கோடிலிங்கம், ஸ்ரீ கைலாசலிங்க பர்வதவர்தினி கோவில் சுருளிமலை

















இந்த குகைகோவில் செயற்கையாக ஏற்ப்படுத்தப்பட்டுள்ளது இந்த குகைகோவில் இதனுள் பன்னிரண்டு ராசிகளின் படங்களும் பெயர்களும் எழுதப்பட்டுள்ளது, அதன் கருவறையில் அஷ்டலிங்கம் கம்பிகளின் மேல் அமைக்கப்பட்டுள்ளது, அதில் மேலே உள்ள படத்தில் ஒருவர் லிங்க அமைப்பிற்குள் அமர்ந்து உள்ளது போல் அமரவைத்து பூஜை செய்வார்கலாம், அப்படி செய்தால் அவர்களின் ராசிக்கு உள்ள தோசங்கள் விலகிவிடும் என்கிறார்கள். (புதுசா இருக்கே?)
 72 அடி உயர தியானலிங்கம் அமைக்க ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கப்பட்டு நன்கொடையை எதிர்நோக்கி காத்திருக்கிறது. இதை ஒரு தனியார் அறக்கட்டளை நடத்த திட்டமிட்டுள்ளது.
      முன்பெல்லாம்  சுருளிமலையில் பிச்சைகார சாமியார்கள் மட்டுமே இருந்து வந்தார்கள், திதி செய்பவர்கள் அவர்களாகவே சாமியை கும்பிட்டுவிட்டு பிச்சைகாரர்களுக்கு  அன்னதானம் செய்துவிட்டு நிம்மதியாக சென்று கொண்டிருந்தார்கள், ஆனால் தற்பொழுது புதிது புதிதாக மடாதிபதிகள் உருவாகி வருகிறார்கள், அதே போல் திதி கொடுப்பதற்க்கும் புதிது புதிதாக அமைப்புகளும் உருவாகி வருகின்றன. இனி சுருளிமலை என்னாவாகப்போகிறதோ!!!  

கருத்துகள் இல்லை: