பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் திருபட்டூர்






















திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 21 கி.மீ  தொலைவில்   உள்ளது திருபட்டூர்.திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில, சமயபுரம் வழியாக சென்று திருபட்டூர் அடையலாம், வியாழகிழமைகள் தோறும் விசேசமாக வணங்கப்பட்டு வருகிறது, வியாழக்கிழமைகள் மற்றும் திருவிழா காலங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.  பிரம்மபுரீஸ்வரர்     கோவில்  ஒருவரது தலைஎழுத்தை மாற்றும் கோவில் என்று சொல்லபடுகிறது. மேலும் தலையில் எழுதியிருந்தால் மட்டுமே ஒருவர் இந்த கோவிலுக்கு செல்ல முடியும் என்று நம்பப்படுகிறது .பிரம்மனுக்கு அருள் புரிந்ததால் சிவன் பிரம்மபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.  பிரம்மபுரீஸ்வரர் ஒரு சுயம்பு மூர்த்தி. கிழக்கு நோக்கிய மூலவர் போலவே,  சன்னதியின்  வெளி பிரகாரத்தில் தெற்கில், கிழக்கு நோக்கி தனி பிரம்மன் சன்னதி உள்ளது. தமிழகத்தில் (வட இந்தியாவில் பிரம்மனுக்கு மட்டும் தனியாக சன்னதிகள் உள்ளன) திருபட்டூரில்  மட்டுமே பிரம்மன் தனி சன்னதியுடன் காணபடுகிறார். திருபட்டூரில் உள்ள பிரம்மன் தலை எழுத்தை மாற்றும் சக்தி உடையவராக விளங்குகிறார். படைப்பாற்றல் உள்ள பிரம்மன் ஒரு முறை தனக்கும் ஐந்து தலை ஈசனுக்கும்   ஐந்து தலை என்று அகங்காரத்தில் இருந்தாராம். அதனால் ஈசனை மதிக்காமல்  இருந்தார்.    ஈசன் பிரம்மனுடைய அகங்காரத்தை அழிக்க நினைத்து ஐந்து தலைகளில் ஒரு தலையை கொய்து    விடுகிறார். அன்றிலிருந்துதான் பிரம்மன் நான்குமுகன் என அழைக்கப்படுகிறார், இதனால் பிரம்மன் படைப்பாற்றலை இழக்கிறார். அதனால் ஈசனிடம் சாப விமோசனம் வேண்டி பிரம்மன் திருபட்டூரில் ''பன்னிரு'' சிவ லிங்கங்களை பிரதிஷ்டை செய்து ஈசனை வழிபட்டு வேண்டுகிறார்.  அது கண்டு மகிழ்ந்த  ஈசன் பிரம்மனுக்கு மீண்டும் படைப்பாற்றலை மீண்டும்  வழங்குகிறார்.   மேலும், ஈசன் இங்கு வந்து பிரம்மனை வணங்குபவர்களுக்கு அவர்களது தலை எழுத்தை மாற்றி மங்களகரகமாக்கும்  ஆற்றலை வழங்குகிறார்.  திருபட்டூரில் உள்ள பிரம்மனின் பார்வை பட்டாலே போதும் சகல தோஷங்களும் விலகி நல்வாழ்வு அமையும்.   ஆனால் விதி இருப்பவர்கள் மட்டுமே இந்த தலத்திற்கு வர முடியும் என்றும் நம்பபடுகிறது.இந்த கோவிலில் முதலில் ஈசன்,பின்பு பிரம்மன், அம்பாள் என்று வணங்கிவிட்டு 36 நெய் தீபங்கள் ஏற்றி 9 முறை ஆலயத்தை வலம் வந்தால் சகல வித தோஷங்களும் விலகி விடும் என்று நம்பபடுகிறது. ஏழாம் எண்  ஆதிக்கத்தில் பிறந்தவர்களும் ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் பாதிக்கப்பட்டவர்களும் இந்த கோவிலில் வழிபட்டால் விசேஷ பலன்கள் உண்டாகும் என்று நம்பபடுகிறது. இங்கு ஜாதகங்களை கொண்டு வந்து பிரம்மன் காலடியில் வைத்து வணங்கி எடுத்து செல்கிறார்கள், இது பற்றி ஆலயத்துள்ளோரிடம் கேட்டதற்கு ஜாதகம் இல்லாவிட்டாலும் ராசி நட்சத்திரங்களை கூறி அர்ச்சனை செய்துகொள்ளலாம் என்று கூறினார்கள்,  கொடிமரத்தின் அருகில் உள்ள நந்திக்கு மேல் உத்திராட்சத்தினால் ஆன பந்தல் அமைத்துள்ளார்கள்.  ஈசன்  அம்பாளுடன் காட்சி தந்து பிரம்மனுக்கு இழந்த சம்பத்தை  மீட்டு  கொடுத்ததினால்  அம்பாளுக்கு  பிரம்மசம்பத் கௌரி என்று பெயர். மங்கள நாயகி என்று அம்பாளுக்கு மற்றொரு பெயரும் உண்டு .பிரம்மன் இங்கு தாமரை மேல் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.பிரம்மனுக்கு இங்கு எப்பொழுதும் மஞ்சள் அலங்காரம் மட்டுமே செய்கிறார்கள்.  பிரம்மன் வணங்கிய 12 லிங்கங்களில் பிரம்மபுரீஸ்வரர் தான் மூலவர் . இன்னும் 3 லிங்கங்கள் மூலவரின் வெளி  பிராகரத்தில் உள்ளது .அவை பழமலை நாதர் ,பாதாள லிங்கம் ( பள்ளத்தில் உள்ளது ) மற்றும் சுத்ததாநேஸ்வரர்.ஐந்தாவது லிங்கம் தாயுமானவர் ,அம்பாள் சன்னதிக்கு வெளியில் உள்ளது .அம்பாள் சன்னதிக்கு பக்கத்தில் வெளியில் நந்தவனம்  உள்ளது அங்கு தான் மீதம் உள்ள ஏழு லிங்கங்கள் உள்ளது.அவை மண்டூக நாதர் ஏகாம்பரேஸ்வரர் அருணாச்சலேஸ்வரர்,ஜம்புகேஸ்வர,காளத்தி நாதர், சப்த்ரிஷீஸ்வர்ர் என்பதாகும் .இங்கு தான் பிரம்ம தீர்த்தம் உள்ளது  இங்கு முருகன் வந்து வழிபட்ட ஈசன் கந்தபுரீஸ்வரர் என்ற பெயரில் உள்ளார்.முருகன் அசுரர்களை அழிக்க செல்லும் முன் இங்கு லிங்க ப்ரிதஷ்டை செய்து ஈசனை வழிபட்டு படை திரட்டி சென்றதாக வரலாறு.இதனால் திருபடையூர் என்ற பெயர் பின்பு மருவி திருபட்டூர்  ஆனது என்கிறார்கள் .இந்த கோவிலின் சிறப்புகளில் ஓன்று பங்குனி மாதம் 3 நாட்களில் சூரிய ஒளி சரியாக ஏழு நிமிடத்திற்கு சிவ லிங்கம் மேல் விழுகிறது. இங்கு மூலவரை தரிசிக்க ஏழு நிலைகளை கடந்து செல்லவேண்டும்    அப்பொழுதுகூட   இறைவனை   இயற்கையான வெளிச்சத்தில்  நன்றாக காணுமாறு உள்ளது.. வியாழ கிழமைகள் பௌர்ணமி நாட்கள் மற்றும் சதய நட்சத்திர தினங்களில் இங்கு மக்கள் அதிக அளவில் வருகிறார்கள். திருபட்டூரின் இன்னொரு சிறப்பு பதஞ்சலி முனிவர் ஜீவசமாதி உள்ளது. இங்கு பக்தர்கள் அமர்ந்து தியானம் செய்கிறார்கள், பிரம்மன் பிரசாதமாக நீரில் நனைக்கப்பட்ட மஞ்சள் வழங்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: