யாகம்

      'யாகம்'னா என்னா? அதனால் பலன் உண்டா? யாகம் என்ற சொல்லுக்கு பொருள் என்ன?

            யாகம் என்ற சொல்லுக்கு ''உயரிய அர்ப்பணிப்பு'' என்று அர்த்தம், அதாவது இறைவன் படைத்தவைகளை இறைவனுக்கே படைப்பது, அதனால் பலனடைவது, உதாரணமா அம்மா சமைத்த உணவை குழந்தை எடுத்து அம்மாவுக்கே ஊட்டி விடுவது போன்றது, குழந்தை தனக்கு ஊட்டினால் உண்மையிலேயே அம்மா மிகவும் ஆனந்தம் கொள்வாள், குழந்தையை வாரியனைத்து கொஞ்சுவாள் குழந்தை மீது அதிக பாசம் கொண்டு அதனை நன்கு கவணித்துக் கொள்வாள், அதை போல இறைவனும் யாகம் செய்பவர்களை கனிவுடன் கவணித்து காத்தருள்வான் என்பதுதான் யாகத்தின் நோக்கம். சரி இப்போ யாகம் எப்படி செய்கிறார்கள், நெருப்பை வளர்த்து அதனுள் பால், பழங்கள், தேங்காய், இளநீர், தேன், நெய், சர்க்கரை பொங்கல், மருத்துவ குணமுடைய மரகுச்சிகள், ஆடைகள் என பலவற்றையும் அக்கினிக்குள் போட்டு எரிக்கிறார்கள் அவ்வளவும் விரையமாகிறது,

     யார்தான்  பழக்கப்படுத்தினார்களோ நல்ல பொருட்களை நாசப்படுத்துவதற்க்கு , நன்றாக கவணித்தீர்களானால் புரியும், ஒரு அளவான யாகத்தில் செய்வதே நடப்பான ஒரு திருமணத்திற்க்கு உரிய பொருட்களாகும், பொருட்களை வைத்து சாமி கும்பிட்டுவிட்டு யாகத்தில் கலந்து கொண்டவர்களுக்கே கொடுத்து சாப்பிட செய்திருக்கலாம், யாகத்தில் போட்ட பொருட்கள் வீணாக போயிருக்காது, ஏழ்மையானவர்களுக்கு ஆடைகளை உடுத்தச் சொல்லி கொடுத்திருக்கலாம், ஆனால் நடப்பது என்ன அவ்வளவு பொருட்களும் உதவாமல் போகிறதே, இது சாதாரணமா பார்ப்பவர்களுக்கே புரியும், அதாவது அம்மா சமைத்த உணவை, சிறிய குழந்தையாக இருந்தாலும் சிந்தி வீணாக்கினால் கண்டிப்பாக அம்மாவின் கோபத்துடன் கூடிய அதட்டலும் அடியும் அவசியம் கிடைக்கதானே செய்யும் நீங்களே இதையும் பார்த்திருப்பீர்கள்தானே, அனுபவித்தும் இருப்பீர்கள், அப்படியிருக்க இறைவன், உயிர்கள் அனுபவித்து, பயண்படுத்த படைத்தவைகளை மணிதன் வீணாக்கினால் கண்டிப்பாக அதட்டலும் அடியும் கிடைக்கத்தானே செய்யும். நன்கு யோசித்து பாருங்கள் இறைவன் படைத்தவைகளை படைப்பின் நோக்கம் அறிந்து பயண்படுத்தி பலன் பெறுங்கள், இறைவனின் அருள் பெறுங்கள். 

கருத்துகள் இல்லை: