கீழகுயில்குடி சமணமலை கருப்பசாமியும் ஐயனாரும்






பூரணகலை ஐயனார் புஷ்பகலை
கருப்பசாமி







 மதுரை, தேனி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நாகமலை புதுக்கோட்டைக்குத் தெற்கே அமைந்துள்ள ஒரு சிறியமலை சமணர் மலை ஆகும். அதன் அடிவாரத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதத்தில் ''பாவாடை விழா'' நடைபெறுகிறது. அதை இன்றும் பிராமணர்கள் செய்கிறார்கள். அன்றைய தினத்தில் சோறு சமைத்து அதை நைவேத்தியம் செய்து, பின்பு  ஊரில் உள்ள அனைவருக்கும் கொடுக்கிறார்கள், முத்தாலம்மனின் சிலையை களிமண்ணால் செய்து வைத்து அதற்கு பூஜை செய்தபின் அதை ஊரில் உள்ள குளத்தில் கரைத்து விடுகிறார்கள். திருவிழாவில் ஆறு களிமண் குதிரைகள் செய்து வைக்கின்றார்கள். அன்று ஆடுகள் பலியிடப்படுகின்றன ஆலயத்தில் அனுமதி பெறாமல் ஊரில் உள்ளவர்கள் எந்த நல்ல காரியத்தையும் செய்வது இல்லை. இக்கோவில் சிற்பங்கள் சைவ, வைனவ திருவிளையாடல்களை குறிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த அய்யனார் கருப்பசாமி போன்ற தெய்வங்களை தேவர், நாடார் சமுதாயத்தவர்களே அதிக அளவில் வணங்கி வருகிறார்கள் எனவே சமணர்களுக்கும் இக்கோவிலுக்கும் எந்தவித தொடர்பும் இருக்க வாய்ப்பில்லை. முதலில் ஐயனார் மட்டும் இருந்த கோவிலில் காவல் தெய்வமாக கருப்பண்னசாமியும், மற்றவேறு பல தெய்வங்களும் பின்பு அமைக்கப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை: