பொய் சொன்னா பளார்



அது ஒரு லை டிடெக்டர் ரோபோட். யார் பொய் சொன்னாலும் சப்புன்னு கன்னத்தில் அறைந்து விடும். அந்த ரோபோட் மெஷினை வாங்கி வந்தார் ''அப்பா''.

பிறகு அன்று அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே நடந்த ஒரு உரையாடல்.


அப்பா - மகனே பள்ளி நேரத்தில் எங்கே போயிருந்தே...?

மகன் - அப்பா நான் பள்ளியில்தான் இருந்தேன் அப்பா.

ரோபோட்(மகனுக்கு) - "பளார்"

மகன் - இல்லை அப்பா, நான் எனது நண்பனின் வீட்டில் டிவிடி பார்த்தேன்.

அப்பா - என்ன பார்த்தே...?


மகன் - குங்பூ பாண்டா

ரோபோட்(மகனுக்கு) - "பளார்"

மகன் - சரி. சரி.. ஆபாசப் படம் பார்த்தேன்.

அப்பா - என்னது ஆபாசப் படமா.. உன் வயசுல. ஆபாசப் படம்னா என்ன என்றே எனக்குத் தெரியாது தெரியுமா...?

ரோபோட் (அப்பாவுக்கு) - "பளார்"

அம்மா - ஹாஹாஹாஹா.. அவன் உங்க பிள்ளைதானே. பின்ன எப்படி இருப்பான்.?

ரோபோட் (அம்மாவுக்கு) - "பளார்"

கருத்துகள் இல்லை: