மனமாற்றம்

# தற்கொலை மரணங்கள் #
 சமீபகாலமாக நாட்டில் குறிப்பாக தமிழகத்தில் பிரிவினைவாதிகளின் தாக்கம் சற்று அதிகமாகி கொண்டே இருக்கிறது.. அதே வேளையில் அதற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் கூட்டமும் சற்று அதிகரித்தே வருகிறது. 

அரசு கொண்டுவரும் அனைத்து திட்டங்களையும் எதிர்ப்பது என்பதே ஒரு கொள்கையாக குறுகிய மனநிலை வெளிப்பாடாக, மக்களின் உணர்ச்சிகளை தூண்டும் விதமாக செயல் புரிந்து ஒரு கூட்டம் ஆதாயமடைந்து வருகிறது.

மனிதனுக்கு தேவையான எல்லாவித வளர்ச்சிக்கான நடைமுறைகளிலும் சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்கிறது, அதை கடந்து வளர்வதுதான் வளர்ச்சி.. மனித இனம் தோன்றியதிலிருந்து  எல்லாவிதமான வளர்ச்சியிலும் இருக்கும் குறைகளை களையவே மறுபடியும் மறுபடியும்  தொடர்ந்து வளர்ச்சியடைகிறான். அதுதான் உண்மையான வளர்ச்சி. 

 தற்போது மாற்று சிந்தனையாளர்கள், சமூக ஆர்வலர்கள் என்கிற பெயரில்  தொலைகாட்சியினால், சமூக ஊடங்கங்களினால் சிலர் பிரபலப்படுத்தப்பட்டு  சமூகத்தின் மீது எந்தவித அக்கரையுமில்லாமல் அவர்களின் பொருளாதார வளர்ச்சிக்காக தேசத்திற்க்கு எதிரான சக்திகளோடு கைகோர்த்து கொண்டு செயல்பட்டு மக்களை உணர்ச்சி வயப்படுத்தி தூண்டி சில சிறுசிறு தோல்விகளைகூட தாங்க இயலாதவர்களாக மக்களை மாற்றி வருகிறார்கள், 

இதன் விளைவே தற்கொலை மரணங்கள், எந்த ஒரு மிருகமும் தற்கொலை செய்து கொள்வதில்லை ஆனால் மனித இனம் மட்டுமே மிகவும் கீழ்தரமான மனநிலைமையினால் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இது ஏற்றுக்கொள்ளவே இயலாது ஒன்று.  

இது மாதிரியான தற்கொலை மரணங்கள் சமீப காலமாக கேடுகெட்ட அரசியல்வாதிகளாலும், நடிகர்களாலும், பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாக கொண்ட ஊடங்களினாலும், அவர்களின் பொய்யான அனுதாபத்தினாலும், தியாகிகளாக சித்தரிக்கப்பட்டு வருகிறது. 

இந்த மாதிரியான தற்கொலைகளுக்கு நேரில் போய் ஆறுதல் சொல்வது, பண உதவி செய்வது,  இந்த மாதிரியான குற்றங்களை அதிகரிக்க செய்யும், அதை ஊக்குவிக்கவும் செய்யும் என்பதையும் உணர வேண்டும், இதையே ஒரு ஆதாயமாக கொண்டு ஒரு சிலர் தங்களின் பிள்ளைகளை மன நெருக்கடிக்கு ஆளாக்கி தற்கொலைக்கு தூண்டவும் வாய்ப்பு உள்ளது, எனப்து மறுக்க முடியாத உண்மை.. எதிர்க்க வேண்டியது அரசு கொண்டு வரும் திட்டங்களை அல்ல அதில் குற்றம் இருப்பின் மர்ற்றம் செய்ய வேண்டியது அவசியம்தான் நான் மறுக்கவில்லை, ஆனால் ஒட்டு மொத்தமாக எந்த விதமான ஆதாரமும் இல்லாமல், மக்களின் உணர்ச்சி வசப்படுதல் ஒன்றையே மூலதனமாக கொண்டு எதிர்ப்பது என்பது ஏற்க்க கூடியதாக இல்லை. 

சரி, இதற்க்கு தீர்வுதான் என்ன ? அரசு ஒரு திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரும்முன் அதை பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்ப்படுத்துவது அவசியம். (ஆனால், இதில் சில கருத்துக்களுக்கு விதிவிலக்கு அவசியம் அதாவது 500, 1000 ரூபாய்கள் செல்லாது என அரசு அறிவித்தது போன்ற செயல்களை கலந்து பேச இயலாது)

இதில் மக்களின் மனநிலை முற்றிலுமாக மாற்றப்பட வேண்டியது அவசியமான ஒன்று. சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்கள் இந்த மாதிரியான தற்கொலையை கண்டு கொள்ளகூடாது.. உண்மையாகவே நாட்டு மக்களின் மீது அக்கறை கொண்டவர்கள் என்றால் மக்களின் மனதை வலுப்படுத்தும் செயலை செய்யுங்கள்.. இல்லையெனில் அனுதாபம் காட்டுபவர்கள் மீது தற்கொலைக்கு தூண்டுபவர்களுக்கான சட்டம் பாயவேண்டும்..




எம்மதமும் சம்மதம்

அன்பு உறவுகளே..
இன்று இந்துகளில் பலர் மட்டுமே எம்மதமும் சம்மதம் ன்னு சொல்லி தாங்கள் எல்லாமத்தவரையும் ஆதரிப்பவர்கள் நடுநிலையாளர்கள்ன்னு சொல்லி கொண்டு திரிகிறார்கள்...


ஆனால், மற்ற மதங்களை பின் தொடர்பவர்கள் யாருமே எம்மதமும் சம்மதம் என்பதை ஏற்பது இல்லை... ஏன் தெரியுமா? ந்ம் முன்னோர்கள் நமக்கு வழிகாட்டியவர்கள் நம்மை இந்த வார்த்தைகளை சொல்லி நம்மை பழக்கப்படுத்தி விட்டார்கள்...

நம்மில் பலரும் இந்த வார்த்தையை பின்பற்றி எம்மதமும் சம்மதம் என்கிற நிலையில் இருப்பவர்கள்தான் நல்லவர்கள் பெருந்தன்மையானவர்கள் என்று கருதி கொண்டு இருக்கிறார்கள்..
ஆனால், நமக்கு வழிகாட்டிய நமது முன்னோர்கள் எந்த காலத்தில் எந்த சூழ்நிலையில் இதை சொல்லி வைத்தார்கள்ன்னு சற்று ஆராய்ந்து பார்த்தீர்களானால்தான் உண்மைகள் புரியவரும்...
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு நாம் இந்துக்களே இல்லை மாற்று மதத்தினர்தான் நம்மை அப்படி அழைத்தார்கள் ஆனால் அதற்க்கு முன்பாக நாம் எந்த மதத்தவராக இருந்தோம்ன்னு எத்தனை பேருக்கு தெரியும் என எனக்கு தெரியவில்லை...
தெரியாதவர்களுக்காக, ஒரு சிறுவிளக்கம்
நம்மிடையே,. "சண்மதங்கள்" என்று. கணபதி வழிபாடு காணாபத்யம், முருக வழிபாடு கௌமாரம், சிவன் வழிபாடு சைவம், அம்பிகை வழிபாடு சாக்தம், சூரிய வழிபாடு சௌரம், விஷ்னு வழிபாடு வைணவம் என்று ஆறு மதங்கள் இருந்தன.
அவைகள், யாவும் ஒரே மாதிரியான வழிபாட்டு முறைகளை கொண்டு ஆனால் முதன்மையான கடவுள்களாக ஒவ்வொருவரும் ஒவ்வொருவரை பின்பற்றி வந்தார்கள் அதை ஒன்றிணைக்கும் விதமாக இந்த கடவுள்களுக்குள் நமக்கு போலவே எல்லா் கடவுள்களுக்குள்ளும் கணவன் மனைவி மகன் மாமன் மச்சான் உறவுகளை ஏற்படுத்தி கதைகள் புனைந்து நம்மை ஒன்று படுத்தினார்கள் அந்த காலகட்டத்தில்தான் நமக்கு நமது முன்னோர்கள் "எம்மதமும் சம்மதம்" ன்னு சொல்லி வைத்தார்கள் அந்த சூழ்நிலையில் நம்மிடையே இஸ்லாமியம், கிருஸ்துவம் போன்ற மதங்கள் தோன்றவே இல்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
அதற்காக நான் மற்ற மதங்களை வெறுக்க சொல்லவில்லை, ஆனால் அவர்களுக்கு தனியாக எந்தவிதமான சலுகைகளும் வழங்க வேண்டியதே இல்லை.. அதே போல் இன்று நாம் இந்துகளாகிவிட்டோம் எனவே மற்ற மதத்தவரை போலவே நாமும் நம் மதம் மட்டுமே நமக்கு சம்மதம் என வாழலாம் அதுதான் நமது உயர்வான கலாச்சாரம் பண்பாடுகளை காக்கும் எனவே நாம் இந்து என்பதில் பெருமிதம் கொள்வோம்.. நமக்கு "நம்மதம்" மட்டுமே சம்மதம்..
ஆத்தியப்பன் அர்விந்த்

கொஞ்சம் யோசிப்போமா ?


                                                               Image result for யோசி

நீங்கள் உங்களை, நாங்கள் தமிழர்கள், இந்தியர்கள், இந்துக்கள், கிருஸ்துவர்கள், இஸ்லாமியர்கள் என்று யாராகவேணும் சொல்லி கொள்ளுங்கள், ஏன் யாராக வேண்டுமானாலும் இருந்து கொள்ளுங்கள்... அது உங்கள்பாடு. ஆனால், மக்களை மதம் மாற்றம் செய்து அதன் மூலமாக தங்களுக்கு என் தேசத்தை அடிமையாக்கி ஆள நினைக்கும் கூட்டம் என் தேசத்திற்க்கு எதிரானவர்களே.. எந்தெந்த நாட்டில் எந்தவித வாழ்க்கை முறை அமைப்புகள் (மார்க்கம்) தோன்றியதோ அதையதை அந்தந்த நாட்டில் கடைபிடித்தால் போதும்.. மார்க்கங்கள் தோன்றியதும் அப்படித்தான் அந்தந்த இடத்திற்க்கு தேவையான மார்க்கங்கள் அந்த இடத்தி்ன் தேவை கருதியே உருவாகியுள்ளது அல்லது உருவாக்கப் பட்டுள்ளது அவ்வளவுதான், இந்தியாவுக்கு தேவையான மார்க்கங்கள் இந்தியாவிலே உருவாகியுள்ளது.. அது போதும் நமக்கு நம்மிடையே மிகமிக உயர்ந்த கருத்துக்கள் உண்டு. யாரும் யாரையும் மாற்ற தேவையில்லை.. மாற்றவும் கூடாது.. யார் எந்த கடவுளை வணங்கினால் என்ன? மனிதர்களை மனிதர்களாக நடத்துவோம்.. ஆனால் என் மார்க்கம் உயர்ந்தது.. எங்கள் ஆண்டவர்தான் உயர்ந்தவர்ன்னு சொல்லி மதம்மாறச் சொல்பவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன். அப்படியானால் உங்களின் ஆண்டவர்களை இன்று ஒரு அற்புதம் எல்லாரிடமும் சொல்லிவிட்டு செய்ய சொல்லுங்கள்.. உலகில் உள்ள எந்த மார்க்கத்தின் கடவுளுக்காவது சொல்லிவிட்டு செய்யும் தகுதி உண்டா? பிறகு ஏன் இந்த தேவையற்ற மார்க்கப் போராட்டங்கள் ? இந்த போரட்டங்களை நீங்கள் முன்னெடுக்க காரணம்தான் என்ன ? மீண்டும் இது பற்றி நிறைய யோசிப்போம்..

தேர்



வீரபாண்டி தேர். இதை காண, கண்டு வணங்க கடந்த வாரம் லட்சகணக்கானோர் கூடி முண்டியடித்து வணங்கி மகிழ்ந்தனர். இன்றும் அதே அலங்காரத்துடன் தேர் நின்றிருக்க ஏறெடுத்து பார்க்கவும் ஆளில்லாமல்...  அனாதையாய் வாழ்க்கை தத்துவம் ஒன்றை சலனமில்லாமல் உரக்க சொல்லிக்கொண்டு... 

வெற்றி..

செயல் படாதவர்கள் ஜெயிப்பதற்க்கு வாய்ப்பே இல்லை...

வெற்றி

ஒருவர், நல்லவராக அறிவாளியாக  நேர்மையாக கடுமையாக உழைப்பராக இருந்தாலும் வென்றுவிட முடியாது...  நல்ல நிர்வாகியால் மட்டுமே வெற்றி பெறமுடியும்....


மனநல மருத்துவமனையிலிருந்து மூன்று நோயாளிகள் பேசிக் கொண்டனர்:


பாலு : டேய் இன்னிக்கு ராத்திரி எல்லாரும் தூங்குனதும் நாம மூணு பேரும் தப்பிச்சு வெளிய ஓடிடலாம்..


வேலு : ஆமா ஒரு ஏணி எடுத்து ரெடியா வை. வெளிய சுவர் உயரமா இருந்தா ஏறி குதிக்க உதவியா இருக்கும்.


பாலு : அப்டியே ஒரு இரும்பு கம்பியும் எடுத்துவை ஏற முடியலைனா சுவர ஓட்டபோட்டு தப்பிச்சுரலாம்; 


சோமு:போச்சு போச்சு நாம தப்பிக்கவே முடியாது

சோமு:போச்சு போச்சு நாம தப்பிக்கவே முடியாது
பாலு&வேலு: ஏன்டா...? 


சோமு: நான் இப்ப தான் பாத்துட்டு வரேன்.வெளிய சுவரே இல்ல,நாம ஏறி குதிக்கவும் முடியாது சுவர ஓட்டபோட்டும் தப்பிக்க முடியாது;


பாலு: சரி விடுடா முதல்ல அவங்க சுவர கட்டட்டும் நாம அப்புறமா தப்பிச்சு போலாம்....

கழிசடை

தன்னை கடைந்தெடுக்க தெரியாதவன்  கடையோனே...

முட்டாள்...

தன்னை தனக்குள்ளே  கொண்டாட தெரியாதவன் முட்டாள்...

தேவை

தன் தேவைக்கு தேவைப்படும் உறவுகள் தேவை தீர்ந்த பின் தேவையில்லாமல் போகின்றன...

கொண்டாட்டம்

பிறர் கொண்டாடும் மனிதராக இருக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் நம்மை நாம் கொண்டாட்டமானவர்களாக வைத்திருப்பது அவசியம்...

உறவு

என்ன பேசுறோம், ஏது பேசுறோம்னு தெரியாம மணிக்கணக்கா பேசுற வரைதான்  உறவு உயிர்ப்போடு இருக்கும்.
பேசுறதுக்கு காரணம்னு எப்ப தேட ஆரமிக்கிறமோ,
அப்போ அன்பு விலாசம் இல்லாம தொலைந்து,
நம்மை விட்டு வெகுதூரம் சென்றிருக்கும்.
உறவு சிதைந்திருக்கும்..

கனவு

கனவில் தான் என்றாலும்
இத்தனை
அழுத்தமாகவா தருவது
விழித்தெழுந்ததும்
கண்ணாடி பார்க்கின்றேன்
காயங்கள் ஏதும்
உள்ளதா என..