எம்மதமும் சம்மதம்

அன்பு உறவுகளே..
இன்று இந்துகளில் பலர் மட்டுமே எம்மதமும் சம்மதம் ன்னு சொல்லி தாங்கள் எல்லாமத்தவரையும் ஆதரிப்பவர்கள் நடுநிலையாளர்கள்ன்னு சொல்லி கொண்டு திரிகிறார்கள்...


ஆனால், மற்ற மதங்களை பின் தொடர்பவர்கள் யாருமே எம்மதமும் சம்மதம் என்பதை ஏற்பது இல்லை... ஏன் தெரியுமா? ந்ம் முன்னோர்கள் நமக்கு வழிகாட்டியவர்கள் நம்மை இந்த வார்த்தைகளை சொல்லி நம்மை பழக்கப்படுத்தி விட்டார்கள்...

நம்மில் பலரும் இந்த வார்த்தையை பின்பற்றி எம்மதமும் சம்மதம் என்கிற நிலையில் இருப்பவர்கள்தான் நல்லவர்கள் பெருந்தன்மையானவர்கள் என்று கருதி கொண்டு இருக்கிறார்கள்..
ஆனால், நமக்கு வழிகாட்டிய நமது முன்னோர்கள் எந்த காலத்தில் எந்த சூழ்நிலையில் இதை சொல்லி வைத்தார்கள்ன்னு சற்று ஆராய்ந்து பார்த்தீர்களானால்தான் உண்மைகள் புரியவரும்...
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு நாம் இந்துக்களே இல்லை மாற்று மதத்தினர்தான் நம்மை அப்படி அழைத்தார்கள் ஆனால் அதற்க்கு முன்பாக நாம் எந்த மதத்தவராக இருந்தோம்ன்னு எத்தனை பேருக்கு தெரியும் என எனக்கு தெரியவில்லை...
தெரியாதவர்களுக்காக, ஒரு சிறுவிளக்கம்
நம்மிடையே,. "சண்மதங்கள்" என்று. கணபதி வழிபாடு காணாபத்யம், முருக வழிபாடு கௌமாரம், சிவன் வழிபாடு சைவம், அம்பிகை வழிபாடு சாக்தம், சூரிய வழிபாடு சௌரம், விஷ்னு வழிபாடு வைணவம் என்று ஆறு மதங்கள் இருந்தன.
அவைகள், யாவும் ஒரே மாதிரியான வழிபாட்டு முறைகளை கொண்டு ஆனால் முதன்மையான கடவுள்களாக ஒவ்வொருவரும் ஒவ்வொருவரை பின்பற்றி வந்தார்கள் அதை ஒன்றிணைக்கும் விதமாக இந்த கடவுள்களுக்குள் நமக்கு போலவே எல்லா் கடவுள்களுக்குள்ளும் கணவன் மனைவி மகன் மாமன் மச்சான் உறவுகளை ஏற்படுத்தி கதைகள் புனைந்து நம்மை ஒன்று படுத்தினார்கள் அந்த காலகட்டத்தில்தான் நமக்கு நமது முன்னோர்கள் "எம்மதமும் சம்மதம்" ன்னு சொல்லி வைத்தார்கள் அந்த சூழ்நிலையில் நம்மிடையே இஸ்லாமியம், கிருஸ்துவம் போன்ற மதங்கள் தோன்றவே இல்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
அதற்காக நான் மற்ற மதங்களை வெறுக்க சொல்லவில்லை, ஆனால் அவர்களுக்கு தனியாக எந்தவிதமான சலுகைகளும் வழங்க வேண்டியதே இல்லை.. அதே போல் இன்று நாம் இந்துகளாகிவிட்டோம் எனவே மற்ற மதத்தவரை போலவே நாமும் நம் மதம் மட்டுமே நமக்கு சம்மதம் என வாழலாம் அதுதான் நமது உயர்வான கலாச்சாரம் பண்பாடுகளை காக்கும் எனவே நாம் இந்து என்பதில் பெருமிதம் கொள்வோம்.. நமக்கு "நம்மதம்" மட்டுமே சம்மதம்..
ஆத்தியப்பன் அர்விந்த்

கருத்துகள் இல்லை: