சமணர் மலை


கீழக்குயில்குடி ஐய்யனார், கருப்பசாமி கோவில் அருகில் உள்ள மலையான சமண மலைக்கு இலகுவாக ஏறி செல்ல அமைக்கப்பட்டுள்ள படிகள்
  மலை மேல் இயற்கையாக அமைந்த ஒரு ஊற்று பகுதியை பேச்சிப்பள்ளம் என்று அழைக்கிறார்கள். பேச்சிப்பள்ளத்தில்  தீர்த்தங்கரர் சிற்பங்களும், வட்டெழுத்துக் கல்வெட்டுக்களாக செதுக்கியவர் பெயர்களும் உள்ளன. இங்கு பாகுபலி, பார்சுவநாதர், முக்குடைநாதர்( தலைக்கு மேல் மூன்று குடை போன்ற அமைப்பு உள்ளதால்) சிற்பங்கள் உள்ளன. கீழே இந்த சிற்பங்களை நன்கு காண்பதற்காக தனிதனியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்திலிருந்து சற்று மேலே சென்றால் விளக்கு தூண் ஒன்று உள்ளது. அதன் அருகில் கண்ணட எழுத்துக்களாலான கல்வெட்டும் உள்ளது.










கல்வெட்டில் உள்ள எழுத்துக்கள் எந்தமொழி என்று தெரியவில்லை விசாரித்தால் வட்டெழுத்து என்கிறார்கள் (வட்டவட்டமாக எழுதிருப்பதால் இருக்குமோ?)









தீர்த்தங்கர் சிற்பங்களின் ம்ற்றுமொரு கோணம்

கீழகுயில்குடி சமணமலை கருப்பசாமியும் ஐயனாரும்






பூரணகலை ஐயனார் புஷ்பகலை
கருப்பசாமி







 மதுரை, தேனி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நாகமலை புதுக்கோட்டைக்குத் தெற்கே அமைந்துள்ள ஒரு சிறியமலை சமணர் மலை ஆகும். அதன் அடிவாரத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதத்தில் ''பாவாடை விழா'' நடைபெறுகிறது. அதை இன்றும் பிராமணர்கள் செய்கிறார்கள். அன்றைய தினத்தில் சோறு சமைத்து அதை நைவேத்தியம் செய்து, பின்பு  ஊரில் உள்ள அனைவருக்கும் கொடுக்கிறார்கள், முத்தாலம்மனின் சிலையை களிமண்ணால் செய்து வைத்து அதற்கு பூஜை செய்தபின் அதை ஊரில் உள்ள குளத்தில் கரைத்து விடுகிறார்கள். திருவிழாவில் ஆறு களிமண் குதிரைகள் செய்து வைக்கின்றார்கள். அன்று ஆடுகள் பலியிடப்படுகின்றன ஆலயத்தில் அனுமதி பெறாமல் ஊரில் உள்ளவர்கள் எந்த நல்ல காரியத்தையும் செய்வது இல்லை. இக்கோவில் சிற்பங்கள் சைவ, வைனவ திருவிளையாடல்களை குறிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த அய்யனார் கருப்பசாமி போன்ற தெய்வங்களை தேவர், நாடார் சமுதாயத்தவர்களே அதிக அளவில் வணங்கி வருகிறார்கள் எனவே சமணர்களுக்கும் இக்கோவிலுக்கும் எந்தவித தொடர்பும் இருக்க வாய்ப்பில்லை. முதலில் ஐயனார் மட்டும் இருந்த கோவிலில் காவல் தெய்வமாக கருப்பண்னசாமியும், மற்றவேறு பல தெய்வங்களும் பின்பு அமைக்கப்பட்டுள்ளது. 

ராக்காயி அம்மன், மண்டூக மகரிஷி





பழமுதிர்ச்சோலைக்கு சற்று உயரத்தில் நூபுர கங்கை என்ற புனித தீர்த்தம் அமைந்துள்ளது. இதற்கு சிலம்பாறு என்ற பெயரும் உண்டு. ராக்காயி அம்மன் கோயில் அம்மன் கால் சிலம்பிலிருந்து மலைக்குகைக்குள் வற்றாத ஜீவ நதியாக ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தீர்த்தத் தண்ணீர் வந்து கொண்டிருப்பதாக கூறுகிறார்கள். மலை உச்சியில் இந்த தீர்த்தத் தண்ணீர் ஓரிடத்தில் விழும் வகையில் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த இடத்தில் ராக்காயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த அம்மனை வழிபடச் செல்பவர்கள், நூபுர கங்கை விழும் இடத்தில் புனித நீராடிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்தத் தீர்த்தத் தண்ணீரில்தான் புகழ் பெற்ற   அழகர் கோவில்  பிரசாதமான ''சம்பா'' தோசை தயார் செய்யப்படுகிறது.

            மேலும், மகாவிஷ்ணு இந்த உலகை அளக்க தனது திருவடியை தூக்கின போது பிரம்மன், திருமாலின் தூக்கிய திருவடியை கழுவி பூஜை செய்தார். அப்படி கழுவிய போது மகாவிஷ்ணுவின் கால்சிலம்பு (நூபுரம்) அசைந்து அதிலிருந்து நீர்த்துளி தெரித்து அழகர்மலை மீது விழுந்ததாம்.  அதுவே கங்கையை விட புனிதமான இந்த தீர்த்தமாகும்.  இந்த தீர்த்தத்தில் அமர்ந்து தான் ''சுதபஸ்'' என்ற மகரிஷி பெருமாளை நினைத்து தியானத்தில் இருந்தார். அப்போது மகரிஷியை காண  துர்வாச முனிவர் வந்தார். பெருமாளின் நினைப்பில் இருந்ததால், துர்வாசரை சரியாக உபசரிக்கவில்லை. கோபமடைந்த துர்வாசரோ, "மண்டூக பவ'' அதாவது மரியாதை தெரியாத "மண்டூகமான நீ மண்டூகமாகவே (தவளை) போ'' என சாபமிட்டார்.  சாபம் பெற்ற ''சுதபஸ்''  துர்வாசரே பெருமாளின் நினைப்பில் இருந்ததால் தங்கள் வருகையை கவனிக்கவில்லை. எனவே, எனக்கு தாங்கள் சாப விமோசனம் தந்தருள வேண்டும், என வேண்டினார். அதற்கு துர்வாசர், ''வேதவதி'' என்கிற ''வைகை'' ஆற்றில் தவம் செய்.  அழகர்கோவிலில் இருந்து பெருமாள் வருவார். அப்போது உனக்கு சாப விமோசனம் கிடைக்கும்  என்றார். அழகர் கோவிலிலிருந்து பெருமாள் கிளம்பி மதுரை தல்லாகுளத்தில் ஆண்டாள் தொடுத்த மாலையை சூடிக் கொண்டு குதிரை வாகனத்தில் ஆற்றில் இறங்குகிறார். சித்ரா பவுர்ணமிக்கு மறுநாள் மண்டூக மகரிஷிக்கு காட்சி தந்து சாபவிமோசனம் தருகிறார் என்கிறார்கள்.

          ராக்காயி அம்மன் கோவிலுக்கு செல்ல அழகர் கோவிலில் இருந்து பழமுதிர் சோலை வரை பஸ் வசதி உள்ளது, அதன் பின்பு அங்கிருந்து சுமார் பத்து நிமிட நடைபயணத்தில் கோவிலை அடையலாம். வாகனத்தில் செல்வோர் கோவில் அடிவாரம் வரை வாகனத்தில் செல்லலாம்.

சூரியனார்


பாரத தேசத்தில் சூரிய வழிபாடு என்பது ஆதிகாலம் தொட்டே வழக்கத்தில் உள்ள ஒரு இயற்கை வழிபாடாகும். குறிப்பாக சிலப்பதிகாரத்தில் '' ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்'' எனத்தொடங்கும் வாழ்த்துபாடல் சூரியனார் வழிபாட்டின் பழமையை பறைசாற்றும். ''பாவிஷய'' என்னும் புராணம் ஸ்ரீகிருஷ்ணரின் மகனான ( கிருஷ்ணருக்கு ஏது மகன்? தெரிந்தவர்கள் விளக்கவும்) ''சாம்பா'' தொழுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த பொழுது சூரியனை வழிபட்டு நலமடைந்ததாக குறிப்பிடபட்டுள்ளது.  வளம்பெற தினசரி காயத்ரி மந்திரம் ஒன்பதின் மடங்குகளில் சொல்லிவரலாம்.

காயத்ரி மந்திரம்:


''ஓம் பூர் புவஸ்ஸூவ
தத் சவிதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்''

சூரியபகவான் அருளால் இன்னல்கள் யாவும் மறையும். வெற்றி உண்டாகும். ஜாதக அடிப்படையில் சூரியன் தயவு இல்லாமல் தலைமைப் பொறுப்புக்கு யாரும் வரமுடியாது. அதிகாரிகள், அதிகார மையங்கள், ஆகியவற்றில் பணிபுரிய சூரியனின் அனுக்கிரகம் அவசியம். அத்தகைய சர்வ ஆதிக்கமும், அதிகாரமும் உடைய சூரிய பகவானுக்கு உகந்த நாள் ரத சப்தமி. ரத சப்தமி புண்ணியம் மிக்க நாளாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.  சூரியனாருக்கு ரதம் செலுத்தும் சாரதியாக உள்ளவரின் பெயர் ''அருணன்'' என்பதாகும். இந்த சூரியனார் எழுந்தருளியிருப்பது தேனி விருதுநகர் பேட்டை வரசித்திவினாயகர் கோவிலில், வணங்கி வளம் பெறுவோம்.


பெரியாழ்வார் ஜீவசமாதி




 வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு  ஆழ்வார்களுள் ஒருவர். திருவில்லிபுத்தூரில் ஆனிமாதம் சுவாதி நட்சத்திரத்தில் கருடனின் அம்சமாக ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறந்தவர். 'விஷ்ணு சித்தர்' என்பது  இவரது இயற்பெயர். திருவில்லிபுத்தூரில் கோயில்கொண்டுள்ள வடபத்திரசாயி பெருமாளுக்கு அன்று மலர்ந்த மலர்களை பறித்து பூமாலையாக தொடுத்து சாற்றுவதை கைங்கர்யமாக கொண்டிருந்தார். ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வாரான ஆண்டாளின்  வளர்ப்பு தந்தையாவார். ஆண்டாளை திருவரங்கம் உறையும் அரங்கனுக்கு மணம் முடித்துக் கொடுத்ததன் மூலம் அரங்கனுக்கே மாமனார் ஆனார்.பகவானை ஒரே சமயத்தில் அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்ததால், பெரியாழ்வார் மனதில் ஓர் அச்சம் தோன்றியது. எங்கே பெருமாளுக்கு திருஷ்டி பட்டுவிடுமோ என்ற எண்ணத்தில் "பல்லாண்டு பல்லாண்டு' எனத்துவங்கும், "திருப்பல்லாண்டு' பாடினார். அவரது பக்தியை மெச்சிய பெருமாள், அனைவரிலும் உயர்ந்தவர் என்ற பொருளில் "பெரியாழ்வார்' என்று பெயர் சூட்டினார். இறைவனுக்கே கண்ணேறு கழிக்க முயன்றதால் இவரை ஆழ்வார்களில் பெரியவர் எனும் பொருள்பட "பெரியாழ்வார்" என அனைவரும் அழைக்க, பின்னர் இதுவே இவர் பெயராகிப்போனதாம்.இவரின் ஜீவசமாதி மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோவில் பூங்காவின் அருகில், பழமுதிர்சோலைக்கு பஸ் புறப்படும் ஆர்ச் அருகில் அமைந்துள்ளது.

அழகர்மலை கள்ளழகர் கோவில்


அழகர் கோவில் மற்றும் மலையை சுற்றி இருந்த ஊர் அழகாபுரி என்ற பெயரைக்கொண்டு இருந்தது. இந்த அழகர் கோவில் அழகாபுரி கோட்டையின் உள்ளே அமைந்துள்ளது. கோட்டையின் மிஞ்சிய பாகங்களை இன்றும் கோவிலைச்சுற்றிக் காணலாம். இங்கே மூலவராக இருக்கும் பெருமாளின் மற்றொரு பெயர் பரமஸ்வாமி என்னும் சிவனின் பெயர். சைவ, வைணவ   மத ஒற்றுமைக்காக இவ்வாறு அழைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. பிரசாதமாக அழகர் கோவில் புகழ் தோசை தருகிறார்கள். இங்கே இருக்கும் விநாயகரின் பெயர் தும்பிக்கை ஆழ்வார். இங்கே ஆண்டாளின் சன்னதிகூட உண்டு. ஆண்டாள் இங்கே பெரியாழ்வாருடன் வந்ததாக வரலாறு உண்டு. கள்ளழகர் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. வைணவத் திருத் தலங்களிலேயே ராஜகோபுரத்தில் தங்கக் கலசம் கொண்ட ஒரே கோவில். கோபுரம் முழுவதும் அழகான சிற்பங்களைக் கொண்டுள்ளது.
இந்த கோவில் எக்காலத்தில் தோன்றியது என்ற சொல்ல முடியாத பழமை உடையது இக்கோவில். மிகவும் பழைய தமிழ் நூல்களிலும், வடமொழிப் புராணங்களிலும் கூட இதன் பெருமை சொல்லப்பட்டு இருக்கிறது. இங்கே உள்ள மூர்த்திதலம்,தீர்த்தம்ஆகியவை பற்றிய வராக புராணம்பிரம்மாண்டமான புராணம்வாமன புராணம்முதலியவற்றிலும் சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அவற்றை தொகுத்து ஒன்று சேர்த்து "விருஷ பாத்திரி மகாத்மியம்" என்ற ஸ்தல புராணத்தில் இத்தலத்தின் புராணப் பெருமைகளை விரிவாக எடுத்து சொல்லப்பட்டுள்ளது. இங்குக் கோயில் கொண்டுள்ள இறைவன் அழகர்  என்று சொல்லபடுகிறார். இவரே வடமொழியில் சுந்தர ராஜன் என்று அழைக்கப்படுகிறார்.



இங்கு பதினெட்டாம்படி கருப்பசாமி  மிகவும் பிரபலமானவர்




கட்டிமுடிக்கப்படாத ராஜகோபுரம்  ''மொட்டை கோபுரம்''
மிகவும் பிரபலமான மதுரை  அழகர் கோவில் தோசை பிரசாதம் இது  சாப்பிடுவதற்கு தோசை  மாதிரியாகவும் இல்லை, பனியாரத்தை தோசை அளவிற்கு செய்தது போல், மந்தமாக  வெளியில்  சற்று பூரி போல் மொறுமொறுப்பாகவும் உள்ளே  சற்று மிருதுவாகவும், தோசை சட்டியில் சற்று அதிகமாக  எண்ணெய் விட்டு சுட்டது போல்  இருக்கிறது, மிளகு ருசி சற்று தூக்கலாக சாப்பிடுவதற்கு நன்றாக உள்ளது. கோவிலுக்கு சென்று வரும் போது அவசியம் தோசை பிரசாதம் வாங்கி சாப்பிடுங்கள்

பழமுதிர்சோலை முருகன்


பழமுதிர்சோலை மதுரையிலிருந்து சுமார் 20  கி மி தொலைவில் உள்ள முருகன் திருத்தலம் ஆகும்.   "வர்ஷபத்ரி" மற்றும் " இடபகிரி" என்பதும் இதன் வேறு பெயர்கள்.  குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பதற்கேற்ப இத்திருத்தலம் அழகிய குன்றின் மேல் அமைத்துள்ளது.  இது முருகனின் அறுபடை வீடுகளுள் ஆறாவது படை வீடாகும். அவ்வையிடம் முருகப்பெருமான் சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? எனக்கேட்டு திருவிளையாடல் புரிந்த திருத்தலம். முருகன் வயோதிகனாக தோன்றி நக்கீரனுக்கு காட்சியளித்த திருத்தலம்.

பழமரங்கள் நிறைந்துள்ள பகுதியாக இருந்ததால் பழமுதிர்சோலை எனவும், இல்லை, முருகன் பழத்தை உதிர்த்ததால், பழம்+உதிர் சோலை , பழமுதிர்சோலை   எனலாயிற்று என்கிறார்கள்
பழமுதிர்சோலை முருகன் கோவிலில் ஆரம்ப காலத்தில்  வேல் மட்டுமே இருந்தது. பிற்காலத்தில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் ஞான தியான ஆதி வேலுடன் ஒரே பீடத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் சிலை அமைக்கப்பட்டது.முருகனுக்கு வலப்புறம் வித்தக விநாயகர் வீற்றிருக்கிறார். இடப்புறம் உற்சவர் வீற்றிருக்கிறார், சாதரணமாக நாவல் மரத்தில் பழங்கள் ஆடி, ஆவணி மாதத்தில் தான் பழுக்குமாம். ஆனால், இத்திருதலத்து நாவல் மரத்தில் மட்டும் பழங்கள் முருகனின் திருவருளால் சஷ்டி மாதமாகிய ஐப்பசியில்தான் பழுக்குமாம்