகள் மூன்று பேரும் கலகலப்பாக பேசிக் கொண்டும் தாங்கள் கொண்டு வந்த பலகாரம் தின்பண்டங்களையும் எடுத்து ஒருவருக்கு ஒருவர் கொடுத்து சாப்பிட்டு  கொண்டு பேசிக்கொண்டு வந்தார்கள்...  அவர்கள் கலகலப்பாக வந்ததாலோ என்னவோ அவர்களை நான் அவ்வப்போது கவனித்து கொண்டே வந்தேன். அதில் ஒருவர் மட்டும் சற்று நிறம் மங்கலான கலரில் சேலை உடுத்தி பார்க்க கிருத்துவர் போல் பொட்டு வைக்காமல் இருந்தார். மற்றவர்கள் இருவரும் இந்து பெண்கள் என பார்த்தவுடனே பளிச்சென தெரியும்படியாக இருந்தார்கள்.

   இப்படியே பயணித்து கொண்டிருக்க அந்த தோழிகள் மூவரும் ஏதோ சீரியசாக பேச ஆரம்பித்தார்கள். அவர்கள் சத்தம் கூட குறைந்து சற்று கசு புசுன்னு பேசுவது வெளியில் கேட்காமல் பேசிகொண்டே வந்தார்கள்...  அப்போது அந்த கிருத்துவ பெண் மட்டும் ஏதோ மறுக்கிறார் என்பது மட்டும் புரிந்தது, இப்படியே சிறிது நேரம் போய் கொண்டே இருக்க...  மற்ற இரு பெண்களில் ஒருவர் அவருடைய கைபையை திறந்து உள்ளே இருந்த ஸ்டிக்கர் பொட்டை எடுத்தார்... அப்போது அந்த கிருத்துவ பெண் மறுத்தார்... நானும் எனது மனைவியும் சற்று சுவராசியமாக கவனிக்க ஆரம்பித்தோம், அப்போது அந்த இந்து பெண் அந்த கிருத்துவ பெண் தடுத்தும் அவர் நெற்றியில் அந்த ஸ்டிக்கர் பொட்டை ஒட்டினார்... ஒட்டிவிட்டு எங்களுகாகவாவது வைத்துகொள் இப்படி உன்னை பார்ப்பதற்க்கு எங்களுக்கு ரெம்ப கஷ்டமாக இருக்கிறது என அன்புக் கட்டளையிட்டார். மற்றொரு தோழி நாம் ஊரை விட்டு ரெம்ப தூரம் வந்துவிட்டோம் நீ ஒன்னும் சங்கடப்பட வேண்டாம் என்றார். எனக்கு அப்போதுதான் ஒன்று புரிந்தது. அவர் கிருத்துவ பெண் இல்லை கணவரை இழந்தவர் என்று. ஆனால் அவர் மனதில் சற்று நெருடலுடனே அதை ஏற்று கொண்டிருப்பது தெரிந்தது. அதன் பின்னர் சிறிது நேரம் மூவரும் சற்று கலகலப்பு இன்றி பேசிக்கொண்டே வந்தார்கள். பிறகு பழையபடி கலகலப்பானர்கள் தோழிகள்...  அப்போது பொட்டு வைத்துவிட்ட தோழி சொன்னார். அந்த கணவனை இழந்த பெண்னை பார்த்து, உன்னை பார்ப்பதற்க்கு இப்ப எப்படியிருக்கு தெரியுமா? ரெம்ப அழகா பழைய மாதிரி எனக்கு பிடிச்சமாதிரி சந்தோசமா இருக்கு என்று முகம் மலர்ந்து கொண்டே ஒரு கையால் அவரை கட்டியணைத்து கொண்டு கண்கலங்க அருகே இருந்த மற்றொரு தோழியும் அவர்களிருவரையும் இரு கைகளால் தழுவி கொண்டே உணர்ச்சி பெறுக்கில் இப்போ எல்லோரும் பொட்டு வைத்து கொள்கிறார்கள் நீதான் யோசிக்கிற... நீயும் இனிமேல் பொட்டு வச்சுக்கோ என்று கலங்க ஆரம்பித்தார். அந்த கணவனை இழந்த பெண் மிகவும் நெகிழ்ந்து தோழியரை அனைத்து கொண்டு உணர்ச்சி மேலீட்டால் மிகவும் கலங்கித்தான் போனார்  எனக்கும் அவர்களின் செய்கை கண்டு சற்று கண் கலங்கித்தான் விட்டது. அற்புதமான நட்பு அருமையான் தோழிகள்...  உண்மையிலேயே அந்த பெண்ணுக்கு பொட்டு வைத்தவுடன் நன்றாகத்தான் இருந்தது..

     அதன் பின்பு அவர்கள் சாப்பிட தயாரானார்கள். சாப்பிட்டு கொண்டும் பேசிகொண்டும் வந்தார்கள். கணவனை இழந்த அந்த பெண் இப்போது சகஜமான நிலைக்கு வந்துவிட்டார். தனது கைபேசியை எடுத்து போன் செய்வது போல் யாரும் அறியாமல் தனது பொட்டு வைத்த முகத்தை கைபேசியில் பார்த்து கொண்டார். அவ்வப்போது அவருடைய கை அவரது நெற்றி பொட்டை தொட்டு பார்த்து கொண்டே வந்தது... அவருக்கு உள்ளூர ஒரு மகிழ்ச்சி இருக்கவே செய்தது என்பதை அவர் பேசும் முகபாவனையில் என்னால் உணர முடிந்தது...

    இப்போது  எங்களுக்கு எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த வயதான தம்பதியர்களுக்கு சில இருக்கைகள் தள்ளி இருந்த ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் எழுந்து வந்து முதியவருக்கு சாப்பாட்டு பார்சலை கொடுத்தார். அந்த முதியவர் சாப்பாட்டை வாங்கும்போதுதான் கவனித்தேன் அந்த முதியவருக்கு இருகைகளும் சரியாக ”வெளங்கவில்லை”  கருநீலகலர் முழுக்கை சட்டை கைலி அணிந்து மிஸ்டர் பீம் போல் தோற்றமளித்தார்... அவருடைய கைகளில் பல ஆண்டுகளுக்கு முன் தீக்காயங்கள் ஏற்பட்டு இருக்க வேண்டும் அதன் அடையாளங்கள் தெரிந்தன. அந்த ஒத்துழைக்காத கைகளால் தனது சாப்பாட்டு பார்சலை மடியில் வைத்து பிரித்து அதிலிருந்த லெமன் சாதமும் அதற்கு துனையாக இருந்த அவித்த முட்டையையும்  சாப்பிட  இடது கைவிரல் இடுக்கில் ஒரு சிறு கரண்டியை இடுக்கி கொண்டு கரண்டியை பயண்படுத்தி சாப்பிட தொடங்கினார். அப்போது தவறி சிறிது சாப்பாடு சிந்தி கீழே விழ அவருக்கு எதிர்புறம் அமர்ந்திருந்த சிவப்பு டீசர்ட் எழுந்து கொண்டு அய்யா மெதுவா அவசரமில்லாம் நல்லா சாப்பிடுங்கன்னு சொல்லிவிட்டு, அவருக்கு நல்ல இடவசதி செய்துவிட்டு எழுந்து நடைபாதையில் நின்று கொண்டார். அந்த முதியவர் சாப்பிடும் போது மடியில் சிந்தி சிதறி தன்னால் முடிந்த அளவுக்கு ரெம்ப பக்குவமாகவே சாப்பிட  தொடங்கினார். அவருடைய மனைவியும் அவருக்கு சாப்பிட உதவினார் வாயை துடைத்தார், மெதுவா சாப்பிடுங்கன்னு கனிந்தார், அப்போது அந்தம்மாவிற்க்கும் ஒரு சாப்பாட்டு பார்சல் வந்தது, அந்த முதியவர் நான் சாப்டுக்கிறேன் நீ சாப்பிடுன்னு தனது குளரும் வாயினால் அந்தம்மாவை சாப்பிட்ட சொல்லி சாப்பிட வைத்தார், அந்தம்மா அவருடைய சாப்பாட்டை சிறு குழந்தைகளுக்கு பிசைந்து ஊட்டுவது போல் பிசைந்து பிசைந்து தனக்கே ஊட்டி கொண்டும் வாயில் சில பற்கள் மட்டுமே இருந்ததால் சாப்பாட்டில் இருந்த உளுந்தம்பருப்பு போன்றவைகளை வாயினுள் விரலைவிட்டு தோண்டி எடுத்து இருக்கையின் மீதே வைத்து கொண்டும் சாப்பிட்டு கொண்டிருந்தார். அவர்களுக்கு சாப்பாடு கொடுத்த அந்த நபர் அவர்களுடைய மகனாக இருக்க வேண்டும் அவர் இப்போது அவர்களின் அருகில் நின்று கொண்டு கையில் தண்ணீர் பாட்டிலில் மூடியை திறந்து வைத்துக் கொண்டு அவ்வப்போது அவர்களுக்கு வாயில் தண்ணீர் கொடுத்து கொண்டும், அவர்கள் சிந்திய சாப்பாட்டை துடைத்து கொண்டும் சாப்பிடவைத்தார். அப்போது சிரிப்பு நடிகர் நாகேசுக்கு சுடிதார் போட்டது போல் ஒரு பெண் வந்தார், அவரும் அவர்களை நன்றாக சாப்பிடும்படி கூறினார், சிறிது ஊறுகாயும் சாப்பிட கொடுத்தார் அந்த முதியவர்களின் மருமகள். அவர்கள் சாப்பிட்ட பின் அவரது மகன் அந்த பார்சல் பேப்பர்களை வாங்கி கொண்டு அவர்களையும் சுத்தம் செய்து அவர்கள் சாப்பிட்ட இடத்தையும்  சுத்தம் செய்தார். அவர் மகன் மருமகள் வீட்டில் எப்படி இருப்பார்களோ ஆனால் ரயில் பயணங்கள் தாய்தந்தையை பிள்ளைகள் பக்கத்திலிருந்து கவனித்து கொள்ளும்படி செய்திருக்கிறது...  பார்க்கவே சற்று மனசுக்கு இதமாகத்தான் இருந்தது... இப்போது சிவப்பு டீசர்ட் தனது இருக்கைக்கு வந்தமர்ந்தார்.
 
   அப்படியே பயணித்து கொண்டிருக்க அந்த நாகேசும், அந்த நாற்பதும் ஒரே இருக்கையில் நெருங்கி அமர்ந்து கொண்டு இருவரும் சீண்டி கொண்டும் அந்த பெண்ணின் தொடு திரை கைபேசியில் ( நாற்பதிடம் சாதாரண கைபேசி ) பார்த்து  கொண்டும் வந்தார்கள். சிறிது நேரத்தில் அவர்கள் இறங்க வேண்டிய நிலையம் வரவே இறங்கி கொண்டார்கள்.

 இப்போது எங்களின் இருக்கைக்கு எதிர் இருக்கைக்கு இரு சகோதரிகளும், ஒரு சகோதரியின் கணவரும் அவர்களது உறவினர் ஒரு பெண்ணும் வந்தார்கள்.  சகோதரிகளில் ஒருவர் கீதாம்மா, அவரது கணவர் கீதாப்பா அவர்கள் அவர்களை அப்படித்தான் அழைத்து கொண்டார்கள்,
  எதிர் இருக்கையில் கீதாப்பா, கீதாம்மா, அவரது சகோதரி அமர்ந்து கொள்ள பக்கவாட்டு இருக்கையில் அந்த உறவுபெண்ணும் அமர்ந்து வந்தார்கள்.

 கீதாப்பா, பசிக்குது சாப்பிடல்லாம்ன்னு சொன்னார். கீதாம்மா நீங்க சாப்பிடுங்க நாங்கள் சிறிது நேரம் கழித்து சாப்பிடுகிறோம்ன்னு சொல்லி அவருக்கு கையில் ஒரு பேப்பர் தட்டை கொடுத்து விட்டு புளிசாதத்தை பறிமாற துவங்கினார், (அவர்களிருவரும் ஆசிரிய பணி ஓய்வு பெற்றவர்களாக இருக்க வேண்டும் அவர்களது பேச்சில் அப்படித்தான் தெரிந்தது) அப்போது கீதாப்பா சாப்பாட்டை  சிறிது தவறவிட்டார், சாப்பிட துவங்கினார் அப்போதும் மடியில் சிந்தி சிதறி கொண்டே சாப்பிட்டு வந்தார்... கீதாம்மா சிதறாம சாப்பிடுங்கன்னு சொல்லி செல்லமா கடிந்து கொண்டு சிந்தியவற்றை எடுத்து துடைத்து கொண்டும் வந்தார் பிறகு தயிர் சாதம் அதையும் சிதறியபடியே சாப்பிட்டு கொண்டு வந்தார் கீதாம்மா துடைத்து கொண்டே வந்தார்.
 நான் கூட நினைத்தேன் ஏன் நன்றாகத்தானே இருக்கிறார். சாப்பிட கூட தெரியாதவராக இருக்கிறாரேன்னு. கீதாப்பா சாப்பிட்டவுடன் கீதாம்மா சொன்னார் ஒன்னரை ஆள் உக்காருர இடத்திற்கு மூனு பேர்ன்னு சொல்லி மூனு டிக்கெட் வாங்கிவிட்டார்கள் (அவர்கள் சைஸ் அப்படி) நீங்கள் எதிரே வாசலுக்கு அருகில் போய் நின்று கொள்ளுங்கள் என்றார். அவரும் சரி என்று சொல்லி தலையாட்டி விட்டு கீதாம்மாவின் பார்வையில் படும்படியாக போய் நின்று கொண்டு வந்தார். சகோதரிகள் இருவரும் வசதியாக அமர்ந்து பயணித்து வந்தனர், அவ்வப்போது கீதாம்மா கீதாப்பாவை அழைப்பார் அவர் வந்தவுடன் அவரது மேல் சட்டை பையில் வைத்திருக்கும் தொடுதிரை போனை எடுத்து பேசுவார் பேசி முடித்துவிட்டு அவரது (கீதாப்பாவின்) சட்டை பையிலேயே வைத்துவிடுவார், பிறகு கீதாப்பா பழையபடி வாசலருகில் சென்று நின்று கொள்வார் இப்படியே பலமுறை, பிறகு சோமாஸ், வடை, டீ விற்று வருவதை கீதாம்மா வாங்குவார், கீதாப்பாவை அழைத்து பணம் கொடுக்க சொல்வார், அவர் பணத்தை கொடுத்துவிட்டு பழைய இடத்துக்கே சென்று நின்று கொள்வார்.. இப்படியே அவர்கள் பயணித்து கொண்டிருந்தார்கள்.

 நான் என் மனைவியிடம் பசிக்கிறது நாமும் சாப்பிடுவோமா என்றேன், சரி என்று சொல்லி இருக்கைக்கு கீழே குச்சிபையில், இரண்டு சிறிய  எவர்சிலவர் டப்பாவில் கொண்டு வந்திருந்த தக்காளி சாதத்தை எடுத்து  எனக்கு ஒன்று கொடுத்து விட்டு அவரும் ஒன்றை வைத்து கொண்டு சாப்பாட்டுக்கு துனையாக முன்பே வாங்கி வைத்திருந்த பருப்பு வடையையும் கொடுத்தார்,
 நாங்கள், இருவரும் சாப்பிட்டு கொண்டே சாப்பாடு நன்றாக இருப்பது பற்றி பேசிக்கொண்டே கொண்டே வந்தோம், நான் அப்போது சொன்னேன் எல்லோரும் எப்படி தனது புருசனை நன்றாக கவனித்து சாப்பிட செய்கிறார்கள் நீயும் இருக்கியே... என்னை கண்டு கொள்ளவே இல்லையென்று சொன்னேன். அவ்வளவுதாங்க என்மனைவி போட்டாளே ஒரு போடு, எல்லோரும் குழந்தைகளுடன் வந்திருக்கிறார்கள்.  ஆனால் நான் மட்டும்தான் புருசனோடு வந்திருக்கிறேன்னு.....

அவ்வளவுதான் நான் அதற்குமேல் ஒன்றுமே பேசவில்லை....
மனசுக்குளே நம்ம பொண்டாட்டி சூப்பர்...  நம்மளை எப்படி மரியாதையா வச்சிருக்கான்னு நெனைச்சு... நெனைச்சு மகிழ்ந்தபடியே பயணித்தேன்....

ஏழு கன்னிமார்










சப்தகன்னியர்:  பிராமி - மகேசுவரி - கவுமாரி - வைஷ்ணவி - வராகி - இந்திராணி - சாமுண்டி 

வெளக்கமாறு...


சிவன் பார்வதி


தேவர்களை காப்பதற்காக அந்த விஷத்தை சாப்பிட்டார் ஈசன். அன்னை சக்தி பதறிப்போனாள். உலக ரட்சகனான தன் கணவனின் உடலுக்குள் விஷம் சென்றால் அனைத்து உயிர்களும் அழிந்துவிடுமே என்று கண்டத்தில் கைவைத்தாள் அன்னை. விஷம் அன்னையின் கைபட்டு கழுத்து பகுதியில் அப்படியே நின்றது. ஈசன் திருநீலகண்டன் ஆனார். 

வரலாறு




          இதையெல்லாம் பாத்துபுட்டு இனி மேலும் வெள்ளைகாரன் தான் நமக்கு நாகரீகத்தையும் சுத்தத்தையும் சொல்லி கொடுத்தான்னு சொல்லுவீங்க....
  உலகத்துக்கே ஒன்னுக்கு ரெண்டுக்கு போறது எப்படின்னு சொல்லி கொடுத்ததே நாமதான் இப்ப புரியுதா..!!!!

ஒரே... கூட்டமா இருக்கு


குட்டை உயரமான கதை

               இன்று  ஒரு குட்டை ஒரு நெட்டைக்கு முட்டு கொடுத்த நாள்
                                                        நவம்பர் மூணு

ஆமாங்க நான் அன்னைக்கு ( அன்றைக்கு) என் அம்மாவிடம் அப்படித்தான் கேட்டேன்.

 ஏம்மா நான் இவ்வளவு வளத்தியா இருக்கேனே, அந்த பிள்ளை ரெம்ப குட்டையா இருக்கே... ன்னு

 அதுக்கு எங்கம்மா... 

 டேய் சின்னகண்ணு... குட்டையா இருக்குற பிள்ளதாண்டா வ்யசானாலும் கிழவியா தெரியாம அப்படியே இருப்பா... அதுனால இந்த பிள்ளயவே கட்டிக்கோடா பாக்கவும் நல்லாயிருக்கா, பாக்க அப்பாவியா தெரியுறா... 

எங்கம்மா எதை வச்சு பாத்துவுடன் கணிச்சாங்களோ எனக்கு தெரியாது... 

எங்கய்யா... 

என்ன? உன் சின்ன மகன் என்ன சொல்றான்...

எங்கம்மா...

அவன் என்ன சொல்லபோறான் நாம சொன்னா சரின்னு கேட்டுக்க போறான்...
எங்கய்யா...
நாம சொல்றது இருக்கட்டும் அவன் என்ன சொறான்னு கேளு...

சின்னகண்னு நீ சரின்னு சொல்லிடேன்னு அம்மா சொல்லிறட்டா...
 நான்.... அரை மனசா குட்டையா இருக்காளேன்னு நெனச்சுகிட்டே வேறெதும் குறை சொல்ல முடியாமல்.... ம்ன்னு சொல்ல எங்கம்மா பச்சை கொடிகாட்ட...
எங்கய்யா...

 நான் சொன்னா என் மகன் மீறி ஒன்னும் சொல்ல மாட்டான்... சரின்னு கேட்டுக்குவான்...ன்னு சொல்ல எல்லோருக்கும்.. ச்ந்தோசமாகியிருச்சு..

உடனே எங்கம்மா... 

 பூவும் மிட்டாயும் வாங்கிட்டு வாங்க உறுதிபூ வச்சிறுவோம் ன்னு சொல்ல ஒருத்தர் நான் போய் வாங்கி வருகிறேன்ன்னு.. கிளம்ப எனக்கே அப்போதான் கொஞ்சம் குதுகலம் ஆச்சு... அட எனக்கும் ஒரு பொண்டாட்டி வர போறான்னு எனக்கு அவ பேரு கூட தெரியலை...

பேரு என்னான்னு எப்படி தெரிஞ்சுக்கிறது.. யாருகிட்ட கேக்குறது... ஒன்னும் புரியலை... இருந்தாலும் யாருகிட்டேயும் கேக்கவில்லை... கம்ன்னு இருந்தேன்...

அப்போ எங்கய்யா எங்கம்மாவிடம் போய்  உன்மருகள் கூட பேசு...
எங்கம்மா...

ஏன் நான் பேசாம யாரு பேசுவான்னு அகமும் முகமும் மலர சொல்ல...

எங்கய்யா...
அந்த பிள்ளைகிட்ட ( எனக்கு அப்போ அந்த பிள்ளைதான்) உன் பேரென்னமா... 

ஆகா நம நினைச்சதை நம்ம அய்யா கேட்டுட்டாறான்னு சந்தோசத்துல  பார்த்தும் பார்க்காது மாதிரி கேட்டும் கேக்காது மாதிரி இருந்து கிட்டு என்ன பேர்ன்னு தெரிஞ்சுக்க ஆசையா இருந்த போது.. அந்த பிள்ள பேர சொல்ல எனக்கு வெறும் காத்து சத்தம் மட்டுமே கேட்க... எங்கய்யா அப்படியான்னு கேட்க...

எனக்கு அய்யோ என்னா பேருன்னு எனக்கு கேக்கலையேன்னு  சொல்லவும் முடியாம திரும்ப கேக்கவும் முடியாம... கம்ன்னு இருந்து கிட்டேன்...  அப்புறம் மறுநாள் யாருமில்லாத போது எங்கம்மா கிட்ட அந்த பிள்ள பேரு என்னமான்னு வெட்கத்தை விட்டுவிட்டு மெதுவா கேட்க எங்கம்மா நேத்து உன்முன்னாடிதானடா பெயரை சொல்லுச்சுன்னு சொல்லிட்டு போக எனக்கு என்னவோபோல் ஆகி திரும்பவும் கேக்காமல் குழப்பத்துலேயே... பல நாளாகியும் குழப்பம் தீராமல் இருந்த சந்தேகம், வீட்ல அவுங்களா பேசிகிட்டு இருக்கும் போது தற்செயலா புதுசா வந்த பேரை கவனித்து பின் புரிந்து தெரிந்து கொண்டேன் அப்புறமா பத்திரிக்கை எழுதும் போதுதான் அந்த பிள்ளையின் பேரையே உறுதி செய்து கொண்டேன்... என்ன செய்ய அப்போ இந்தபாடுதான் பட வேண்டியதிருந்தது..... 
         
    இப்படி முடிவாகித்தான்  அந்த குட்டை இந்த நெட்டைக்கு முட்டு கொடுத்தார்...

அடடே...  அதுக்குள்ள முப்பது வருசமாகி போச்சான்னு எனக்கே ஆச்சரியமா இருக்கு அட இத்தனை வருசத்துல ஒருநாள் கூட ஒரு சேலை வேணும் ஒரு நகைவேணும்ன்னு கூட கேட்டதே கிடையாது, ஒரு நச்சரிப்பு கிடையாது... எந்த உறவுகளையும் புண்படுத்தியதே கிடையாது...  அத்தனை உறவுகளுக்கும் அவளை பிடிக்கும். என்னுடைய கோட்டிதனத்திற்கும் கோமாளிதனத்திற்கும் மிகவும் பொறுத்தமாய் எப்படித்தான் எங்கம்மாவும் எங்கய்யாவும் தேர்ந்தெடுத்தாங்களே... அவர்களுக்குத்தான் தெரியும்... இல்லை என்னை புரிந்து கொண்டு தன்னையே முழுவதுமாக மாற்றிக்கொண்டாளோ தெரியவில்லை... இவ்வளவு காலமாக நான் கொண்டாடியளை கொண்டாடினால் மட்டும் போதாது நான் நன்றியும் செய்ய வேண்டியவனென்று...  இப்போதுதான் புரிகிறது. அது புரிந்த போதுதான்  இவள் குட்டையல்ல உயர்ந்தவள்ன்னு...தெரிகிறது..