சமணர் மலை கீழக்குயில்குடி மதுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமணர் மலை கீழக்குயில்குடி மதுரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சமணர் பள்ளி


அரசு அறிவிப்பு மட்டும் வைத்து என்ன பயண் பாதிமலையை காணவில்லை
 கீழகுயில்குடி கருப்பசாமி கோவில் அருகில் உள்ள மண் சாலை வழியே சிறிது தூரம் சென்றால் இந்த இடம் உள்ளது. வழியில் பெரிய பெரிய மரங்கள் உள்ளன ( இன்னும் எத்தனை காலத்திற்க்கோ )


சமணர்களின் குகை சிற்பங்கள் தீர்த்தங்கர்களின் சிற்பங்களில் பெண் சிற்பமும் உள்ளது. தீர்த்தங்கர்களில் பெண் தீர்தங்கர்கள் இல்லை, எனவே இது இடைகாலத்தில் இடை சொருகலாகவும் இருக்கலாம்.




இதை சமணர்களின் பள்ளி என்கிறார்கள், பள்ளியாக செயல்பட்டதற்க்கான எந்த அடையாளமும் இல்லை, 

இந்த சிற்பம் மிகவும் அழகாக மனதை கவரும் வகையில் உள்ளது.

சமணர் மலை


கீழக்குயில்குடி ஐய்யனார், கருப்பசாமி கோவில் அருகில் உள்ள மலையான சமண மலைக்கு இலகுவாக ஏறி செல்ல அமைக்கப்பட்டுள்ள படிகள்
  மலை மேல் இயற்கையாக அமைந்த ஒரு ஊற்று பகுதியை பேச்சிப்பள்ளம் என்று அழைக்கிறார்கள். பேச்சிப்பள்ளத்தில்  தீர்த்தங்கரர் சிற்பங்களும், வட்டெழுத்துக் கல்வெட்டுக்களாக செதுக்கியவர் பெயர்களும் உள்ளன. இங்கு பாகுபலி, பார்சுவநாதர், முக்குடைநாதர்( தலைக்கு மேல் மூன்று குடை போன்ற அமைப்பு உள்ளதால்) சிற்பங்கள் உள்ளன. கீழே இந்த சிற்பங்களை நன்கு காண்பதற்காக தனிதனியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்திலிருந்து சற்று மேலே சென்றால் விளக்கு தூண் ஒன்று உள்ளது. அதன் அருகில் கண்ணட எழுத்துக்களாலான கல்வெட்டும் உள்ளது.










கல்வெட்டில் உள்ள எழுத்துக்கள் எந்தமொழி என்று தெரியவில்லை விசாரித்தால் வட்டெழுத்து என்கிறார்கள் (வட்டவட்டமாக எழுதிருப்பதால் இருக்குமோ?)









தீர்த்தங்கர் சிற்பங்களின் ம்ற்றுமொரு கோணம்

கீழகுயில்குடி சமணமலை கருப்பசாமியும் ஐயனாரும்






பூரணகலை ஐயனார் புஷ்பகலை
கருப்பசாமி







 மதுரை, தேனி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நாகமலை புதுக்கோட்டைக்குத் தெற்கே அமைந்துள்ள ஒரு சிறியமலை சமணர் மலை ஆகும். அதன் அடிவாரத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதத்தில் ''பாவாடை விழா'' நடைபெறுகிறது. அதை இன்றும் பிராமணர்கள் செய்கிறார்கள். அன்றைய தினத்தில் சோறு சமைத்து அதை நைவேத்தியம் செய்து, பின்பு  ஊரில் உள்ள அனைவருக்கும் கொடுக்கிறார்கள், முத்தாலம்மனின் சிலையை களிமண்ணால் செய்து வைத்து அதற்கு பூஜை செய்தபின் அதை ஊரில் உள்ள குளத்தில் கரைத்து விடுகிறார்கள். திருவிழாவில் ஆறு களிமண் குதிரைகள் செய்து வைக்கின்றார்கள். அன்று ஆடுகள் பலியிடப்படுகின்றன ஆலயத்தில் அனுமதி பெறாமல் ஊரில் உள்ளவர்கள் எந்த நல்ல காரியத்தையும் செய்வது இல்லை. இக்கோவில் சிற்பங்கள் சைவ, வைனவ திருவிளையாடல்களை குறிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த அய்யனார் கருப்பசாமி போன்ற தெய்வங்களை தேவர், நாடார் சமுதாயத்தவர்களே அதிக அளவில் வணங்கி வருகிறார்கள் எனவே சமணர்களுக்கும் இக்கோவிலுக்கும் எந்தவித தொடர்பும் இருக்க வாய்ப்பில்லை. முதலில் ஐயனார் மட்டும் இருந்த கோவிலில் காவல் தெய்வமாக கருப்பண்னசாமியும், மற்றவேறு பல தெய்வங்களும் பின்பு அமைக்கப்பட்டுள்ளது.