கொஞ்சம் யோசிப்போமா ?


                                                               Image result for யோசி

நீங்கள் உங்களை, நாங்கள் தமிழர்கள், இந்தியர்கள், இந்துக்கள், கிருஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் என்று யாராகவேணும் சொல்லி கொள்ளுங்கள், ஏன் யாராக வேண்டுமானாலும் இருந்து கொள்ளுங்கள்... அது உங்கள்பாடு. ஆனால், மக்களை மதம் மாற்றம் செய்து அதன் மூலமாக தங்களுக்கு என் தேசத்தை அடிமையாக்கி ஆள நினைக்கும் கூட்டம் என் தேசத்திற்க்கு எதிரானவர்களே.. எந்தெந்த நாட்டில் எந்தவித வாழ்க்கை முறை அமைப்புகள் (மார்க்கம்) தோன்றியதோ அதையதை அந்தந்த நாட்டில் கடைபிடித்தால் போதும்.. மார்க்கங்கள் தோன்றியதும் அப்படித்தான் அந்தந்த இடத்திற்க்கு தேவையான மார்க்கங்கள் அந்த இடத்தி்ன் தேவை கருதியே உருவாகியுள்ளது அல்லது உருவாக்கப் பட்டுள்ளது அவ்வளவுதான், இந்தியாவுக்கு தேவையான மார்க்கங்கள் இந்தியாவிலே உருவாகியுள்ளது.. அது போதும் நமக்கு நம்மிடையே மிகமிக உயர்ந்த கருத்துக்கள் உண்டு. யாரும் யாரையும் மாற்ற தேவையில்லை.. மாற்றவும் கூடாது.. யார் எந்த கடவுளை வணங்கினால் என்ன? மனிதர்களை மனிதர்களாக நடத்துவோம்.. ஆனால் என் மார்க்கம் உயர்ந்தது.. எங்கள் ஆண்டவர்தான் உயர்ந்தவர்ன்னு சொல்லி மதம்மாறச் சொல்பவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன். அப்படியானால் உங்களின் ஆண்டவர்களை இன்று ஒரு அற்புதம் எல்லாரிடமும் சொல்லிவிட்டு செய்ய சொல்லுங்கள்.. உலகில் உள்ள எந்த மார்க்கத்தின் கடவுளுக்காவது சொல்லிவிட்டு செய்யும் தகுதி உண்டா? பிறகு ஏன் இந்த தேவையற்ற மார்க்கப் போராட்டங்கள் ? இந்த போரட்டங்களை நீங்கள் முன்னெடுக்க காரணம்தான் என்ன ? மீண்டும் இது பற்றி நிறைய யோசிப்போம்..

கருத்துகள் இல்லை: