என்ன நான் சொல்றது

   நாம்  ஆண் அதிகாரிகளையோ அல்லது சற்று வயது முதிர்ந்த ஆண்களையோ சந்திக்கும்போது மரியாதையாக அழைக்கும் பொருட்டு சார் என்றும் அய்யா (ஐயா) என்றும் அழைக்கிறோம், அதேபோல் பெண் அதிகாரிகளையும் சற்று வயது வயது முதிர்ந்த பெண்களை அம்மா என்றும் மேடம் என்றும் அழைக்கின்றோம். அதே போல் சின்ன குழந்தைகளையும் அம்மா அய்யா எனவும் அழைத்து கொஞ்கிறோம்,
      ஆனால்  ஆங்கில வார்த்தைகளுக்கு விளக்கம் சொல்பவர்கள் சார் (SIR)   என்பதற்கு '' Slave I Remain'' அதாவது நான் உங்களுடைய அடிமை  என்பதை நினைவூட்டுகிறேன் என்பதே என்றும்  ஒரு காலத்தில் அடிமைகள் சொன்ன வார்த்தை என்று விளக்கம் சொல்கிறார்கள்,
      தமிழர்கள் கலாச்சாரப்படி அய்யா (ஐயா) என்பது பெற்ற தகப்பனை மட்டுமே குறிக்கும் வார்த்தை, அதே போல் அம்மா என்பதும்  பெற்ற தாயை மட்டுமே குறிக்கும் வார்த்தை  எனவே அந்த வார்த்தையை மற்றவர்களுக்கு பயண்படுத்த முடியாது. எனவே மற்றவர்களை மரியாதையாக அழைப்பதற்கு ஆண் பெண் என எந்தவித பாகுபாடுமில்லாத புதுசா ஒரு வார்த்தை கண்டுபிடிக்கனும், அப்படி அழைப்பதையும் சட்டமாக்கனும் என்ன நான் சொல்றது, சரிதானா???

கருத்துகள் இல்லை: