சும்மா இரு

                                           
                                                                                                                                                       ''சும்மா இரு'' அப்படின்னா எதையும் பேசாமல் இருப்பது       அல்லது எந்த ஒரு வேலையையும் செய்யாமல் இருப்பது எனவும், அல்லது மனதை அடக்குதல் அல்லது மனதை கடந்து நினைவுகள் ஏதும் இல்லாமல் இருப்பது, என கருதியும் சொல்லியும் வருகிறார்கள், ஆனால் உண்மையில் ''சும்மா'' இருப்பதுன்னா ''எந்த நேரமும் ஒன்றிலேயே செயல்படுவதுதான்''. உதாரணமா,  ஒரே விசயத்தை திரும்ப, திரும்ப சொல்பவரை அல்லது  ஒன்றையே திரும்ப திரும்ப செய்பவரை நாம் ''சும்மா சும்மா அதையே சொல்லிக்கிட்டு இருக்கிறாய் எனவும்'' ''அதையே சும்....மா.. நோண்டிக்கிட்டு'' (செய்துகிட்டு) இருக்க (இருக்கிறாய்) பேசாம கம்னு இருன்னுதான் சொல்கிறோம். அப்படினா என்ன அர்த்தம் ஒன்றிலேயே நிலைத்திருக்காதே என்றுதானே அர்த்தம். அப்ப சும்மா இருப்பதுன்னா என்னான்னு இப்போ புரிந்திருக்கும்னு நினைக்கிறேன், மாற்று கருத்து இருந்தால் மறுத்தளியுங்களேன்.    

கருத்துகள் இல்லை: