சவுந்தர்ராஜ பெருமாள் கோவில், தாடிக்கொம்பு

ராஜகோபுரமும் அதன் முன்புற  தோற்றமும். இத் திருத்தலத்தின் உள் சுற்று பிரகாரத்தில் ஸ்ரீ சொர்ண பைரவர் எழுந்தருளி உள்ளார் இவரை தேய்பிறை அஷ்டமியன்று வணங்கி பிரார்த்தனை செய்தால் செல்வ வளங்களை தருவார்.
  இக் கோவிலில் ஹயக்கிரீவர் ,சரஸ்வதி ,லட்சுமி நரசிம்மர் ,ரதி மன்மதன்,சக்கரத்தாழ்வார் உலகளந்த பெருமாள், ராமரை தோளில் சுமந்தபடி அனுமார் (இந்த மாதிரி அமைப்பில் வேறெங்கும் விக்ரகம் இருக்காது )
 கருவறையில் சவுந்தர ராஜப்பெருமாள் ஸ்ரீதேவி,பூதேவி களுடன் நின்ற கோலத்தில் காட்சிதருகிறார், இங்குள்ள சிற்ப்பங்கள் மிகுந்த கலையழகுடன் அமைந்துள்ளன.
  இங்கு தேய்பிறை அஷ்டமியன்று இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள்கூட்டம் மிகவும் அதிகமாக உள்ளது ,
  சக்கரத்தாழ்வாருக்கு முன்னால் பூசணி பழத்தில் விளக்கேற்றி வழிபடுகிறார்கள்

கருத்துகள் இல்லை: