கீழகுயில்குடி சமணமலை கருப்பசாமியும் ஐயனாரும்






பூரணகலை ஐயனார் புஷ்பகலை
கருப்பசாமி







 மதுரை, தேனி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நாகமலை புதுக்கோட்டைக்குத் தெற்கே அமைந்துள்ள ஒரு சிறியமலை சமணர் மலை ஆகும். அதன் அடிவாரத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதத்தில் ''பாவாடை விழா'' நடைபெறுகிறது. அதை இன்றும் பிராமணர்கள் செய்கிறார்கள். அன்றைய தினத்தில் சோறு சமைத்து அதை நைவேத்தியம் செய்து, பின்பு  ஊரில் உள்ள அனைவருக்கும் கொடுக்கிறார்கள், முத்தாலம்மனின் சிலையை களிமண்ணால் செய்து வைத்து அதற்கு பூஜை செய்தபின் அதை ஊரில் உள்ள குளத்தில் கரைத்து விடுகிறார்கள். திருவிழாவில் ஆறு களிமண் குதிரைகள் செய்து வைக்கின்றார்கள். அன்று ஆடுகள் பலியிடப்படுகின்றன ஆலயத்தில் அனுமதி பெறாமல் ஊரில் உள்ளவர்கள் எந்த நல்ல காரியத்தையும் செய்வது இல்லை. இக்கோவில் சிற்பங்கள் சைவ, வைனவ திருவிளையாடல்களை குறிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த அய்யனார் கருப்பசாமி போன்ற தெய்வங்களை தேவர், நாடார் சமுதாயத்தவர்களே அதிக அளவில் வணங்கி வருகிறார்கள் எனவே சமணர்களுக்கும் இக்கோவிலுக்கும் எந்தவித தொடர்பும் இருக்க வாய்ப்பில்லை. முதலில் ஐயனார் மட்டும் இருந்த கோவிலில் காவல் தெய்வமாக கருப்பண்னசாமியும், மற்றவேறு பல தெய்வங்களும் பின்பு அமைக்கப்பட்டுள்ளது. 

ராக்காயி அம்மன், மண்டூக மகரிஷி





பழமுதிர்ச்சோலைக்கு சற்று உயரத்தில் நூபுர கங்கை என்ற புனித தீர்த்தம் அமைந்துள்ளது. இதற்கு சிலம்பாறு என்ற பெயரும் உண்டு. ராக்காயி அம்மன் கோயில் அம்மன் கால் சிலம்பிலிருந்து மலைக்குகைக்குள் வற்றாத ஜீவ நதியாக ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தீர்த்தத் தண்ணீர் வந்து கொண்டிருப்பதாக கூறுகிறார்கள். மலை உச்சியில் இந்த தீர்த்தத் தண்ணீர் ஓரிடத்தில் விழும் வகையில் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த இடத்தில் ராக்காயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த அம்மனை வழிபடச் செல்பவர்கள், நூபுர கங்கை விழும் இடத்தில் புனித நீராடிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்தத் தீர்த்தத் தண்ணீரில்தான் புகழ் பெற்ற   அழகர் கோவில்  பிரசாதமான ''சம்பா'' தோசை தயார் செய்யப்படுகிறது.

            மேலும், மகாவிஷ்ணு இந்த உலகை அளக்க தனது திருவடியை தூக்கின போது பிரம்மன், திருமாலின் தூக்கிய திருவடியை கழுவி பூஜை செய்தார். அப்படி கழுவிய போது மகாவிஷ்ணுவின் கால்சிலம்பு (நூபுரம்) அசைந்து அதிலிருந்து நீர்த்துளி தெரித்து அழகர்மலை மீது விழுந்ததாம்.  அதுவே கங்கையை விட புனிதமான இந்த தீர்த்தமாகும்.  இந்த தீர்த்தத்தில் அமர்ந்து தான் ''சுதபஸ்'' என்ற மகரிஷி பெருமாளை நினைத்து தியானத்தில் இருந்தார். அப்போது மகரிஷியை காண  துர்வாச முனிவர் வந்தார். பெருமாளின் நினைப்பில் இருந்ததால், துர்வாசரை சரியாக உபசரிக்கவில்லை. கோபமடைந்த துர்வாசரோ, "மண்டூக பவ'' அதாவது மரியாதை தெரியாத "மண்டூகமான நீ மண்டூகமாகவே (தவளை) போ'' என சாபமிட்டார்.  சாபம் பெற்ற ''சுதபஸ்''  துர்வாசரே பெருமாளின் நினைப்பில் இருந்ததால் தங்கள் வருகையை கவனிக்கவில்லை. எனவே, எனக்கு தாங்கள் சாப விமோசனம் தந்தருள வேண்டும், என வேண்டினார். அதற்கு துர்வாசர், ''வேதவதி'' என்கிற ''வைகை'' ஆற்றில் தவம் செய்.  அழகர்கோவிலில் இருந்து பெருமாள் வருவார். அப்போது உனக்கு சாப விமோசனம் கிடைக்கும்  என்றார். அழகர் கோவிலிலிருந்து பெருமாள் கிளம்பி மதுரை தல்லாகுளத்தில் ஆண்டாள் தொடுத்த மாலையை சூடிக் கொண்டு குதிரை வாகனத்தில் ஆற்றில் இறங்குகிறார். சித்ரா பவுர்ணமிக்கு மறுநாள் மண்டூக மகரிஷிக்கு காட்சி தந்து சாபவிமோசனம் தருகிறார் என்கிறார்கள்.

          ராக்காயி அம்மன் கோவிலுக்கு செல்ல அழகர் கோவிலில் இருந்து பழமுதிர் சோலை வரை பஸ் வசதி உள்ளது, அதன் பின்பு அங்கிருந்து சுமார் பத்து நிமிட நடைபயணத்தில் கோவிலை அடையலாம். வாகனத்தில் செல்வோர் கோவில் அடிவாரம் வரை வாகனத்தில் செல்லலாம்.

சூரியனார்


பாரத தேசத்தில் சூரிய வழிபாடு என்பது ஆதிகாலம் தொட்டே வழக்கத்தில் உள்ள ஒரு இயற்கை வழிபாடாகும். குறிப்பாக சிலப்பதிகாரத்தில் '' ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்'' எனத்தொடங்கும் வாழ்த்துபாடல் சூரியனார் வழிபாட்டின் பழமையை பறைசாற்றும். ''பாவிஷய'' என்னும் புராணம் ஸ்ரீகிருஷ்ணரின் மகனான ( கிருஷ்ணருக்கு ஏது மகன்? தெரிந்தவர்கள் விளக்கவும்) ''சாம்பா'' தொழுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த பொழுது சூரியனை வழிபட்டு நலமடைந்ததாக குறிப்பிடபட்டுள்ளது.  வளம்பெற தினசரி காயத்ரி மந்திரம் ஒன்பதின் மடங்குகளில் சொல்லிவரலாம்.

காயத்ரி மந்திரம்:


''ஓம் பூர் புவஸ்ஸூவ
தத் சவிதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்''

சூரியபகவான் அருளால் இன்னல்கள் யாவும் மறையும். வெற்றி உண்டாகும். ஜாதக அடிப்படையில் சூரியன் தயவு இல்லாமல் தலைமைப் பொறுப்புக்கு யாரும் வரமுடியாது. அதிகாரிகள், அதிகார மையங்கள், ஆகியவற்றில் பணிபுரிய சூரியனின் அனுக்கிரகம் அவசியம். அத்தகைய சர்வ ஆதிக்கமும், அதிகாரமும் உடைய சூரிய பகவானுக்கு உகந்த நாள் ரத சப்தமி. ரத சப்தமி புண்ணியம் மிக்க நாளாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.  சூரியனாருக்கு ரதம் செலுத்தும் சாரதியாக உள்ளவரின் பெயர் ''அருணன்'' என்பதாகும். இந்த சூரியனார் எழுந்தருளியிருப்பது தேனி விருதுநகர் பேட்டை வரசித்திவினாயகர் கோவிலில், வணங்கி வளம் பெறுவோம்.


பெரியாழ்வார் ஜீவசமாதி




 வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு  ஆழ்வார்களுள் ஒருவர். திருவில்லிபுத்தூரில் ஆனிமாதம் சுவாதி நட்சத்திரத்தில் கருடனின் அம்சமாக ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறந்தவர். 'விஷ்ணு சித்தர்' என்பது  இவரது இயற்பெயர். திருவில்லிபுத்தூரில் கோயில்கொண்டுள்ள வடபத்திரசாயி பெருமாளுக்கு அன்று மலர்ந்த மலர்களை பறித்து பூமாலையாக தொடுத்து சாற்றுவதை கைங்கர்யமாக கொண்டிருந்தார். ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வாரான ஆண்டாளின்  வளர்ப்பு தந்தையாவார். ஆண்டாளை திருவரங்கம் உறையும் அரங்கனுக்கு மணம் முடித்துக் கொடுத்ததன் மூலம் அரங்கனுக்கே மாமனார் ஆனார்.பகவானை ஒரே சமயத்தில் அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்ததால், பெரியாழ்வார் மனதில் ஓர் அச்சம் தோன்றியது. எங்கே பெருமாளுக்கு திருஷ்டி பட்டுவிடுமோ என்ற எண்ணத்தில் "பல்லாண்டு பல்லாண்டு' எனத்துவங்கும், "திருப்பல்லாண்டு' பாடினார். அவரது பக்தியை மெச்சிய பெருமாள், அனைவரிலும் உயர்ந்தவர் என்ற பொருளில் "பெரியாழ்வார்' என்று பெயர் சூட்டினார். இறைவனுக்கே கண்ணேறு கழிக்க முயன்றதால் இவரை ஆழ்வார்களில் பெரியவர் எனும் பொருள்பட "பெரியாழ்வார்" என அனைவரும் அழைக்க, பின்னர் இதுவே இவர் பெயராகிப்போனதாம்.இவரின் ஜீவசமாதி மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோவில் பூங்காவின் அருகில், பழமுதிர்சோலைக்கு பஸ் புறப்படும் ஆர்ச் அருகில் அமைந்துள்ளது.

அழகர்மலை கள்ளழகர் கோவில்


அழகர் கோவில் மற்றும் மலையை சுற்றி இருந்த ஊர் அழகாபுரி என்ற பெயரைக்கொண்டு இருந்தது. இந்த அழகர் கோவில் அழகாபுரி கோட்டையின் உள்ளே அமைந்துள்ளது. கோட்டையின் மிஞ்சிய பாகங்களை இன்றும் கோவிலைச்சுற்றிக் காணலாம். இங்கே மூலவராக இருக்கும் பெருமாளின் மற்றொரு பெயர் பரமஸ்வாமி என்னும் சிவனின் பெயர். சைவ, வைணவ   மத ஒற்றுமைக்காக இவ்வாறு அழைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. பிரசாதமாக அழகர் கோவில் புகழ் தோசை தருகிறார்கள். இங்கே இருக்கும் விநாயகரின் பெயர் தும்பிக்கை ஆழ்வார். இங்கே ஆண்டாளின் சன்னதிகூட உண்டு. ஆண்டாள் இங்கே பெரியாழ்வாருடன் வந்ததாக வரலாறு உண்டு. கள்ளழகர் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. வைணவத் திருத் தலங்களிலேயே ராஜகோபுரத்தில் தங்கக் கலசம் கொண்ட ஒரே கோவில். கோபுரம் முழுவதும் அழகான சிற்பங்களைக் கொண்டுள்ளது.
இந்த கோவில் எக்காலத்தில் தோன்றியது என்ற சொல்ல முடியாத பழமை உடையது இக்கோவில். மிகவும் பழைய தமிழ் நூல்களிலும், வடமொழிப் புராணங்களிலும் கூட இதன் பெருமை சொல்லப்பட்டு இருக்கிறது. இங்கே உள்ள மூர்த்திதலம்,தீர்த்தம்ஆகியவை பற்றிய வராக புராணம்பிரம்மாண்டமான புராணம்வாமன புராணம்முதலியவற்றிலும் சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அவற்றை தொகுத்து ஒன்று சேர்த்து "விருஷ பாத்திரி மகாத்மியம்" என்ற ஸ்தல புராணத்தில் இத்தலத்தின் புராணப் பெருமைகளை விரிவாக எடுத்து சொல்லப்பட்டுள்ளது. இங்குக் கோயில் கொண்டுள்ள இறைவன் அழகர்  என்று சொல்லபடுகிறார். இவரே வடமொழியில் சுந்தர ராஜன் என்று அழைக்கப்படுகிறார்.



இங்கு பதினெட்டாம்படி கருப்பசாமி  மிகவும் பிரபலமானவர்




கட்டிமுடிக்கப்படாத ராஜகோபுரம்  ''மொட்டை கோபுரம்''
மிகவும் பிரபலமான மதுரை  அழகர் கோவில் தோசை பிரசாதம் இது  சாப்பிடுவதற்கு தோசை  மாதிரியாகவும் இல்லை, பனியாரத்தை தோசை அளவிற்கு செய்தது போல், மந்தமாக  வெளியில்  சற்று பூரி போல் மொறுமொறுப்பாகவும் உள்ளே  சற்று மிருதுவாகவும், தோசை சட்டியில் சற்று அதிகமாக  எண்ணெய் விட்டு சுட்டது போல்  இருக்கிறது, மிளகு ருசி சற்று தூக்கலாக சாப்பிடுவதற்கு நன்றாக உள்ளது. கோவிலுக்கு சென்று வரும் போது அவசியம் தோசை பிரசாதம் வாங்கி சாப்பிடுங்கள்

பழமுதிர்சோலை முருகன்


பழமுதிர்சோலை மதுரையிலிருந்து சுமார் 20  கி மி தொலைவில் உள்ள முருகன் திருத்தலம் ஆகும்.   "வர்ஷபத்ரி" மற்றும் " இடபகிரி" என்பதும் இதன் வேறு பெயர்கள்.  குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பதற்கேற்ப இத்திருத்தலம் அழகிய குன்றின் மேல் அமைத்துள்ளது.  இது முருகனின் அறுபடை வீடுகளுள் ஆறாவது படை வீடாகும். அவ்வையிடம் முருகப்பெருமான் சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? எனக்கேட்டு திருவிளையாடல் புரிந்த திருத்தலம். முருகன் வயோதிகனாக தோன்றி நக்கீரனுக்கு காட்சியளித்த திருத்தலம்.

பழமரங்கள் நிறைந்துள்ள பகுதியாக இருந்ததால் பழமுதிர்சோலை எனவும், இல்லை, முருகன் பழத்தை உதிர்த்ததால், பழம்+உதிர் சோலை , பழமுதிர்சோலை   எனலாயிற்று என்கிறார்கள்
பழமுதிர்சோலை முருகன் கோவிலில் ஆரம்ப காலத்தில்  வேல் மட்டுமே இருந்தது. பிற்காலத்தில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் ஞான தியான ஆதி வேலுடன் ஒரே பீடத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் சிலை அமைக்கப்பட்டது.முருகனுக்கு வலப்புறம் வித்தக விநாயகர் வீற்றிருக்கிறார். இடப்புறம் உற்சவர் வீற்றிருக்கிறார், சாதரணமாக நாவல் மரத்தில் பழங்கள் ஆடி, ஆவணி மாதத்தில் தான் பழுக்குமாம். ஆனால், இத்திருதலத்து நாவல் மரத்தில் மட்டும் பழங்கள் முருகனின் திருவருளால் சஷ்டி மாதமாகிய ஐப்பசியில்தான் பழுக்குமாம் 


ஹயக்ரீவர்

குதிரை முகமும், மனித  உடலும் கொண்ட உருவான ஹயக்ரீவரை,  விஷ்ணுவின்    வடிவாகக்  கருதி வைணவர்கள் வழிபடுகிறார்கள். ஹயக்ரீவரை கல்வி தெய்வம் என குறிப்பிடுகின்றார்கள். இவருக்கு பரிமுகன் என்ற பெயரும் உண்டு. இந்த அவதாரத்தை  தசாவதாரத்திற்குள் சேர்ப்பதில்லை,

   மது, கைடபன் எனும் அசுரர்கள் படைக்கும் கடவுளான பிரம்மாவிடமிருந்து வேதங்களை பறித்துக் கொண்டு,  பாதாள உலகத்திற்குச் சென்று விட்டனர்.  அதனை மீட்டுத் தரும்படி பிரம்மா, காக்கும் கடவுளான  விஷ்ணுவை  வேண்டினார். மதுவும், கைடபனும் படைக்கும் தொழிலை செய்ய ஆசை கொண்டனர். அவர்கள் குதிரை முகம் உடையவர்கள் என்பதால் விஷ்ணுவும் குதிரை முக அவதாரம் எடுத்து அவர்களுடன் போர் புரிந்தார். இந்த ரூபமே ஹயக்ரீவர் என்று அழைக்கப்படுகிறது. அசுரர்களுடன் போரிட்டு வேதங்களை மீட்டு பிரம்மனிடம் தந்தார். பின்னர் ஆவணி மாதம்  பவுர்ணமி நாளில் கற்றுக்கொடுத்தார் என புராணங்களில் சொல்லப்படுகிறது, எனவேதான் கல்வி கற்றுக்கொடுக்கும் கடவுளாக ஹயக்ரீவர் வணங்கப்படுகிறார்,

முதுகில் தூக்கி கட்டுங்கள்


ஒரு  நாட்டில் ஒரு அமெரிக்கன், ஒரு சீனன், ஒரு இந்தியன் மூவரும்
 ஒரு குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு அவர்களுக்கு ஆளுக்கு   50
 சவுக்கடிகள்,தண்டனையாக  அளிக்கப்பட்டது,  ஆனால், அதற்கு முன்,
 அவர்கள் வேண்டும்  'இரண்டு'  கோரிக்கைகள் செய்யப்படும் என 
சொல்லப்பட்டது..!


முதலில்  அமெரிக்கன்,

"எனக்கு  50 சவுக்கடிகளில் பாதியாக குறைத்து 25 ஆக கொடுங்கள்
என்றான். ஒப்புக்கொள்ளப்பட்டது. இரண்டாவது என்ன? என்று
 கேட்டனர், 
"என் முதுகில்  ஒரு பெரிய தலையணை ஒன்றை கட்டுங்கள்

என்றான், அவ்வாறே செய்யப்பட்டது பத்து சவுக்கடியில்  தலையணை 
கிழிந்து அவன்  பலமான காயத்துக்குஆளானான்.
அடுத்து  சீனன்.

"எனக்கும் 50 சவுக்கடியில் பாதியாக குறைத்து 25 அடி கொடுங்கள்
 என்றான்,ஒப்புக்கொள்ளப்பட்டது,  இரண்டாவது என் முதுகில் இரண்டு
 தலையணைகளை கட்டுங்கள் என்றான் அவ்வாறே செய்யப்பட்டது.
15 சவுக்கடிகளில்  தலையணைகள் கிழிந்து அவன் முதுகு பிளந்தது. 
அடுத்து  இந்தியன்.
அமைதியாக சொன்னான்.எனக்கு 50 சவுக்கடியை, 100ஆக உயர்த்துங்கள்
 என்றான். அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியுடன்  அவனை பார்த்தனர்
ஒப்புக்கொள்ளப்பட்டது, இரண்டாவது என்ன?

என்று  கேட்கப்பட்டது,  சொன்னான் "எனக்கு தண்டனை கொடுத்த

 நீதிபதியை  என் முதுகில் தூக்கி கட்டுங்கள் ! என்றான்!!!

சதுரகிரி மலை அருவிகள்


சிவலிங்கம் தினைமாவில்


சதுரகிரி மலை அருவி

  தாணிப்பாறை அருகே
 தாணிப்பாறை



தினைமாவில் பக்தர்கள் சிவலிங்கம் செய்கிறார்கள் 


கோரக்கர் குகை அருகில் தினைமாவு, வெல்லம், தேன், நெய் கலந்து லிங்கம் செய்து வழிபடுகிறார்கள். பின்பு தினைமாவில் செய்த லிங்கத்தையே பிரசாதமாக வழங்குகிறார்கள் 

இன்டர்வியூ

ஒரு இன்டர்வியூ. மேனேஜர், வேலை கேட்டு வந்தவரிடம், இங்க பாருங்க.. நான் இப்ப உங்க கிட்ட சொல்லும் வார்த்தைகளுக்கு ஆப்போசிட் வார்த்தையைச் சொல்லனும்.. ஓகேவா?
வேலை கேட்டு வந்தவர்: சரி முயற்சிக்கிறேன் சார்.!!
மேனேஜர்: நல்லது..
வே.கே.வ: கெட்டது..! 
மேனேஜர்: நான் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை..!
வே.கே.வ நான் இப்பொழுது தான் ஆரம்பித்தேன்..!
மேனேஜர்: இல்லைங்க..
வே.கே.வ ஆமாங்க..!
மேனேஜர்: நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டிருக்கீங்க..! 
வே.கே.வ நீங்க சரியா புரிஞ்சிக்கிட்டிருக்கீங்க..! 
மேனேஜர்: நிறுத்து உன் பேச்சை..! 
வே.கே.வ: தொடங்கு உன் பேச்சை..! 
மேனேஜர்: இப்போ.. வாயை மூடுறியா..? இல்லையா..? 
வே.கே.வ: இப்போ வாயை திறக்கிறியா.? இல்லையா..? 
மேனேஜர்: நிறுத்துடா! 
வே.கே.வ: தொடங்குடா! 
மேனேஜர்: கெட் அவுட்! 
வே.கே.வ: கம் இன்! 
மேனேஜர்: ஐயோ ஆண்டவா.! 
வே.கே.வ: ஆஹா பிசாசே..! 
மேனேஜர்: யு ஆர்.. ரிஜெக்டட்..! 
வே.கே.வ: ஹய்யா !!! ஐ ஆம் செலக்டட்..

உன்னைக் காதலிப்பாள்


உயரமான மலை உச்சியில் நின்றுகொண்டு கைகளை நீட்டியபடி ஒருவன் கடவுளிடம் கேட்டுக் கொண்டிருந்தான்.

 கடவுளே!! என்  மனைவியை ஏன்  இத்தனை அழகோடு படைத்தாய் ?

வானிலிருந்து ஒரு பதில் வந்தது. அப்போது தானே நீ அவளைக் காதலிப்பாய் மகனே ?

திரும்பவும் இவன் கேட்டான் -   நன்றாக  சமைக்கத் தெரிந்தவளாக அவளை ஏன் படைத்தாய் ?

நீ அவளைக் காதலிக்கத்தான். ..

பொறுப்போடு வீட்டைப் பார்த்துக் கொள்ளும் நல்ல குணத்தை அவளுக்கு ஏன் கொடுத்தாய் ?

அதுவும் நீ அவளைக் காதலிக்கத்தான் மகனே.

எல்லாம் சரி. அவளை ஏன் இவ்வளவு முட்டாளாகப் படைத்தாய் ?- என லேசான நகைப்போடு இவன் கேட்டு முடித்ததும், சீரியஸாக குரல் சொன்னது -

அப்போதுதானே அவள் உன்னைக் காதலிப்பாள்.

பொய் சொன்னா பளார்



அது ஒரு லை டிடெக்டர் ரோபோட். யார் பொய் சொன்னாலும் சப்புன்னு கன்னத்தில் அறைந்து விடும். அந்த ரோபோட் மெஷினை வாங்கி வந்தார் ''அப்பா''.

பிறகு அன்று அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே நடந்த ஒரு உரையாடல்.


அப்பா - மகனே பள்ளி நேரத்தில் எங்கே போயிருந்தே...?

மகன் - அப்பா நான் பள்ளியில்தான் இருந்தேன் அப்பா.

ரோபோட்(மகனுக்கு) - "பளார்"

மகன் - இல்லை அப்பா, நான் எனது நண்பனின் வீட்டில் டிவிடி பார்த்தேன்.

அப்பா - என்ன பார்த்தே...?


மகன் - குங்பூ பாண்டா

ரோபோட்(மகனுக்கு) - "பளார்"

மகன் - சரி. சரி.. ஆபாசப் படம் பார்த்தேன்.

அப்பா - என்னது ஆபாசப் படமா.. உன் வயசுல. ஆபாசப் படம்னா என்ன என்றே எனக்குத் தெரியாது தெரியுமா...?

ரோபோட் (அப்பாவுக்கு) - "பளார்"

அம்மா - ஹாஹாஹாஹா.. அவன் உங்க பிள்ளைதானே. பின்ன எப்படி இருப்பான்.?

ரோபோட் (அம்மாவுக்கு) - "பளார்"

பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் திருபட்டூர்






















திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 21 கி.மீ  தொலைவில்   உள்ளது திருபட்டூர்.திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில, சமயபுரம் வழியாக சென்று திருபட்டூர் அடையலாம், வியாழகிழமைகள் தோறும் விசேசமாக வணங்கப்பட்டு வருகிறது, வியாழக்கிழமைகள் மற்றும் திருவிழா காலங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.  பிரம்மபுரீஸ்வரர்     கோவில்  ஒருவரது தலைஎழுத்தை மாற்றும் கோவில் என்று சொல்லபடுகிறது. மேலும் தலையில் எழுதியிருந்தால் மட்டுமே ஒருவர் இந்த கோவிலுக்கு செல்ல முடியும் என்று நம்பப்படுகிறது .பிரம்மனுக்கு அருள் புரிந்ததால் சிவன் பிரம்மபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.  பிரம்மபுரீஸ்வரர் ஒரு சுயம்பு மூர்த்தி. கிழக்கு நோக்கிய மூலவர் போலவே,  சன்னதியின்  வெளி பிரகாரத்தில் தெற்கில், கிழக்கு நோக்கி தனி பிரம்மன் சன்னதி உள்ளது. தமிழகத்தில் (வட இந்தியாவில் பிரம்மனுக்கு மட்டும் தனியாக சன்னதிகள் உள்ளன) திருபட்டூரில்  மட்டுமே பிரம்மன் தனி சன்னதியுடன் காணபடுகிறார். திருபட்டூரில் உள்ள பிரம்மன் தலை எழுத்தை மாற்றும் சக்தி உடையவராக விளங்குகிறார். படைப்பாற்றல் உள்ள பிரம்மன் ஒரு முறை தனக்கும் ஐந்து தலை ஈசனுக்கும்   ஐந்து தலை என்று அகங்காரத்தில் இருந்தாராம். அதனால் ஈசனை மதிக்காமல்  இருந்தார்.    ஈசன் பிரம்மனுடைய அகங்காரத்தை அழிக்க நினைத்து ஐந்து தலைகளில் ஒரு தலையை கொய்து    விடுகிறார். அன்றிலிருந்துதான் பிரம்மன் நான்குமுகன் என அழைக்கப்படுகிறார், இதனால் பிரம்மன் படைப்பாற்றலை இழக்கிறார். அதனால் ஈசனிடம் சாப விமோசனம் வேண்டி பிரம்மன் திருபட்டூரில் ''பன்னிரு'' சிவ லிங்கங்களை பிரதிஷ்டை செய்து ஈசனை வழிபட்டு வேண்டுகிறார்.  அது கண்டு மகிழ்ந்த  ஈசன் பிரம்மனுக்கு மீண்டும் படைப்பாற்றலை மீண்டும்  வழங்குகிறார்.   மேலும், ஈசன் இங்கு வந்து பிரம்மனை வணங்குபவர்களுக்கு அவர்களது தலை எழுத்தை மாற்றி மங்களகரகமாக்கும்  ஆற்றலை வழங்குகிறார்.  திருபட்டூரில் உள்ள பிரம்மனின் பார்வை பட்டாலே போதும் சகல தோஷங்களும் விலகி நல்வாழ்வு அமையும்.   ஆனால் விதி இருப்பவர்கள் மட்டுமே இந்த தலத்திற்கு வர முடியும் என்றும் நம்பபடுகிறது.இந்த கோவிலில் முதலில் ஈசன்,பின்பு பிரம்மன், அம்பாள் என்று வணங்கிவிட்டு 36 நெய் தீபங்கள் ஏற்றி 9 முறை ஆலயத்தை வலம் வந்தால் சகல வித தோஷங்களும் விலகி விடும் என்று நம்பபடுகிறது. ஏழாம் எண்  ஆதிக்கத்தில் பிறந்தவர்களும் ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் பாதிக்கப்பட்டவர்களும் இந்த கோவிலில் வழிபட்டால் விசேஷ பலன்கள் உண்டாகும் என்று நம்பபடுகிறது. இங்கு ஜாதகங்களை கொண்டு வந்து பிரம்மன் காலடியில் வைத்து வணங்கி எடுத்து செல்கிறார்கள், இது பற்றி ஆலயத்துள்ளோரிடம் கேட்டதற்கு ஜாதகம் இல்லாவிட்டாலும் ராசி நட்சத்திரங்களை கூறி அர்ச்சனை செய்துகொள்ளலாம் என்று கூறினார்கள்,  கொடிமரத்தின் அருகில் உள்ள நந்திக்கு மேல் உத்திராட்சத்தினால் ஆன பந்தல் அமைத்துள்ளார்கள்.  ஈசன்  அம்பாளுடன் காட்சி தந்து பிரம்மனுக்கு இழந்த சம்பத்தை  மீட்டு  கொடுத்ததினால்  அம்பாளுக்கு  பிரம்மசம்பத் கௌரி என்று பெயர். மங்கள நாயகி என்று அம்பாளுக்கு மற்றொரு பெயரும் உண்டு .பிரம்மன் இங்கு தாமரை மேல் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.பிரம்மனுக்கு இங்கு எப்பொழுதும் மஞ்சள் அலங்காரம் மட்டுமே செய்கிறார்கள்.  பிரம்மன் வணங்கிய 12 லிங்கங்களில் பிரம்மபுரீஸ்வரர் தான் மூலவர் . இன்னும் 3 லிங்கங்கள் மூலவரின் வெளி  பிராகரத்தில் உள்ளது .அவை பழமலை நாதர் ,பாதாள லிங்கம் ( பள்ளத்தில் உள்ளது ) மற்றும் சுத்ததாநேஸ்வரர்.ஐந்தாவது லிங்கம் தாயுமானவர் ,அம்பாள் சன்னதிக்கு வெளியில் உள்ளது .அம்பாள் சன்னதிக்கு பக்கத்தில் வெளியில் நந்தவனம்  உள்ளது அங்கு தான் மீதம் உள்ள ஏழு லிங்கங்கள் உள்ளது.அவை மண்டூக நாதர் ஏகாம்பரேஸ்வரர் அருணாச்சலேஸ்வரர்,ஜம்புகேஸ்வர,காளத்தி நாதர், சப்த்ரிஷீஸ்வர்ர் என்பதாகும் .இங்கு தான் பிரம்ம தீர்த்தம் உள்ளது  இங்கு முருகன் வந்து வழிபட்ட ஈசன் கந்தபுரீஸ்வரர் என்ற பெயரில் உள்ளார்.முருகன் அசுரர்களை அழிக்க செல்லும் முன் இங்கு லிங்க ப்ரிதஷ்டை செய்து ஈசனை வழிபட்டு படை திரட்டி சென்றதாக வரலாறு.இதனால் திருபடையூர் என்ற பெயர் பின்பு மருவி திருபட்டூர்  ஆனது என்கிறார்கள் .இந்த கோவிலின் சிறப்புகளில் ஓன்று பங்குனி மாதம் 3 நாட்களில் சூரிய ஒளி சரியாக ஏழு நிமிடத்திற்கு சிவ லிங்கம் மேல் விழுகிறது. இங்கு மூலவரை தரிசிக்க ஏழு நிலைகளை கடந்து செல்லவேண்டும்    அப்பொழுதுகூட   இறைவனை   இயற்கையான வெளிச்சத்தில்  நன்றாக காணுமாறு உள்ளது.. வியாழ கிழமைகள் பௌர்ணமி நாட்கள் மற்றும் சதய நட்சத்திர தினங்களில் இங்கு மக்கள் அதிக அளவில் வருகிறார்கள். திருபட்டூரின் இன்னொரு சிறப்பு பதஞ்சலி முனிவர் ஜீவசமாதி உள்ளது. இங்கு பக்தர்கள் அமர்ந்து தியானம் செய்கிறார்கள், பிரம்மன் பிரசாதமாக நீரில் நனைக்கப்பட்ட மஞ்சள் வழங்கப்படுகிறது.